தொடுவானம்
நிச்சயமாய் நிலவே
நீயே நிலமிறங்கினாலும்- எட்ட
நின்றே நினைவுகளில்
நிறுத்திக் கொள்வேன்
தூரத்து கோவில் கோபுரமும்
தூண்டா மணி விளக்கும்
தூரமாய் இருப்பதாலேயே அழகு
உதவிகள் பல செய்து
உள்ளங்கையில் மலர் பொதிந்து
உறவாடும் மாணவியாய் இன்றி...
ஊரெல்லாம் உன் உருவம்
மறையும் வரை நின்று
மெளனமாய் வீடு திரும்பும்
மாணவியாய் இருக்கவே விருப்பம்
உன்னைப் பார்த்துக் கொண்டிருப்பதே
உயிர் நிறைப்பதால்
காதலிக்கிறேன் என சொல்லியாகும்
கட்டாயம் எனக்கில்லை
மறுத்துவிட்டாயென்றால்
மனோதிடமில்லாமல்
மறக்க எண்ணிடுவேனே- எனவே
மறந்தும் சொல்ல மாட்டேன் உன்னை
மணக்க ஆசை என்று.
-பத்ம ப்ரியா([email protected])
இவரது முந்தைய படைப்புகளைக் காண இங்கே அழுத்தவும்
படைப்புகளை அனுப்ப:
கவிதை, கட்டுரை, சிறுகதை என படைப்பிலக்கியத்தின் எந்தக் கூறுகளிலும் உங்களதுஆக்கங்களை அனுப்பலாம். அனுப்ப வேண்டிய மின்னஞ்சல் முகவரி: [email protected]
படைப்புகளை அனுப்பும்போது, நீங்கள் எந்த எழுத்துருவை பயன்படுத்தியுள்ளீர்கள் என்பதை அறியத் தரவும்.