புத்தாண்டு பலன் 2025: இயற்கை சீற்றம், விலைவாசி உயர்வு.. உலகில் நிகழப்போகும் முக்கிய பிரச்னைகள்?
புத்தாண்டுபலன் 2025: 2025 ஆம் ஆண்டை பல புதிய நம்பிக்கைகளுடன் எதிர்நோக்கி காத்திருக்கிறோம். இந்தாண்டு மூன்று பெரிய கிரகங்களில் மாற்றம் இருக்கிறது. சனி பகவான் மார்ச் 29 ஆம் தேதி கும்பத்தை விட்டு மீனத்துக்கு போகிறார். மே 14 ஆம் தேதி குரு பகவான் ரிஷபத்தை விட்டு மிதுனத்துக்கு மாறுகிறார். மே 18 ஆம் தேதி ராகு - கேது இடமாற்றமும் நிகழ்கிறது. இது மிகவும் அரிதான காலகட்டம். இதனால் ஏராளமான மாற்றங்கள் நிகழும்.
குரு பகவான் ரிஷப ராசியில் இருந்து மிதுன ராசிக்கு செல்வது மிகவும் நல்லது. ஐடி, ஊடகம், நிதி, தகவல் தொடர்பு, தபால் சார்ந்த துறைகள் சிறப்பாக இருக்கும். தமிழ் வருட பிறப்பு நன்றாகவே இருக்கும். குருவால் குழந்தைகளின் கல்வியும் அற்புதமாக இருக்கும். ராகுவால் அறிவியல் பூர்வமாக புதிய தொழில்நுட்பங்களில் முன்னேற்றம் இருக்கும்.

2025 மார்ச் - மே மாதம் 51 நாட்கள் சூரியன், புதன், சுக்கிரன், ராகு, சனி ஆகிய ஐந்து கிரகங்களின் சேர்க்கை இருப்பதால் மிகவும் கவனமாக இருக்க வேண்டும். இலங்கை, இஸ்ரேல், போர்ச்சுகல் நாடுகளில் போர் நிகழ அதிக வாய்ப்புள்ளது. இலங்கையால் இந்தியாவுக்கும் சில பிரச்னைகள் வரலாம். கோயில்களில் பிரச்னைகள் நிகழும். கனிமவள பிரச்னைகளும் பரவலாக பேசப்படும்.
விவசாயிகளுக்கு இந்தாண்டு நன்றாக இருக்கும். விவசாயத்தில் மிகப்பெரிய புரட்சி நிச்சயம் நிகழும். இயற்கை விவசாயம் பரவலாகும். மருத்துவத்துறையில் மிகப்பெரிய புரட்சி ஏற்படும். உலகம் முழுவதும் இயந்திரமயமாக்கல் பரவலாகும். ஊடகத்துறையின் வளர்ச்சி அபிரிமிதமாக இருக்கும். எண்ணெய் உள்ளிட்டவற்றின் விலை அதிகரிக்கும்.
கண் நோய், சிறுநீரகம் சம்மந்தப்பட்ட நோய்களால் பாதிப்பு ஏற்படும். அதிக விபத்துகள் நடைபெறும். அரசியல் கட்சி தலைவர்களுக்கு கண்டம் உண்டு. சமூகத்தில் பெரிய அந்தஸ்து உள்ள தலைவர்கள், மத குருமார்களும் மிகவும் கவனமாக இருக்க வேண்டும். இந்தாண்டில் சனி மற்றும் செவ்வாய் பார்வை முக்கியமானதாக கருதப்படுகிறது.
மக்களுக்கு வரவு செலவு சரியாக இருக்கும். தங்கத்தின் விலை அதிகரிக்கும். முதலீட்டில் மிகப்பெரிய பிரச்னை அதிகரிக்கும். பெரிய வங்கிகள் எல்லாம் திவாலாகும். கடன்கள் அதிகரிக்கும். கிரெடிட் கார்டுகளை கவனமாக பயன்படுத்த வேண்டும். வேலை வாய்ப்பில் சிக்கல் ஏற்படும். முதல் ஆறு மாதங்கள் பணத்தை சேமித்து வைத்துக் கொள்வது புத்திசாலித்தனம்.
