Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

புத்தாண்டு பலன் 2025: இயற்கை சீற்றம், விலைவாசி உயர்வு.. உலகில் நிகழப்போகும் முக்கிய பிரச்னைகள்?

Subscribe to Oneindia Tamil

புத்தாண்டுபலன் 2025: 2025 ஆம் ஆண்டை பல புதிய நம்பிக்கைகளுடன் எதிர்நோக்கி காத்திருக்கிறோம். இந்தாண்டு மூன்று பெரிய கிரகங்களில் மாற்றம் இருக்கிறது. சனி பகவான் மார்ச் 29 ஆம் தேதி கும்பத்தை விட்டு மீனத்துக்கு போகிறார். மே 14 ஆம் தேதி குரு பகவான் ரிஷபத்தை விட்டு மிதுனத்துக்கு மாறுகிறார். மே 18 ஆம் தேதி ராகு - கேது இடமாற்றமும் நிகழ்கிறது. இது மிகவும் அரிதான காலகட்டம். இதனால் ஏராளமான மாற்றங்கள் நிகழும்.

குரு பகவான் ரிஷப ராசியில் இருந்து மிதுன ராசிக்கு செல்வது மிகவும் நல்லது. ஐடி, ஊடகம், நிதி, தகவல் தொடர்பு, தபால் சார்ந்த துறைகள் சிறப்பாக இருக்கும். தமிழ் வருட பிறப்பு நன்றாகவே இருக்கும். குருவால் குழந்தைகளின் கல்வியும் அற்புதமாக இருக்கும். ராகுவால் அறிவியல் பூர்வமாக புதிய தொழில்நுட்பங்களில் முன்னேற்றம் இருக்கும்.

2025 newyear rasipalan 2025

2025 மார்ச் - மே மாதம் 51 நாட்கள் சூரியன், புதன், சுக்கிரன், ராகு, சனி ஆகிய ஐந்து கிரகங்களின் சேர்க்கை இருப்பதால் மிகவும் கவனமாக இருக்க வேண்டும். இலங்கை, இஸ்ரேல், போர்ச்சுகல் நாடுகளில் போர் நிகழ அதிக வாய்ப்புள்ளது. இலங்கையால் இந்தியாவுக்கும் சில பிரச்னைகள் வரலாம். கோயில்களில் பிரச்னைகள் நிகழும். கனிமவள பிரச்னைகளும் பரவலாக பேசப்படும்.

விவசாயிகளுக்கு இந்தாண்டு நன்றாக இருக்கும். விவசாயத்தில் மிகப்பெரிய புரட்சி நிச்சயம் நிகழும். இயற்கை விவசாயம் பரவலாகும். மருத்துவத்துறையில் மிகப்பெரிய புரட்சி ஏற்படும். உலகம் முழுவதும் இயந்திரமயமாக்கல் பரவலாகும். ஊடகத்துறையின் வளர்ச்சி அபிரிமிதமாக இருக்கும். எண்ணெய் உள்ளிட்டவற்றின் விலை அதிகரிக்கும்.

கண் நோய், சிறுநீரகம் சம்மந்தப்பட்ட நோய்களால் பாதிப்பு ஏற்படும். அதிக விபத்துகள் நடைபெறும். அரசியல் கட்சி தலைவர்களுக்கு கண்டம் உண்டு. சமூகத்தில் பெரிய அந்தஸ்து உள்ள தலைவர்கள், மத குருமார்களும் மிகவும் கவனமாக இருக்க வேண்டும். இந்தாண்டில் சனி மற்றும் செவ்வாய் பார்வை முக்கியமானதாக கருதப்படுகிறது.

மக்களுக்கு வரவு செலவு சரியாக இருக்கும். தங்கத்தின் விலை அதிகரிக்கும். முதலீட்டில் மிகப்பெரிய பிரச்னை அதிகரிக்கும். பெரிய வங்கிகள் எல்லாம் திவாலாகும். கடன்கள் அதிகரிக்கும். கிரெடிட் கார்டுகளை கவனமாக பயன்படுத்த வேண்டும். வேலை வாய்ப்பில் சிக்கல் ஏற்படும். முதல் ஆறு மாதங்கள் பணத்தை சேமித்து வைத்துக் கொள்வது புத்திசாலித்தனம்.

ராகு சனி பகவான் வீட்டில் பயணிப்பதால் பலர் வேலையில் இருந்து கொண்டே தொழிலில் இறங்குவது அதிகமாகும். வேலை வாய்ப்பு பிரச்னையாகும். அதேநேரத்தில் வீட்டில் இருந்து கொண்டே தொழில் செய்வதற்கான வாய்ப்பு உருவாகும். 2026 சட்டமன்ற தேர்தல் கூட்டணிக்கான மிகப்பெரிய அரசியல் மாற்றங்கள் நிகழும். ஆட்சி கவிழ்ப்புகள் நடக்கும். பல பகுதிகளில் அரசியல் அசாதாரண சூழல் நிலவ வாய்ப்புள்ளது.

வெளிநாடுகளில் வேலையில் இருப்போருக்கு இந்தாண்டு நிறைய பிரச்னைகள் வருவதற்கு வாய்ப்புள்ளது. வேலை மற்றும் தொழிலில் திட்டமிடல் அவசியம். உலகம் முழுவதும் இயற்கை சீற்றங்கள் அதிகளவு நடைபெறும். நிலச்சரிவு ஏற்படக்கூடிய இடங்களில் கவனமாக இருக்க வேண்டும். நீரால் அதிக பாதிப்புகள் நிகழும்.

உற்பத்தி குறைவு, விலைவாசி உயர்வுகள் மக்களுக்கு பாதிப்புடைய வைக்கும். சவால்களும், பிரச்னைகளும் 2025 ஆம் ஆண்டில் சற்று அதிகமாகவே இருக்கும். பிப்ரவரியில் குரு வக்கிரம் மாறும்போது பிரச்னைகள் படிப்படியாக அதிகரிக்கும். மக்கள் முடிந்தவரை கவனமாக இருக்க வேண்டும்.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+