துபாய் ஈமான் அமைப்பு சார்பில் நாளை ரத்ததான முகாம்.. பங்கேற்பவர்களுக்கு அடையாள அட்டை அவசியம்
துபாயில் ஈமான் அமைப்பு சார்பில் நாளை ரத்ததான முகாம் நடைபெறும் அறிவிக்கப்பட்டுள்ளது.
துபாய்: துபாயில் ஈமான் அமைப்பு சார்பில் நாளை ரத்ததான முகாம் நடைபெறும் அறிவிக்கப்பட்டுள்ளது. ரத்த தான முகாமில் பங்கேற்பவர்களுக்கு அமீரக அடையாள அட்டை அவசியம் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
துபாய் ஈமான் கல்சுரல் செண்டர் தனது தொழிலாளர்களுக்கு நேற்று முன்தினம் இலவச மருத்துவ முகாம் நடத்தியது. இதில் இந்திய துணைத் தூதரக அதிகாரி சுமதி வாசுதேவ் கலந்துகொண்டார்.

இந்நிலையில் ஈமான் கல்சுரல் சென்டர் சார்பில் நாளை செவ்வாய்க்கிழமை காலை 9 மணிக்கு துபாய் ரசிதியா அரேபியா டாக்சி அலுவலகத்தில் ரத்ததான முகாமை நடத்த இருக்கிறது. அமீரக சுகாதாரத்துறையுடன் இணைந்து இந்த ரத்ததான முகாம் நடத்தப்படுகிறது.
இந்த ரத்ததான முகாமில் பங்கேற்க விரும்புபவர்கள் 050 51 96433, 052 7778341 ஆகிய எண்களில் தொடர்பு கொண்டு முன் பதிவு செய்யலாம். மேலும் ரத்த தான முகாமில் பங்கேற்க விரும்பும் நபர்க்ள கண்டிப்பாக அமீரக அடையாள அட்டை கொண்டு வரவேண்டும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.












Click it and Unblock the Notifications