14ம் தேதி துபாயில் மீலாத் விழாவை முன்னிட்டு கவிதை, பேச்சு, கிராத் போட்டி
துபாய்: மீலாத் விழாவை முன்னிட்டு துபாய் மெய்ஞ்ஞான சபையில் பல்வேறு போட்டிகள் நடத்தப்பட உள்ளது.
துபாய் ஏகத்துவ மெய்ஞ்ஞான சபையில் மீலாத் பெருவிழாவினை முன்னிட்டு பல்வேறு போட்டிகள் 14.11.2014 அன்று காலை தேரா கோட்டைப் பள்ளி அருகில் நடைபெற இருக்கிறது.

கிராஅத் ஓதும் போட்டி, முஹம்மது முஸ்தபா ரசூல் (ஸல்) அவர்களின் வரலாறு குறித்த பேச்சுப் போட்டி, மீலாத் நபி குறித்த ஒரு பக்க அளவிலான கவிதைப் போட்டி, இஸ்லாமிய பாடல் மற்றும் அரபிக் பைத் ஓதும் போட்டி உள்ளிட்ட போட்டிகள் நடைபெற இருக்கின்றன.
பள்ளி மாணவ, மாணவியர் இப்போட்டிகளில் பங்கேற்கலாம். இந்த போட்டிகளில் பங்கேற்க விரும்புபவர்கள் வரும் 12ம் தேதிக்குள் தங்கள் பெயரை பதிவு செய்யுமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.
தொடர்புக்கு:
அஹமது இம்தாதுல்லா : 055 524 8000
சாகுல் ஹமீது : 050 585 9681
மதுக்கூர் ஹிதாயத்துலா : 050 77 52 737












Click it and Unblock the Notifications