ராகு சனி பகவான் வீட்டில் பயணிப்பதால் பலர் வேலையில் இருந்து கொண்டே தொழிலில் இறங்குவது அதிகமாகும். வேலை வாய்ப்பு பிரச்னையாகும். அதேநேரத்தில் வீட்டில் இருந்து கொண்டே தொழில் செய்வதற்கான வாய்ப்பு உருவாகும். 2026 சட்டமன்ற தேர்தல் கூட்டணிக்கான மிகப்பெரிய அரசியல் மாற்றங்கள் நிகழும். ஆட்சி கவிழ்ப்புகள் நடக்கும். பல பகுதிகளில் அரசியல் அசாதாரண சூழல் நிலவ வாய்ப்புள்ளது.
வெளிநாடுகளில் வேலையில் இருப்போருக்கு இந்தாண்டு நிறைய பிரச்னைகள் வருவதற்கு வாய்ப்புள்ளது. வேலை மற்றும் தொழிலில் திட்டமிடல் அவசியம். உலகம் முழுவதும் இயற்கை சீற்றங்கள் அதிகளவு நடைபெறும். நிலச்சரிவு ஏற்படக்கூடிய இடங்களில் கவனமாக இருக்க வேண்டும். நீரால் அதிக பாதிப்புகள் நிகழும்.
உற்பத்தி குறைவு, விலைவாசி உயர்வுகள் மக்களுக்கு பாதிப்புடைய வைக்கும். சவால்களும், பிரச்னைகளும் 2025 ஆம் ஆண்டில் சற்று அதிகமாகவே இருக்கும். பிப்ரவரியில் குரு வக்கிரம் மாறும்போது பிரச்னைகள் படிப்படியாக அதிகரிக்கும். மக்கள் முடிந்தவரை கவனமாக இருக்க வேண்டும்.
-
2020ல் 10 லட்சத்திற்கு வாங்கியிருந்தால் இன்று1.7 கோடி ரூபாய்.. இந்தியன் வங்கி மேஜிக் -
விஜய் சேதுபதிக்கு கடன்! 25 லட்சத்தை வாரி வழங்கிய ஆதவ் அர்ஜுனா.. பிரமாண பத்திரத்தில் கசிந்த ரகசியம் -
மூட்டை மூட்டையாக போய் தங்கத்தை அடகு வைக்கும் மக்கள்.. வெளியான ஷாக் தகவல்.. இப்படி ஒரு காரணமா? -
பத்திரப்பதிவில் இன்று முதல் புதிய ரூல்ஸ்! அதிகரிக்கும் சொத்து பதிவு செலவு! கலங்கும் நடுத்தர மக்கள் -
தமிழ் புத்தாண்டு ராசி பலன்: அஷ்டமசனியில் அதிர்ஷ்டத்தை அள்ளும் சிம்ம ராசி.. காதலில் வெற்றி கன்ஃபார்ம் -
சென்னையில் ரூ.36 கோடி கோடிக்கு வீடு வாங்கிய நகை கடைக்காரர்.. அதுவும் இந்த ஏரியாவில்..!! -
33 கேள்விகளுடன் ஒவ்வொரு வீட்டிற்கும்.. நேரடியாகவே வரும் அதிகாரிகள்.. நாம் என்ன செய்ய வேண்டும்? -
திமுக சிங்கிள் மெஜாரிட்டி! அதிமுகவிற்கு எதிர்க்கட்சி அந்தஸ்தே கிடைக்காது? சர்வேவில் கவனிச்சீங்களா -
எதிர்நீச்சல் சீரியல் ராணா யார் தெரியுமா? இத்தனை படங்களில் நடித்திருக்கிறாரா? இனி தான் சம்பவமே இருக்கு -
சென்னை சென்ட்ரல் -கோவை வந்தே பாரத்... தங்க முட்டை போடும் வாத்து.. ஒப்புக்கொண்ட ரயில்வே? -
ஏப்ரல் 1ம் தேதியான இன்று சம்பளம், கடன் எதுவுமே சாத்தியமில்லை... மக்கள் அறிய வேண்டிய உண்மை -
வருமான வரி படிவம் வெளியீடு.. மாத சம்பளம் வாங்குவோர், சிறு வணிகர்கள்.. அறிய வேண்டியவை












Click it and Unblock the Notifications