திமுக ஆட்சியில் வெளிநாடு வாழ் தமிழர்கள் வாரியம் உருவாக்குவோம்- ஷார்ஜாவில் ஸ்டாலின்
திமுக ஆட்சி அமைந்தவுடன் வெளிநாடு வாழ் தமிழர்கள் வாரியம் உருவாக்கப்படும் என்று திமுக செயல் தலைவர் ஸ்டாலின் கூறியுள்ளார்.
ஷார்ஜா: சென்னையில் நேற்று மழையில் நனைந்தேன், இன்று ஷார்ஜாவில் உங்கள் அன்பு மழையில் நனைகிறேன் என்று ஸ்டாலின் கூறியுள்ளார். திமுக ஆட்சி அமைந்தவுடன் வெளிநாடு வாழ் தமிழர்கள் வாரியம் உருவாக்கப்படும் எனவும் தெரிவித்துள்ளார்.
ஷார்ஜாவில் நடைபெற்ற 36ஆவது சர்வதேச புத்தக திருவிழாவில் கலந்துகொண்ட திமுக செயல்தலைவர் ஸ்டாலின்,
தனக்கு அன்பளிப்பாக வழங்கப்பட்ட 1000 புத்தகங்களை சார்ஜ புத்தக ஆணைக்குழுவிற்கு அன்பளிப்பாக வழங்கினார்.

விழாவில் பேசிய ஸ்டாலின், ஷார்ஜாவின் அரசர் சுல்தான் பின் முகமது அல் காசிமி வரலாற்று ஆய்வு மனப்பான்மையும், இலக்கிய ஆர்வம் உடையவராகவும் இருப்பதால் புத்தக ஆணைக்குழுவை உருவாக்கி, புத்தகத் திருவிழாவை நடத்துவது மட்டுமல்லாமல் ஷார்ஜா மண்ணின் மைந்தர்களின் வீட்டுக்கு அரசு செலவிலேயே ஓர் நூலகத்தை வழங்கியிருக்கிறார் எனப் பாராட்டினார்.
ஷார்ஜா மக்கள் காட்டும் அன்பு, அன்னை மடியில் இருப்பது போன்ற உணர்வைத் தருவதுபோல் உள்ளதாக நெகிழ்ந்த ஸ்டாலின், உங்களின் தமிழ் உணர்வுக்குத் தலை வணங்குகிறேன்.
ஷார்ஜா சுல்தான் ஒரு வகையில் தமிழர்களுக்கு நெருக்கமானவர். திராவிட மொழிக் குடும்பத்தின் அங்கமாகிய மலையாள மொழியைப் பேச அவருக்குத் தெரியும். மலையாளம் தெரியும் என்னும்போது தமிழுக்கும் அவர் நெருக்கமாகிவிடுகிறார் என விளக்கமளித்தார்.
எந்த மொழியாக இருந்தாலும், எந்த இனமாக இருந்தாலும் தன் மொழி மற்றும் இனத்தின் உரிமைகளைப் பாதுகாக்க, பிறரது ஆதிக்கத்துக்கு ஆட்படாமல் சுயமரியாதையுடன் உயர்ந்து நிற்க முயற்சிப்போர் அனைவருமே திராவிட இயக்கத்துக்கு நெருக்கமானவர்கள்தான். அந்த வகையில் தன் மண்ணின் பெருமையை அறிவு தீபம் ஏற்றி வெளிச்சமிட்டுக் காட்டும் ஷார்ஜா சுல்தான் போற்றுதலுக்குரியவர்.
கடந்த தி.மு.க ஆட்சியின் போது வெளிநாடு வாழ் தமிழர்களின் நலனுக்காக 'வெளிநாடுவாழ் தமிழர்கள் வாரியம்' ஒன்றை உருவாக்க முயற்சி மேற்கொள்ளப்பட்டது. மீண்டும் திமுக ஆட்சி அமைந்தவுடன் வெளிநாடு வாழ் தமிழர்கள் வாரியம் உருவாக்கப்படும். அப்படி அமைக்கப்படும் வாரியத்தில் அமீரகத்திலும் உங்கள் சார்பில் ஒரு பிரதிநிதி இருப்பார் எனவும் உறுதியளித்தார்.
-
கங்கணம் கட்டி சதி பண்ணிருக்கீங்க.. சேகர் பாபுவை போனில் வறுத்து எடுத்த ஸ்டாலின்.. ஷாக் தகவல்! -
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்! -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
ஆனானப்பட்ட அமெரிக்காவுக்கே இந்த நிலைமையா..? அப்போ இந்தியா? -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்!












Click it and Unblock the Notifications