வியாக்கியானம்- ஆதவன் தீட்சண்யா
கை பிசகி தெறித்த மசித்துளி
வெட்டாந்தரையாயிருந்த தாளின்
வெறுமை குலைத்தது
"மாந்திரீக குறிப்புகளின் சங்கேத முற்றுப்புள்ளி "
"புள்ளிகளாய் நிரப்பவேண்டிய பூடகத்தின் முதற்புள்ளி "
"ஆதி இதுவே
அதுவே மையத்திலிருக்கிறது
எங்கும் ரகசியமாய் நிரம்பியிருக்கிறது
எல்லாவிடமும் நகர்கிறது"
"உண்மையில் அது புள்ளியல்ல
புள்ளி போலிருக்கும் பூர்வ வடிவெ"ன்றும்
அனேக அபிப்ராயம்
புள்ளி புள்ளியாயிருந்தது
பலர் பலவாய்ச் சொல்லிக்கொள்ள.
- ஆதவன் தீட்சண்யா([email protected])
இவரது முந்தைய படைப்பு:
1. கடவுளின் கண்கள்
2. வேறு மழை
3. அதிர வருவதோர் நோய்
4. புது ஆட்டம்
5. கடவுளும் கந்தசாமிப் பறையன் உள்ளிட்ட வகையறாக்களும்
6. முடிந்து போன சிகரெட்டுகளும் மிச்சமிருக்கும் விவாதங்களும்
7. பாலைவாசி
8. சுய விலக்கம்
படைப்புகளை அனுப்ப:
கவிதை, கட்டுரை, சிறுகதை என படைப்பிலக்கியத்தின் எந்தக் கூறுகளிலும் உங்களதுஆக்கங்களை அனுப்பலாம். அனுப்ப வேண்டிய மின்னஞ்சல் முகவரி: [email protected]
படைப்புகளை அனுப்பும்போது, நீங்கள் எந்த எழுத்துருவை பயன்படுத்தியுள்ளீர்கள் என்பதை அறியத் தரவும்.