கட்டளை- பத்மப்ரியா
வெறுமையான நண்பகலில்
வழிப் போக்கியைப் போல்
உனது தெருவில் நான்
உன் வீட்டை கடக்கையில்
எனக்கான மெளன அஞ்சலியாய்
கூடத்து ஊஞ்சலும் தூண்களும்
காற்றில் திரும்புவதாய்
முன் சக்கரம் திருப்பி
என் முகம் பார்க்கும்
உன் மிதிவண்டி
கடை முற்றத்து மல்லி
கிளை அசைவில்
வா என்றழைக்கும்
தற்கொலை முயற்சி போல்
தலைகீழாய் தண்ணீருக்குள்
தளர்ந்து விழும் உன் கிணற்று வாளி
கொல்லை துளசியும் வேம்பும்
காற்றே ஊடகமாய் என்
கரம் பற்றும்
உங்கள் கருவிழி லஷ்மி
என் தோளில் முகம் இழைக்க
கழுத்து மணி அசைக்கும்
உள்ளே நுழைந்து என்
முந்தானைக் காற்றால்
அவற்றின் முகம் துடைக்க
ஆசைதான்- - ஆனால்
நீதான்
"என்னை மறந்துவிடு" என்றாயே,
- பத்மப்ரியா([email protected])
இவரது முந்தைய படைப்பு:
1. என் விருந்தாளி
2. கடிதம்
3. முரண்பாடுகள்
4. கணக்கீடுகள்
படைப்புகளை அனுப்ப:
கவிதை, கட்டுரை, சிறுகதை என படைப்பிலக்கியத்தின் எந்தக் கூறுகளிலும் உங்களதுஆக்கங்களை அனுப்பலாம். அனுப்ப வேண்டிய மின்னஞ்சல் முகவரி: [email protected]
படைப்புகளை அனுப்பும்போது, நீங்கள் எந்த எழுத்துருவை பயன்படுத்தியுள்ளீர்கள் என்பதை அறியத் தரவும்.












Click it and Unblock the Notifications