கோவை அனுமந்தராயசாமி கோவிலில் ஆவணி மாத சிறப்பு வழிபாடு... ஏராளமான பக்தர்கள் பங்கேற்பு!
கோவை அனுமந்தராயசாமி கோவிலில் ஆவணி மாத சிறப்புபூஜை நடைபெற்றது.
Subscribe to Oneindia Tamil
கோவை: அனுமந்தராயசாமி கோவிலில் ஆவணி மாத சிறப்புபூஜை நேற்று நடைபெற்றது. இதில் ஏராளமான பக்தர்கள் கலந்துகொண்டனர்.
கோவை மாவட்டம் காரமடை அருகேயுள்ள மருதூர் கிராமத்தில் நூறு ஆண்டுகள் பழமை வாய்ந்த அனுமந்தராயசாமி திருக்கோயில் உள்ளது. இக்கோயிலில் ஆவணி மாத முதல் வார சிறப்பு பூஜை விமரிசையாக நடைபெற்றது.

இவ்விழாவினையொட்டி புலவர் தாச.அரங்கசாமியின் வில்லி பாரதம் தொடர் சொற்பொழிவு நடைபெற்றது. சிறப்பு அபிஷேகம், அலங்கார பூஜை முடிந்து அசோகவன அனுமனாய் மூலவர் ஜெயமங்கள ஆஞ்சநேயர் காட்சி அளித்தார்.
இந்த வழிபாட்டில் பக்தர்கள் திரளாக கலந்து கொண்டனர். பக்தர்களுக்கு ஸ்ரீஆஞ்சநேயா அறக்கட்டளை சார்பில் அன்னதானம் வழங்கப்பட்டது.












Click it and Unblock the Notifications