மதுரை சித்திரை திருவிழா முதல்நாள் - காணும் இடமெங்கும் மீனாட்சி... சிம்ம வாகனத்தில் வலம் வந்த அம்மன்
மதுரை சித்திரை திருவிழாவின் முதல்நாளன்று மீனாட்சி அம்மன் சிம்ம வாகனத்திலும் பிரியாவிடை அம்மனுடன் சுந்தரேஸ்வரர் கற்பக விருட்ச வாகனத்திலும் மாசி வீதிகளில் வலம் வந்தனர்.
மதுரை: உலகப் பிரசித்தி பெற்ற மதுரை சித்திரைத்திருவிழா கோலாகலமாகத் தொடங்கியுள்ளது. மதுரையை அரசாளும் மீனாட்சி அம்மன் வேடம் அணிந்து காணும் இடமெங்கும் காட்சி அளித்தனர் சிறுமிகள். சித்திரை திருவிழாவின் முதல்நாளில் சிம்ம வாகனத்தில் கம்பீரமாக வலம் வந்தார் மீனாட்சி அம்மன். கற்பக விருட்ச வாகனத்தில் பிரியாவிடையுடன் வலம் வந்த சுந்தரேஸ்வரரை பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் கண் குளிர தரிசனம் செய்தனர்.
உலகப்புகழ் பெற்ற மதுரை சித்திரைத் திருவிழா, கொரோனா பெருந்தொற்றுக் காரணமான கடந்த 2 ஆண்டுகள் கோவில் வளாகத்திலேயே பக்தர்களின் பங்கேற்பின்றி நடைபெற்றது.
இந்நிலையில், தற்போது கொரோனா நோய்த் தொற்றுக் கட்டுப்பாடுகள் முழுவதுமாக நீக்கப்பட்டுள்ள நிலையில், சித்திரைத் திருவிழா வெகு கோலாகலமாக நடைபெற்று வருகிறது.

கொடியேற்றம்
சித்திரைத் திருவிழாவை முன்னிட்டு நேற்று காலை மதுரை மீனாட்சியம்மன் கோவிலில் உள்ள தங்க கொடிமரத்தில் சிவாச்சாரியர்களின் வேத மந்திரங்கள் முழங்க கொடியேற்றம் நடைபெற்று ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.

சுவாமி அம்மன் வீதி உலா
இதனையடுத்து சித்திரை பெருவிழாவின் முதல் நாளான நேற்று மாலை வெள்ளி சிம்மாசனத்தில் கோவிலின் உள்ளே அமைந்துள்ள குலாலர் மண்டகப்படியில் அம்மனும் சுவாமியும் எழுந்தருளி. பிறகு அங்கிருந்து புறப்பாடாகி நான்கு மாசி வீதிகளில் சிம்ம வாகனத்தில் மீனாட்சி அம்மனும், கற்பகவிருட்சம் வாகனத்தில் சுந்தரேசுவரரும் பிரியாவிடையும் எழுந்தருளி விதி உலா வந்து பக்தர்களுக்கு அருள்பாலித்தனர்.

மாசி வீதிகளில் கோலாகலம்
இரண்டு ஆண்டுகளுக்குப் பிறகு இன்று சித்திரைத் திருவிழாவின் முதல் நாளில் அம்பாளும் சுந்தரேஸ்வரப் பெருமான் வீதி உலா வருவதை ஆயிரக்கணக்கான மக்கள் மாசி வீதிகளில் நின்று சுவாமி தரிசனம் செய்தனர்.

காணும் இடமெங்கும் மீனாட்சி
சிறுவர்கள் சிறுமிகள் மீனாட்சி அம்மன் போல வேடமணிந்தும், கோலாட்டம், சிலம்பட்டம், பொய்கால் குதிரையாட்டம், உள்ளிட்ட பல்வேறு வகையான பாரம்பரிய கலை வெளிப்படுத்தியவாறு மாசி வீதி விதி உலா வந்தது பக்தர்களை பரவசத்தில் ஆழ்த்தியது.

மீனாட்சி திருக்கல்யாணம்
வரும் 12ஆம் தேதி மீனாட்சி அம்மனுக்கு பட்டாபிஷேகம் நடைபெறுகிறது. அன்று முதல் மதுரையில் மீனாட்சி அம்மன் ஆட்சிதான் நடைபெறும் என்பது ஐதீகம். 14ஆம் தேதி மீனாட்சி சுந்தரேஸ்வரருடன் திருக்கல்யாணமும், 15ஆம் தேதி சித்திரைத் தேரோட்டமும் நடைபெற உள்ளது.
-
வீட்டு கேஸ் சிலிண்டர் 14.2 கிலோ எடையில் விநியோகம் செய்யப்படுவது ஏன் தெரியுமா? -
கூட்டுறவு வங்கி நகைக்கடன் தள்ளுபடி யாருக்கு கிடைக்கும்? நகை மதிப்பீட்டில் உள்ள ஏல ரகசியம் இதுதானா -
சிறகடிக்க ஆசை: விஜயா செய்த சதி, ஜெயிலுக்கு போகும் மொத்த குடும்பம்.. மனோஜால் ஏற்படும் விபரீதம்! ஜெயித்த ரோகிணி -
இப்போ முடியாது.. தேர்தல் முடிந்ததும் செட்டில் பண்றேன்.. கறாராக பேசிய லீமா ரோஸ்.. விக்கித்த எடப்பாடி -
சுப்மன் கில் ஆட்டத்தை பார்க்க வந்த சாரா டெண்டுல்கர்.. பாவமாக அமர்ந்திருந்த அர்ஜுன் டெண்டுல்கர் மனைவி -
ஹார்முஸில் இறங்கும் இந்திய கடற்படை.. நடுக்கடலில் சிக்கியுள்ள இந்திய கப்பல்களை மீட்க அதிரடி ஆபரேஷன் -
நாய்க்கு கூட நன்றி இருக்கும்.. எடப்பாடி பழனிசாமி குறித்து சசிகலா விமர்சனம் -
கடைசி சான்ஸ்.. மிஸ் பண்ணிடாதீங்க.. பிறப்புச் சான்றிதழில் வருது மேஜர் முடிவு.. ஆவணங்களை ரெடி பண்ணுங்க -
அஜிதா ஆடிய மைண்ட் கேம்.. தவெக-வை தவிக்கவிட்டு திமுக பக்கம் தாவ இதுதான் காரணமா? தூத்துக்குடி மாஸ் -
எடப்பாடிக்கு அருகில் சீட்.. ஒரே விமானத்தில் பயணம்.. கடைசி நேரத்தில் பிளானை மாற்றிய உதயநிதி! -
ஸ்டாலினுக்கு இத்தகைய நடத்தை அழகல்ல.. நிர்மலா சீதாராமன் விளக்கம் -
பேசி முடித்ததுமே சரிந்த பாமக நிறுவனர் ராமதாஸ்.. கேள்விப்பட்டதும் உடனே போன் போட்ட முதல்வர் ஸ்டாலின்!












Click it and Unblock the Notifications