இந்தியாவில் தெரியும் சந்திர கிரகணம்.. யாரெல்லாம் பார்க்கக் கூடாது? பரிகாரம் செய்ய வேண்டியது யார்?
சென்னை: சந்திர கிரகணம் நாளை இரவு ஐப்பசி பவுர்ணமி நாளில் நிகழப்போகிறது. இந்த சந்திர கிரகணம் இந்தியாவில் தெரியும் என்பதால் வெறும் கண்களால் பார்க்கலாம். சந்திர கிரகணத்தை யாரெல்லாம் பார்க்கக் கூடாது, எந்தெந்த நட்சத்திரங்களில் பிறந்தவர்கள் பரிகாரம் செய்ய வேண்டும் என்று பார்க்கலாம்.

வானியல் ரீதியாக சூரியன், பூமி மற்றும் சந்திரன் ஆகியவை ஒரே நேர்கோட்டில் வரும் போது சந்திரனை பூமியின் நிழல் முழுமையாக மறைத்து விடும், இந்த நிகழ்வே சந்திர கிரகணம். சந்திர கிரகணத்தன்று சந்திரன் முழுமையாக மறைக்கப்பட்டு சந்திர கிரகணம் ஏற்பட்டால் பூரண சந்திர கிரகணம் என்றும், ஒரு பகுதி மட்டும் மறைக்கப்பட்டு கிரகணம் ஏற்பட்டால் பார்சுவ சந்திர கிரகணம் என்றும் அழைக்கப்படுகிறது.
ஜோதிடத்தில் நிழல் கிரகங்களான ராகு மற்றும் கேதுவும் சூரியன் மற்றும் சந்திரனோடு இணைவதை கிரகணம் என கூறுகின்றனர். பவுர்ணமி நாளில் சூரியனும் சந்திரனும் மிகவும் சரியாக 180 பாகை வித்தியாசத்தில் இருப்பார்கள், அதாவது சூரியன் இருந்த ராசியிலிருந்து நேர் ஏழாவது ராசியில் சந்திரன் இருப்பார். பவுர்ணமி அன்று சந்திரன் ராகு அல்லது கேதுவின் பிடியில் இருக்கும் போது சந்திர கிரகணம் ஏற்படுகிறது.
எல்லா நேரங்களிலும் சூரியனும் சந்திரனும் ராகு அல்லது கேதுவோடு ஒரே வீட்டில் இணைந்திருக்க வேண்டும் என்ற அவசியம் இல்லை என கூறுகிறார்கள் சில பஞ்சாங்க கணித வல்லுநர்கள். ஒரு குறிப்பிட்ட பாகை வித்தியாசத்தில் அடுத்தடுத்த வீடுகளில் நின்றாலும் கிரஹணம் நிகழும் என கூறியுள்ளனர்.
கடந்த அக்டோபர் 14ஆம் சூரிய கிரகணம் நிகழ்ந்தது. மகாளாய அமாவாசை நாளில் - சூரியன், சந்திரன், கேது ஒரே வீட்டில் பயணம் செய்தது.
சந்திர கிரகணம் நாளைய தினம் ஐப்பசி பவுர்ணமி நாளில் அதாவது அக்டோபர் 28 ஆம் தேதி இரவு மேஷம் ராசியில் சந்திரன், ராகு, குரு உடன் இணைந்திருக்க, சூரியன், கேது, செவ்வாய், புதன், சம சப்தமமாக துலாம் ராசியில் பயணம் செய்கின்றன.
இந்த சந்திர கிரகணம் அபூர்வமானது. இந்த நேரத்தில் நாம் நினைத்து வேண்டிக்கொள்ளும் காரியங்கள் நிறைவேறும் என்ற நம்பிக்கை உள்ளது. கிரகண நேரம் சக்தி வாய்ந்தது என்பதால்தான் அந்த நேரத்தில் உச்சரிக்கப்படும் மந்திரங்களுக்கு சக்தி அதிகரிக்கிறது. கிரகண நேரத்தில் வெளியாகும் கதிர்வீச்சினால் யாருக்கும் பாதிப்பு வந்து விடக்கூடாது என்பதாலேயே ஆலயங்கள் மூடப்படுகின்றன.
சந்திர கிரகண நாளில் எந்த ராசிக்காரர்கள் பரிகாரம் செய்ய வேண்டும் என்று ஜோதிடர் பாலாஜிஹாசன் தனது முகநூலில் பதிவிட்டுள்ளார். அவரது பதிவில், 28.10.2023 சனிக்கிழமை நாளை இரவு 11.30 மணிக்கு தொடங்கி இரவு 2.30 மணிக்கு கிரகணம் முடிவடைகிறது. மேஷ ராசி அஸ்வினி நட்சத்திரம் மூன்றாம் பாதத்தில் தொடங்கி அஸ்வினி நட்சத்திரம் நாலாம் பாதத்தில் முடிவடைகிறது. இந்த சந்திர கிரகணத்தை வெறும் கண்ணால் பார்க்கலாம் கர்ப்பிணி பெண்களை தவிர்ப்பது நல்லது என்று பதிவிட்டுள்ளார். கர்ப்பிணிகள் வெளியில் வராமல் இருப்பது உத்தமம் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
அஸ்வினி நட்சத்திரத்தில் நடைபெறுவதால் அஸ்வினி, மகம் ,மூலம், பரணி,ரேவதி ஆகிய ஐந்து நட்சத்திரக்காரர்கள் ஞாயிற்றுக்கிழமை அதிகாலை தலைக்கு குளித்துவிட்டு அருகில் இருக்கக்கூடிய சிவன் கோயிலுக்கு சென்று விநாயகருக்கும் , சிவபெருமானுக்கும் ஒரு நெய் விளக்கு ஏற்றி உங்கள் பெயருக்கு அர்ச்சனை செய்து கொள்வது நல்லது இதுவே சாந்தி பரிகாரம் செய்வது நல்லது என்றும் பாலாஜி ஹாசன் பதிவிட்டுள்ளார்.

