Mithunam Rasi Palan: மிதுன ராசிக்கு கால் வைக்கும் இடமெல்லாம் கண்ணி வெடி.. ரொம்ப உஷார்
வார ராசி பலன்: டிசம்பர் 22 ஆம் தேதி முதல் 28 ஆம் தேதி வரையிலான மார்கழி 7 முதல் 13 ஆம் தேதி வரையிலான இந்த வாரத்திற்கான மிதுன ராசி பலன்கள் குறித்து விரிவாகப் பார்க்கலாம். இந்த வாரம் எப்படி இருக்கும், என்ன மாதிரியான பலன்கள் கிடைக்கப் போகின்றன, வழிபட வேண்டிய தெய்வங்கள் குறித்து இந்த ஜோதிட கட்டுரையில் தெரிந்து கொள்ளலாம்.
ஒவ்வொரு கிரகங்களும் குறிப்பிட்ட கால இடைவெளியில் ஒரு ராசியில் இருந்து மற்றொரு ராசிக்குப் பெயர்ச்சியாவது வழக்கம். இந்த கிரகங்களின் நிலை மாற்றம் மற்றும் இடப்பெயர்ச்சியானது 12 ராசிகளிலும் தாக்கத்தை ஏற்படுத்தும். சில ராசிக்காரர்களுக்கு நல்ல பலன்களையும், சில ராசிக்காரர்களுக்கு அசுப பலன்களையும் உண்டாக்கும்.

தற்போது கார்த்திகை மாதம் முடிந்து இந்த மாதம் மார்கழி பிறந்துள்ளது. மார்கழி மாதம் பீடை மாதம் என்பார்கள். ஆனால், அப்படியல்ல மிகவும் உத்தமமான மாதமாகும். மார்கழி மாதத்தில் தினமும் பிரம்ம முகூர்த்தத்தில் அகல்விளக்கு ஏற்றி வருவது உங்களுக்கு அற்புதமான நன்மைகளைத் தரும். அந்த வகையில், டிசம்பர் 22 ஆம் தேதி முதல் 28 ஆம் தேதி வரையிலான கார்த்திகை 29 முதல் மார்கழி 6 ஆம் தேதி வரையிலான இந்த வாரத்திற்கான மிதுன ராசி பலன்கள் குறித்து தெரிந்து கொள்ளலாம்.
மிதுனம்
மிதுன ராசிக்காரர்களுக்கு கண்டிப்பாக எல்லா விஷயங்களிலும் நன்மையும் முன்னேற்றமும் ஏற்படும். தொழில் ரீதியாக மாற்றங்கள் காணப்படும். சுபகாரியத்தில் இருந்து வந்த தடைகள் நீங்கும். கணவன், மனைவிக்கிடையே இருந்த பிரச்சனைகள் தீரும். இதுவரை தடைபட்டுக் கொண்டே இருந்த காரியங்கள் அனைத்தும் இனி அடுத்தடுத்து நடக்கும்.
ஆரோக்கியம்
வீட்டில் எப்போதும் சண்டைகள் ஏற்பட்டுக் கொண்டே இருக்கும். தேவையில்லாத இடையூறுகள், கோபம் கணவன், மனைவிக்கிடையே ஏற்படும். மிதுன ராசியிர் தேவையில்லாத டென்ஷன், பிரசர் போன்றவற்றை தவிர்ப்பது நல்லது. கணவன், மனைவியின் ஆரோக்கியத்தில் கவனம் தேவை. 6 ஆம் இடத்தில் இருக்கும் புதன் வெற்றியைக் கொடுப்பார்.
பண வரவு
பணத்துக்குப் பஞ்சம் இருக்காது. இஎம்ஐ இல் நிறைய பொருள்களை வாங்கி மகிழ்வீர்கள். நீங்கள் எடுக்கும் முயற்சிகளுக்கு நிறைய எதிர்ப்புகளை சந்திப்பீர்கள். தொழில், வியாபாரம், உத்தியோகத்தில் கண்டிப்பாக பிரச்சனைகள் அதிகமாக இருக்கும். அலுவலகம் மூலமாக மன அழுத்தம் அதிகரிக்கும். வயிறு பகுதிகளில் சிறு பிரச்சனைகள் போன்றவை ஏற்படும்.
கடன் தீரும்
பழைய கடன்களை அடைத்து முடிப்பதற்கான யோகம் ஏற்படும். அதற்கான முயற்சிகள் அனைத்திலும் வெற்றி பெறுவீர்கள். கணவராக இருந்தால் மனைவியிடமும், மனைவியாக இருந்தால் கணவரிடமும் இணக்கமாகச் செல்வது நல்லது. வெளியிடத்தில் நன்மைகள் ஏற்படும். இருப்பினும், குடும்பத்தை விட்டுவிடாமல் அவர்களிடம் அன்பு, அரவணைப்போடு இருப்பது ஏற்றத்தைக் கொடுக்கும்.
அனுகூலம்
யோக பலத்தை அதிகமாகப் பெறக்கூடிய காலகட்டம். இழுபறியாக இருந்த நிலைமைகள் மாறும். சமுதாயத்தில் உங்களுடைய செல்வாக்குகள் குறையும். தொழில், பிள்ளைகள் விஷயம், குடும்பம், பெற்றோர் விஷயம், நிலம், வீடு சம்பந்தப்பட்ட விஷயங்களில் அனுகூலம் ஏற்படும். தாய் வழி உறவு, தந்தை வழி உறவில் மேன்மை ஏற்படும்.
திடீர் அதிர்ஷ்டம்
திடீர் அதிர்ஷ்டம் பெறிய நம்பிக்கையை ஏற்படுத்தும். சுபகாரியங்களை தள்ளிப் போட்டுக் கொண்டே இருப்பதைத் தவிர்ப்பது நல்லது. ஜாமீன் கையெழுத்துகள் போடுவதைத் தவிர்ப்பது நல்லது. அடுத்த ஆண்டு ஜூன் மாதம் வரை வார்த்தைகளில் மிகுந்த கவனமாக இருப்பது நன்மை பயக்கும். வக்கிரகத்தில் இருக்கும் செவ்வாய் வழிபாடு உங்களுக்கு அனுகூலத்தை தரும்.












Click it and Unblock the Notifications