ரியாத்தில் பேச்சாலும், பாட்டாலும், தாளத்தாலும் வசீகரித்த டி. ராஜேந்தர்

விழாவில் நகைச்சுவையாகவும் அங்கதமாகவும் உரையாற்றிய இனியவன் தற்காலத் தமிழ் திரைப் பாடல்களைத் தனக்கே உரிய பாணியில் கேலி செய்து பேசினார். 'குழந்தை பாடும் தாலாட்டு' என்ற டி. ராஜேந்தரின் பாடலைக் கேட்டு கண்ணதாசனே வியந்து பாராட்டினார் என்றும் இனியவன் கூறினார்.
பின்னர் பேசிய டி. ராஜேந்தர் தனது பேச்சாலும், பாட்டாலும், தாளத்தாலும் பார்வையாளர்களை வசீகரித்தார். தனது தொடக்கக் கால திரைப் பாடல்களைக் குறிப்பிட்டுப் பேசிய அவர், இலக்கிய நயத்துடன் இத்தனை சிறப்பாக எழுதியிருந்தாலும், டண் டணக்கா என்று பாட்டு போட்டால் தான் அது அதிக மக்களை கவர்கிறது. அதிகம் 'பார்வை' கிடைக்கிறது. 'டண் டணக்கா' என்று தன்னை விமர்சிப்பவர்களும் அதை ரசிக்கவே செய்கிறார்கள் என்று குறிப்பிட்டார். விரைவில் திரையுலகில் 'ஒருதலை காதல்' படத்தின் மூலம் தனது இரண்டாவது இன்னிங்ஸை தொடங்க இருப்பதாகவும் அதன் பொருட்டே இறையருளை நாடி சவூதி அரேபியா வந்ததாகவும் தெரிவித்த அவர் தனது முயற்சியில் வெல்வதற்காக பிரார்த்தனை செய்யும்படி ரசிகர்களைக் கேட்டுக் கொண்டார்.
அதன் பிறகு ரியாத் வாழ் தமிழர்கள் கலந்து கொண்ட பேச்சரங்கம், அயல்நாட்டுப் பணியினால் அதிக ஆதாயம் அடைவது வந்த நாடா? சொந்தநாடா? வந்தவரா? உறவினரா? என்ற தலைப்பில் நடைபெற்றது.
ரியாத் தமிழ்ச் சங்க நிர்வாகிகள் ஹைதர் அலி, பஃக்ருத்தீன் இப்னுஹம்துன், கே.வி.ராஜா, ஜோஸ் அலெக்சாண்டர், மாலிக் இப்ராஹிம், இம்தியாஸ், லக்கி ஷாஜஹான், ஷரீஃப், ஜவஹர் சவரிமுத்து, ஷஃபி, அபுல்ஹசன், சஜ்ஜாவுதீன், ஷாகுல் ஹமீது, முஹையத்தீன் கஸ்ஸாலி, சிக்கந்தர், மதி, ராம், ராஜேஷ் உள்ளிட்டோர் நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை செய்திருந்தனர்.
இந்த விழாவில் ஆயிரத்திற்கும் அதிகமான ரியாத் வாழ் தமிழர்கள் தங்கள் குடும்பத்தோடு கலந்து கொண்டு சிறப்பித்தனர்.












Click it and Unblock the Notifications