சந்திரகிரகணம் நிகழ உள்ளதால் நாளைய தினம் முதியவர்கள், குழந்தைகள், கர்ப்பிணிப் பெண்கள் ஆகியோர் இரவு 9 மணிக்கே தங்களின் உணவுகளை முடித்துக்கொள்ள வேண்டும் என்று அறிவுறுத்துகின்றனர். சமைத்து வைத்த உணவுகளில் தர்ப்பை புல்லினை போட்டு வைக்க வேண்டும். துளசியை போட்டு வைக்க வேண்டும்.
கிரகண சமயத்தில் தாம்பத்திய உறவை தவிர்க்க வேண்டும். ஒரு பெண் இந்தச் சமயத்தில் கர்ப்பம் தரித்தால் குறைபாடுள்ள குழந்தை பிறக்க நேரிடும் என்பதாலேயே தாம்பத்ய உறவை தவிர்க்க வேண்டும் என்கின்றனர் ஜோதிடர்கள்.
-
சொத்து வைத்திருப்போர் கவனத்திற்கு! ஏப்.1 முதல் பத்திரப்பதிவில் பெரிய மாற்றம்.. இனி நிலம் இந்த விலை? -
கேஸ் சிலிண்டர் விலை மாறுது! ஏப்.1 முதல் புதிய விலை! இல்லத்தரசிகள் மாத பட்ஜெட்டில் என்ன தாக்கம்? -
H-1B விசா கட்டுப்பாடுகள் நீக்கம்.. அமெரிக்காவில் முக்கிய மசோதா.. இதுதான் இந்தியர்களுக்கு நல்ல செய்தி -
இதுக்கு மேல கடன் வாங்க முடியாது.. கஜானா காலி.. தத்தளிக்கும் தமிழக வெற்றிக் கழகம்.. அப்போ விஜய்? -
தங்கம்.. 'தரை' தட்டியது ஏன்? கூடை கூடையாக மார்க்கெட்டில் விற்ற அரபு நாடுகள்.. ஒரு ராட்சனின் வீழ்ச்சி -
வளைகுடா வளையம்: ஈரானிடம் இந்தியா வைத்த 'செக்'.. தவிப்பில் கச்சா எண்ணெய்! டெல்லி மெகா முடிவு -
திமுக வேட்பாளர் நேர்காணலில் பங்கேற்ற துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின்.. என்ன கேட்கப்பட்டது என விளக்கம் -
இமாச்சல் போல.. தமிழகத்தில் அரசு ஊழியர்களின் மாத சம்பளத்தை 30% குறைக்க வேண்டியது வரும்.. அன்புமணி -
டிராகனின் வெள்ளி வேட்டை.. சீனாவைச் சுழற்றியடிக்கும் சில்வர் ஜுரம்.. வெள்ளி இனி குட்டித்தங்கம்.. ஏன்? -
முதல் விக்கெட்.. திமுக கூட்டணியில் விலகிய தமிழக வாழ்வுரிமை கட்சி.. அறிவித்தார் வேல்முருகன் -
Siragadikka Aasai Promo: விஜயாவுக்கு எதிராக ஆதாரத்தை கண்டுபிடித்த முத்து- மீனா.. சிந்தாமணிக்கு ஆப்பு! செம சம்பவம் -
நன்றியய்யா நன்றி.. ஓட்டல் ஓனர்கள் வயிற்றில் பால் வார்த்த அறிவிப்பு! இனி சிலிண்டர் தட்டுப்பாடு இல்லை!












Click it and Unblock the Notifications