திமுக ஆட்சியில் வெளிநாடு வாழ் தமிழர்கள் வாரியம் உருவாக்குவோம்- ஷார்ஜாவில் ஸ்டாலின்
திமுக ஆட்சி அமைந்தவுடன் வெளிநாடு வாழ் தமிழர்கள் வாரியம் உருவாக்கப்படும் என்று திமுக செயல் தலைவர் ஸ்டாலின் கூறியுள்ளார்.
ஷார்ஜா: சென்னையில் நேற்று மழையில் நனைந்தேன், இன்று ஷார்ஜாவில் உங்கள் அன்பு மழையில் நனைகிறேன் என்று ஸ்டாலின் கூறியுள்ளார். திமுக ஆட்சி அமைந்தவுடன் வெளிநாடு வாழ் தமிழர்கள் வாரியம் உருவாக்கப்படும் எனவும் தெரிவித்துள்ளார்.
ஷார்ஜாவில் நடைபெற்ற 36ஆவது சர்வதேச புத்தக திருவிழாவில் கலந்துகொண்ட திமுக செயல்தலைவர் ஸ்டாலின்,
தனக்கு அன்பளிப்பாக வழங்கப்பட்ட 1000 புத்தகங்களை சார்ஜ புத்தக ஆணைக்குழுவிற்கு அன்பளிப்பாக வழங்கினார்.

விழாவில் பேசிய ஸ்டாலின், ஷார்ஜாவின் அரசர் சுல்தான் பின் முகமது அல் காசிமி வரலாற்று ஆய்வு மனப்பான்மையும், இலக்கிய ஆர்வம் உடையவராகவும் இருப்பதால் புத்தக ஆணைக்குழுவை உருவாக்கி, புத்தகத் திருவிழாவை நடத்துவது மட்டுமல்லாமல் ஷார்ஜா மண்ணின் மைந்தர்களின் வீட்டுக்கு அரசு செலவிலேயே ஓர் நூலகத்தை வழங்கியிருக்கிறார் எனப் பாராட்டினார்.
ஷார்ஜா மக்கள் காட்டும் அன்பு, அன்னை மடியில் இருப்பது போன்ற உணர்வைத் தருவதுபோல் உள்ளதாக நெகிழ்ந்த ஸ்டாலின், உங்களின் தமிழ் உணர்வுக்குத் தலை வணங்குகிறேன்.
ஷார்ஜா சுல்தான் ஒரு வகையில் தமிழர்களுக்கு நெருக்கமானவர். திராவிட மொழிக் குடும்பத்தின் அங்கமாகிய மலையாள மொழியைப் பேச அவருக்குத் தெரியும். மலையாளம் தெரியும் என்னும்போது தமிழுக்கும் அவர் நெருக்கமாகிவிடுகிறார் என விளக்கமளித்தார்.
எந்த மொழியாக இருந்தாலும், எந்த இனமாக இருந்தாலும் தன் மொழி மற்றும் இனத்தின் உரிமைகளைப் பாதுகாக்க, பிறரது ஆதிக்கத்துக்கு ஆட்படாமல் சுயமரியாதையுடன் உயர்ந்து நிற்க முயற்சிப்போர் அனைவருமே திராவிட இயக்கத்துக்கு நெருக்கமானவர்கள்தான். அந்த வகையில் தன் மண்ணின் பெருமையை அறிவு தீபம் ஏற்றி வெளிச்சமிட்டுக் காட்டும் ஷார்ஜா சுல்தான் போற்றுதலுக்குரியவர்.
கடந்த தி.மு.க ஆட்சியின் போது வெளிநாடு வாழ் தமிழர்களின் நலனுக்காக 'வெளிநாடுவாழ் தமிழர்கள் வாரியம்' ஒன்றை உருவாக்க முயற்சி மேற்கொள்ளப்பட்டது. மீண்டும் திமுக ஆட்சி அமைந்தவுடன் வெளிநாடு வாழ் தமிழர்கள் வாரியம் உருவாக்கப்படும். அப்படி அமைக்கப்படும் வாரியத்தில் அமீரகத்திலும் உங்கள் சார்பில் ஒரு பிரதிநிதி இருப்பார் எனவும் உறுதியளித்தார்.
-
இதுக்கு மேல கடன் வாங்க முடியாது.. கஜானா காலி.. தத்தளிக்கும் தமிழக வெற்றிக் கழகம்.. அப்போ விஜய்? -
வளைகுடா வளையம்: ஈரானிடம் இந்தியா வைத்த 'செக்'.. தவிப்பில் கச்சா எண்ணெய்! டெல்லி மெகா முடிவு -
டிராகனின் வெள்ளி வேட்டை.. சீனாவைச் சுழற்றியடிக்கும் சில்வர் ஜுரம்.. வெள்ளி இனி குட்டித்தங்கம்.. ஏன்? -
நோட் பண்ணுங்க! கலைஞர் மகளிர் உரிமைத் தொகைக்கு 'செக்' - ரேஷன் கார்டில் இதை கவனிக்கலைன்னா பணம் கட்? -
கழுத்தறுத்த பாஜக..சரண்டராகும் சரத்குமார்! பஞ்சாயத்தை கூட்டிய நாட்டாமை குடும்பத்தார்! பரபர பாலிடிக்ஸ் -
பென்டகன் பிளான் ரெடி.. ஈரானுக்குள் நுழையும் அமெரிக்க வீரர்கள்! கதை மொத்தமா முடியுது! -
Siragadikka Aasai Promo: விஜயாவுக்கு எதிராக ஆதாரத்தை கண்டுபிடித்த முத்து- மீனா.. சிந்தாமணிக்கு ஆப்பு! செம சம்பவம் -
பாஜக நட்சத்திர பேச்சாளர் பட்டியலில் இருந்து தமிழிசை பெயர் நீக்கம்.. பின்னணி இதுதானா? -
தப்புக் கணக்கான ராதிகாவின் முடிவு? மீண்டும் சமத்துவ மக்கள் கட்சியை தொடங்குகிறாரா சரத்குமார்? -
கெத்து காட்டும் இந்தியா.. ஹார்முஸ் ஜலசந்தியை கடக்க இந்திய கப்பல்களுக்கு தனிப்பாதை கொடுத்த ஈரான்.. செம -
நன்றியய்யா நன்றி.. ஓட்டல் ஓனர்கள் வயிற்றில் பால் வார்த்த அறிவிப்பு! இனி சிலிண்டர் தட்டுப்பாடு இல்லை! -
துபாய் உட்பட.. மொத்த வளைகுடா நாடுகளிலும் குடிநீர் பஞ்சம் ஏற்படும் அபாயம்! ஈரான் எச்சரிக்கை!












Click it and Unblock the Notifications