துபாயில் 100க்கும் மேற்பட்ட இளந்தளிர்கள் பங்கேற்ற இந்திய இசை, நடன நிகழ்ச்சி
துபாய்: துபாய் டிடிஎஸ் இவெண்ட்ஸ் சார்பில் இந்திய கிளாசிக்கல் இசை மற்றும் நடன நிகழ்ச்சி கடந்த வெள்ளிக்கிழமை மாலை இந்திய துணைத் தூதரக அரங்கில் நடைபெற்றது.

நிகழ்ச்சிக்கு சமூகசேவகரும், டிடிஎஸ் இவெண்ட்ஸின் நிர்வாகியுமான டாக்டர் ஜெயந்திமாலா சுரேஷ் தலைமை வகித்தார். முன்னதாக தமிழக பாரம்பரிய முறைப்படி குத்துவிளக்கு ஏற்றப்பட்டு விழா துவங்கியது. அதனைத் தொடர்ந்து இந்திய தேசிய கீதம், தமிழ்த்தாய் வாழ்த்து பாடப்பட்டது. ஏ.முஹம்மது தாஹா வரவேற்புரை நிகழ்த்தினார்.

சிறப்பு விருந்தினராக இந்திய துணைத் தூதரக அதிகாரி முரளீதரன் கலந்து கொண்டு பேசினார். அவர் தனது உரையில், இந்திய துணைத் தூதரகம் இந்திய கலைகளை மக்களிடம் கொண்டு சேர்க்கும் வண்ணம் பல்வேறு நிகழ்ச்சிகளுக்கு தொடர்ந்து ஏற்பாடு செய்து வருகிறது. இந்த நிகழ்ச்சியில் இளம் தளிர்கள் தங்களது இசை மற்றும் நடன திறமைகளை காட்டி வருகின்றனர். எதிர்கால இசையின் எதிர்காலமே நீங்கள் தான் எனக் குறிப்பிட்டார்.

நிகழ்ச்சியில் சிறப்பு விருந்தினர்களாக பங்கேற்ற இந்திய துணைத் தூதரக அதிகாரி ரத்னமாலா, சிறந்த வெளிநாடு வாழ் இந்தியருக்கான பிரவாஸி பாரதிய சம்மன் விருது பெற்ற கே. குமார், துபாயின் முதல் தமிழ் வானொலியான ரேடியோ சலாம் 106.5 எப்.எம். துணைத் தலைவர் ராஜேஷ் குமார், துபாய் அரசின் குவாலிட்டி விருது பெற்ற பவர் குரூப் மேலாண்மை இயக்குநர் முகம்மது உசேன், தமிழகத்திலிருந்து வந்திருந்த மனநல ஆலோசகர் குர்ஷித் பேகம் ஆகியோர் பூங்கொத்து வழங்கியும், நினைவுப் பரிசு வழங்கியும் கௌரவிக்கப்பட்டனர். பாடல் ஆசிரியை சந்திரா கீதாகிருஷ்ணன், நடன ஆசிரியை கவிதா பிரசன்னா ஆகியோர் நினைவுப் பரிசு வழங்கி பாராட்டப்பட்டனர்.

நிகழ்ச்சியில் 100க்கும் மேற்பட்ட மாணவ, மாணவியர் தங்களது கலைத்திறமையை வெளிப்படுத்தினர். கீதாகிருஷ்ணன் நன்றியுரை நிகழ்த்தினர். மீரா கிரிவாசன் நிகழ்ச்சியை தொகுத்து வழங்கினார். நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை பிரசன்னா, பாலா, சுந்தர், விஜயேந்திரன், பாலாஜி, சக்ரவர்த்தி உள்ளிட்ட குழுவினர் செய்திருந்தனர்.
-
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள்












Click it and Unblock the Notifications