பஹ்ரைன் திருவள்ளுவர் சமூக மற்றும் கலாச்சார சங்கம் சார்பில் பள்ளி மாணவர்களுக்கு பாராட்டு விழா
பஹ்ரைன் திருவள்ளுவர் சமூக மற்றும் கலாச்சார சங்கம் சார்பில் 10 மற்றும் 12ஆம் வகுப்பு பள்ளி மாணவர்களுக்கு பாராட்டு விழா நடைபெற்றது.
மனாமா: பஹ்ரைன் திருவள்ளுவர் சமூக மற்றும் கலாச்சார சங்கம் சார்பில் 10 மற்றும் 12ஆம் வகுப்பு பள்ளி மாணவர்களுக்கு பாராட்டு விழா நடைபெற்றது.
பஹ்ரைனில் திருவள்ளுவர் சமூக மற்றும் கலாச்சார சங்கம் சார்பில் 10 மற்றும் 12 ஆம் வகுப்பு தேர்வுகளில் பள்ளியில் முதலிடம் பிடிக்கும் மாணவர்களுக்கு ஆண்டுதோறும் பாராட்டு விழா நடத்தப்படுகிறது.

அதன்படி தொடர்ந்து 4வது ஆண்டாக இந்த ஆண்டு நேற்று பள்ளியில் முதலிடம் பிடித்த தமிழ் மாணவர்களுக்கு பாராட்டு விழா நடத்தப்பட்டது. இன்டியன் கிளப் ஆடிட்டோரியத்தில் இந்த விழா நடத்தப்பட்டது.
பஹ்ரைன் திருவள்ளுவர் சமூக மற்றும் கலாச்சார சங்கம் சார்பில் பள்ளி மாணவர்களுக்கு பாராட்டு விழா https://t.co/AaoXJFYaMc pic.twitter.com/5yCDGbUXbY
— Oneindia Tamil (@thatsTamil) June 1, 2018
அப்போது சிபிஎஸ்இ பாடத்தில் 10 மற்றும் 12ஆம் வகுப்பு தேர்வில் முதலிடம் பிடித்த மாணவர்களுக்கு கோப்பைகள், மெடல்கள், மற்றும் சான்றிதழ்கள் வழங்கப்பட்டன. இதைத்தொடர்ந்து கல்சுரல் நிகழ்ச்சிகளும் வினாடிவினா நிகழ்ச்சிகளும், ஊக்கமூட்டும் உரைகளும் நிகழ்த்தப்பட்டன.












Click it and Unblock the Notifications