துபாய்: மனதைக் கவர்ந்த தமிழ்க் குழந்தைகளின் நடன நிகழ்ச்சி
துபாய்: துபாயில் மனவளர்ச்சி குன்றிய குழந்தைகளின் நடன நிகழ்ச்சியை பல்வேறு நாடுகளைச் சேர்ந்த ரசிகர்கள் கண்டு ரசித்து பாராட்டினர்.
துபாயில் வருடந்தோறும் குளோபல் வில்லேஜ் உலக சுற்றுலா பார்வையாளர்களை கவரும் வண்ணம் அமைக்கப்பட்டுள்ளது. இதில் இந்தியன் பெவிலியன் அரங்கமும் ஏற்படுத்தப்பட்டுள்ளது.

தமிழ் குழந்தைகள்
கடந்த வெள்ளிக்கிழமை மாலை இந்தியன் பெவிலியனில் பிரசித்தம் நடனக்குழுவில் இடம்பெற்றுள்ள தமிழ்க் குழந்தைகளின் நடன நிகழ்ச்சி பல்வேறு நாடுகளைச் சேர்ந்த பார்வையாளர்களை வெகுவாகக் கவர்ந்தது.

பஞ்சாபிய நடனம்
மேலும் மனவளர்ச்சி குன்றிய குழந்தைகளின் சிறப்பு நடன நிகழ்ச்சி மனதைக் கொள்ளை கொள்வதாக அமைந்திருந்தது. பஞ்சாபிய நடன நிகழ்ச்சியும் நிகழ்ச்சிக்கு மேலும் மெருகூட்டியது.

வயலட் தேவதைகள்
வண்ண வண்ண உடையணிந்து வயலட் தேவதைகளாய் பெண் குழந்தைகள் நடனமாடினர்.

குவிந்த பார்வையாளர்கள்
வருடத்தின் முதல் வெள்ளிக்கிழமை மற்றும் துபாய் ஷாப்பிங்க் ஃபெஸ்டிவல் துவங்கிய காரணத்தால் பார்வையாளர்களின் கூட்டம் அளவுக்கதிகமாக இந்தியன் பெவிலியனில் காணப்பட்டது.

பார்வையாளர்கள் பாராட்டு
குளிரையும் பொருட்படுத்தாது குடும்பத்தினருடன் வருகை தந்து நிகழ்வினை ரசித்தனர். அனைவருக்கும் இருக்கை வசதி செய்ய இயலாத காரணத்தால் பலர் நின்று கொண்டே நிகழ்வினை ரசித்தனர்.

ரசிகர்களுக்கு நன்றி
வாழ்த்திய அனைவருக்கும் பிரசித்தம் குழுவின் தலைமை நிர்வாகி கவிதா பிரசன்னா நன்றி தெரிவித்துக் கொண்டதுடன் வாய்ப்பினை வழங்கிய இந்தியன் பெவிலியன் நிர்வாகத்தினருக்கும் நன்றி தெரிவித்துக் கொண்டார்.












Click it and Unblock the Notifications