Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

சிம்ம ராசிக்காரர்கள் உஷார்! 2025 சனி பெயர்ச்சியால் உங்களுக்கு அஷ்டமத்து சனி ஆரம்பம்.. என்ன பரிகாரம்?

Subscribe to Oneindia Tamil

சென்னை: 2025 மார்ச் 29 அன்று சனி பகவான் மீன ராசிக்கு பெயர்ச்சி ஆவதால் சிம்ம ராசிக்காரர்களுக்கு அஷ்டம சனி தோஷம் ஏற்படுகிறது. இது சிம்ம ராசியின் அதிபதி சூரியனுக்கும் சனிக்கும் பகை உறவு இருப்பதால், அவர்களின் வாழ்க்கையில் பல மாற்றங்களை ஏற்படுத்தும் என்கிறார்கள் ஜோதிடர்கள்.

பொதுவாக எல்லோருக்கும் அஷ்டம சனி பாதிப்பை ஒரே மாதிரி ஏற்படுத்தாது. ராசிகளுக்கு தக்கபடி மாறுபடும். அதில் சிம்ம ராசிக்கு கஷ்டம் கொஞ்சம் அதிகமாக கொடுக்க வாய்ப்புள்ளது என்கிறார்கள்.

sani peyarchi astrology zodiac leo

ஜோதிடத்தில், சனி கிரகம் ஒரு நமது கர்மங்களைப் பொறுத்து நன்மை தீமைகளை வழங்கும் கிரகமாக கருதப்படுகிறது. சனி கிரகம் எந்த ராசிக்கு எட்டாவது வீட்டில் சஞ்சரிக்கிறதோ அப்போது, அந்த ராசிக்கு, அஷ்டம சனி எனப்படுகிறது. 2025 மார்ச் 29ம் தேதி சனி கிரகம் மீன ராசிக்கு பெயர்ச்சி (Sani Peyarchi 2025) ஆகிறது. சிம்ம ராசிக்கு எட்டாம் இடம் மீன ராசி என்பதால், இந்த பெயர்ச்சியால் சிம்ம ராசிக்காரர்களுக்கு அஷ்டம சனி தொடங்குகிறது. அதேநேரம், கடந்த இரண்டரை ஆண்டுகளாக அஷ்டம சனியால் பாதிக்கப்பட்டிருந்த கடக ராசிக்காரர்கள் அதிலிருந்து விடுபடுகிறார்கள். 2027ம் ஆண்டு வரை சிம்ம ராசிக்கு அஷ்டம சனி தொடரும் என்கிறது கணிப்பு.

சிம்ம ராசிக்காரர்களுக்கு ஏற்படக்கூடிய மாற்றங்கள்:

ரியல் எஸ்டேட், ஹோட்டல் தொழில், அரசு வேலை, மொத்த வியாபாரம், விவசாயம் போன்ற துறைகளில் இருப்பவர்கள் தொழில் நஷ்டம், பண இழப்பு போன்ற பிரச்சினைகளை எதிர்நோக்க நேரிடும். புதிய தொழில் தொடங்குவது, முதலீடு செய்வது போன்ற முடிவுகளை தள்ளிப்போடுவது நல்லது.

குடும்ப உறவுகளில் விரிசல் ஏற்படலாம். கணவன், மனைவி இடையே கருத்து வேறுபாடுகள், குழந்தைகளின் கல்வி தொடர்பான பிரச்சினைகள் போன்றவை எழலாம்.

உடல் நலத்தில் கவனம் செலுத்துவது அவசியம். குறிப்பாக, மூட்டு வலி, தலைவலி, தோல் நோய்கள் போன்றவை ஏற்பட வாய்ப்புள்ளது. மன அழுத்தம், கவலை, மனச்சோர்வு போன்ற பிரச்சினைகள் ஏற்படலாம். தூக்கமின்மை, உணவு செரிமான கோளாறுகள் போன்ற உடல் உபாதைகள் ஏற்படலாம்.

தீர்வுகள் மற்றும் பரிகாரங்கள்:

காரைக்கால் திருநள்ளாறு தர்பாரண்யேஸ்வரர் கோயிலில் சனி பகவானை வழிபடுவது நல்லது.
தினமும் 21 முறை சனி பகவானின் காயத்ரி மந்திரத்தை ஜெபிக்கலாம்.
அருகிலுள்ள சிவாலயத்திற்கு சென்று எள் தானம் செய்யலாம். உங்கள் குல தெய்வத்தை கெட்டியாக பிடித்துக்கொள்ளுங்கள்.
தான தருமம்: ஏழை எளியவர்களுக்கு உணவு, உடை போன்றவற்றை தானமாக கொடுக்கலாம்.
எதிர்மறை எண்ணங்களை தவிர்த்து, நேர்மறையாக சிந்திக்க முயற்சி செய்யுங்கள்.
மன அமைதியைப் பெற யோகா மற்றும் தியானம் செய்யலாம்.

அஷ்டம சனி காலத்தில் சிம்ம ராசிக்காரர்கள் எடுக்க வேண்டிய முன்னெச்சரிக்கைகள்:

  • எந்த முடிவையும் அவசரப்பட்டு எடுக்க வேண்டாம்.
  • பிறரை நம்பாதீர்கள்: மற்றவர்களை நம்பி ஏமாறும் வாய்ப்புள்ளது.
  • சட்டப்பூர்வ விஷயங்களில் கவனமாக இருங்கள்: வழக்கு, மாறுதல் போன்ற சட்டப்பூர்வ விஷயங்களில் சிக்கிக்கொள்ளும் வாய்ப்புள்ளது.
  • உடல் நலனை கவனியுங்கள்: உடல் நலத்தில் சிறிதளவு பிரச்சினை ஏற்பட்டாலும் உடனடியாக மருத்துவரை அணுகவும்.
  • நேர்மறையான எண்ணங்களை வளர்த்துக் கொள்ளுங்கள்: எதிர்மறை எண்ணங்கள் உங்களை பாதிக்கக்கூடும்.

இந்த காலகட்டத்தில் சிம்ம ராசிக்காரர்கள் தங்கள் வாழ்க்கையில் சில மாற்றங்களைச் செய்ய வேண்டியிருக்கும். ஆனால், பொறுமையாக இருந்து, நேர்மறையாக சிந்தித்து செயல்பட்டால் இந்த காலகட்டத்தையும் வெற்றிகரமாக கடந்து செல்லலாம்.

முக்கிய குறிப்பு: இவை பொதுவான பலன்கள் மட்டுமே. உங்கள் ஜாதகத்தை வைத்துதான் துல்லியமான பலன்களை அறிந்து கொள்ள முடியும். எனவே, ஒரு ஜோதிடரை அணுகி விரிவான ஆலோசனை பெறுவது நல்லது.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+