Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

Rasi Palan This Week: ரிஷப ராசிக்கு அடிக்கும் ஜாக்பாட்.. வீடு, நிலம், சொத்துகளைக் குவிக்கும் யோகம்

Subscribe to Oneindia Tamil

வார ராசி பலன்: நவம்பர் 24 ஆம் தேதி முதல் 30 ஆம் தேதி வரையிலான கார்த்திகை 8 முதல் 14 ஆம் தேதி வரையிலான இந்த வாரத்திற்கான ரிஷப ராசி பலன்கள் குறித்து விரிவாகப் பார்க்கலாம். இந்த வாரம் எப்படி இருக்கும், என்ன மாதிரியான பலன்கள் கிடைக்கப் போகின்றன, வழிபட வேண்டிய தெய்வங்கள் குறித்து இந்த ஜோதிட கட்டுரையில் தெரிந்து கொள்ளலாம்.

ஒவ்வொரு கிரகங்களும் குறிப்பிட்ட கால இடைவெளியில் ஒரு ராசியில் இருந்து மற்றொரு ராசிக்குப் பெயர்ச்சியாக வழக்கம். இந்த கிரகங்களின் நிலை மாற்றம் மற்றும் இடப்பெயர்ச்சியானது 12 ராசிகளிலும் தாக்கத்தை ஏற்படுத்தும். சில ராசிக்காரர்களுக்கு நல்ல பலன்களையும், சில ராசிக்காரர்களுக்கு அசுப பலன்களையும் உண்டாக்கும்.

Weekly rasi palan Rishabam Lucky zodiac signs

சூரியன் துலாம் ராசியில் இருந்து விருச்சிக ராசிக்கு வரக்கூடிய மாதமே கார்த்திகை மாதம். செவ்வாய் வீட்டிற்கு சூரியன் வரும் மாதம். கார்த்திகையில் மிக பிரசித்திபெற்ற விசேஷம் கார்த்திகை தீபம், சபரிமலைக்கு மாலை போடுவது. செவ்வாய் வீட்டிற்கு சூரியன், அதாவது பகை வீட்டிற்கு சூரிய வரும் காலகட்டம்.

அந்த வகையில், நவம்பர் 24 ஆம் தேதி முதல் 30 ஆம் தேதி வரையிலான கார்த்திகை 8 முதல் 14 ஆம் தேதி வரையிலான இந்த வாரத்திற்கான ரிஷப ராசி பலன்கள் குறித்து தெரிந்து கொள்ளலாம்.

ரிஷபம்

ரிஷப ராசிக்காரர்களுக்கு உங்களுடைய செல்வாக்குகள் கூடும் காலகட்டம். படிப்பு, தொழில், உத்தியோகம், வியாபாரம் சம்பந்தப்பட்ட விஷயங்களில் முன்னேற்றம் ஏற்படும். பண வரவுக்கான உத்தரவாதம் கிடைக்கும். பிள்ளைகள் விஷயத்திலும், துணை விஷயத்திலும் கவனமாக இருப்பது நல்லது. சிறிதாக செய்யக் கூடிய வாக்குவாதங்கள் கூட நிம்மதியை குலைக்கும் என்பதால் கவனமாகப் பேசுவது நல்லது.

தொழிலில் அனுகூலம்

குடும்பத்தில் மற்றவர்கள் தலையிடுவதை தவிர்ப்பது நல்லது. அதேபோல, மற்றவர்கள் குடும்ப விஷயத்தில் நீங்களும் தலையிடாமல் இருப்பது நல்லது. இல்லையெனில் தேவையில்லாத சங்கடங்கள் ஏற்படும். தொழில் ரீதியாக அடுத்தடுத்து எடுக்கும் முடிவுகள் பெரிய அளவிலான சந்தோஷத்தையும், முன்னேற்றத்தையும் ஏற்படுத்தும்.

சுப விரய யோகம்

வியாபாரத்தில் இருந்த சிக்கல்கள் பரிபூரணமாக நிவர்த்தியாகும். நல்ல லாபங்கள் கிடைக்கும். உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு நல்ல பதவிகள் வந்து சேரும். பதவி உயர்வில் இருந்த தடைகள் அனைத்தும் நீங்கும். எதிர்பார்க்காத இடத்தில் இருந்து நல்ல செய்திகள் வந்து சேரும். சுப விரயங்கள் நடக்கும் காலகட்டம். பொருளாதாரத்தில் நல்ல முன்னேற்றம் ஏற்படும்.

தடைகள் நீங்கும்

திருமணத்தில் இருந்து வந்த தடைகள், குழந்தை பாக்கியத்தில் இருந்து வந்த தடைகள் நீங்கும். நல்ல வரன்கள் கிடைக்கும். அசையும், அசையா பொருள்கள் சேர்க்கை ஏற்படும். முதலீடுகளைச் செய்து மகிழ்வீர்கள். நிலம் வாங்குவது, வீடு வாங்குவது போன்ற நன்மைகள் ஏற்படும். நீங்கள் நீண்ட நாட்களாக எதிர்பார்த்துக் காத்திருந்த விஷயங்கள், ஆசைப்பட்ட விஷயங்கள் அனைத்தும் நடக்கும் காலகட்டம். சமுதாயத்திலும், குடும்பத்திலும் உங்கள் செல்வாக்குகள் அதிகரிக்கும் நல்ல காலகட்டம்.

வழிபாடு, பரிகாரம்

செவ்வாய்க்கிழமைகளில் மதிய வேளையில் சாப்பாடு, எலுமிச்சை ஊறுகாய் தானம் கொடுப்பது நன்மையைத் தரும். பொருள்கள் காணாமல் போவது, அதிக விரயம் ஏற்படுவதைத் தடுக்கும். கார்த்திகை மாதம் முழுவதும் இதனை செய்து கொள்வது உங்களுக்கு பாதுகாப்பை ஏற்படுத்தும். முருகர் வழிபாடு செய்வதும், சுப்பிரமணிய புஜங்கத்தை கேட்பது அல்லது படிப்பது உங்களுக்கு நல்ல பலன்களைத் தரும்.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+