ஆறும் நூறும்- ஷைலஜா
ஆறிலிருந்து அறுபதுவரை
என்பதுதான் மனிதனுக்கு
வாழ்வதற்கு வகுக்கப்பட்ட
காலமென்பர் பெரியோர்கள்
வாழ்வெல்லை நூறென்று
வேதம் வகுத்திருந்தும்
அத்தனைக்கும் அடிக்கல்
ஒன்றை ஆறுக்கு முன்பாகவே
அஸ்திவாரமிட்டு விட்டு
அழுத்தமான உயிர்ப்பூச்சில்
மேலெழுந்து நிற்பதுதான்
எலும்பும் தோலும் கொண்ட
எழில்மிகு உடலென்று
உள இயல் ஆய்வாளர்
உறுதியாகச் சொல்லிடுவர்
ஆறுவரை மனம் கூட
தெளிவான ஆறு தான்
இளமனதின் பதிவினிலே
இளகிவிடும் சூட்சுமங்கள்
களிமண்ணில் கைவிரல்கள்
கடைந்தெடுத்த சிற்பம்
பசுமரத்தில் பதிந்த
ஆணியைப் போல்
படித்ததும் கேட்டதும்
பதிந்து போகும் பருவம்
ஆகவே, ஆறுக்கு முன்பான
மனித நிலை சொன்னாலே
ஒரு நூறைக் கூறியதாய்
ஆகுமெனக் கொள்வோமா?
- ஷைலஜா([email protected])
இவரது முந்தைய படைப்பு:
1. பகல் பொழுது
2. விலகியே இரு
3. ப்ளாஸ்டிக் மனசு
4. சொல்லாமல் கொள்ளாமல்..
5. புரிந்துகொள்
6. சொல்லி இருக்கலாம்
7. எது?
படைப்புகளை அனுப்ப:
கவிதை, கட்டுரை, சிறுகதை என படைப்பிலக்கியத்தின் எந்தக் கூறுகளிலும் உங்களதுஆக்கங்களை அனுப்பலாம். அனுப்ப வேண்டிய மின்னஞ்சல் முகவரி: [email protected]
படைப்புகளை அனுப்பும்போது, நீங்கள் எந்த எழுத்துருவை பயன்படுத்தியுள்ளீர்கள் என்பதை அறியத் தரவும்.












Click it and Unblock the Notifications