Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

சனிப் பெயர்ச்சி: வம்சமே காலி.. மறந்தும் ‘இந்த’ விசயத்தை செய்யாதீங்க! சனி பகவானை கோபமாக்கும் செயல்கள்

Subscribe to Oneindia Tamil

சென்னை: 2025 ஆம் ஆண்டு சனி பெயர்ச்சி மார்ச் 29ஆம் தேதி நடைபெற இருக்கிறது. அன்று சனி பகவான் கும்ப ராசியில் இருந்து மீன ராசிக்கு பெயர்ச்சி ஆகிறார். இது ஓரளவுக்கு அனைத்து ராசிகளுக்கும் நல்ல பலனை கொடுக்கும் பெயர்ச்சிதான். அதே நேரத்தில் சனி பகவானை கோபப்படுத்தும் செயல்களை செய்யாமல் இருப்பது நன்மை பயக்கும். அப்படி என்னென்ன விஷயங்கள் இருக்கிறது, சனி பகவானை மகிழ்ச்சி செய்யும் செயல்கள் என்னென்ன என்பது குறித்தும் பார்க்கலாம்.

கிரகங்களில் ஈஸ்வர பட்டம் பெற்ற ஒரே கிரகம் என்றால் அது சனி தான். அதனால்தான் அவரை சனீஸ்வரன் என்கிறோம். வலிமையான கிரகமான சனி ஒரு ராசியில் இரண்டரை ஆண்டுகள் சஞ்சாரம் செய்கிறார். மற்ற கிரகங்கள் இரண்டரை நாள் தொடங்கி ஒரு வருடம் மட்டுமே ஒரு ராசியில் இருப்பார்கள்.

chennai spirituality sani peyarchi 2025 2025

இந்த ஆண்டு சனிப்பெயர்ச்சி வருகிற மார்ச் 29ஆம் தேதி நடைபெற இருக்கிறது. கும்ப ராசியில் சஞ்சரித்த சனி பகவான் மீன ராசிக்கு பெயர்ச்சி ஆகிறார். இதுவரை பாவ கிரகங்களின் வீட்டில் பயணித்த சனி பகவான் குருவின் வீட்டுக்கு சஞ்சரிக்கிறார். இந்த பெயர்ச்சி அனைத்து ராசிகளுக்கும் நல்ல பலன்களை கொடுக்கும். சனி என்றாலே மக்கள் மத்தியில் ஒரு பயம் இருக்கத்தான் செய்கிறது.

நல்லது என்றாலும் கெட்டது என்றாலும் சனி பகவானை சமமாக பாவிக்க வேண்டும். கஷ்டம் நேரும் போது மட்டும் சனி பகவானை நினைக்கக் கூடாது. அதே நேரத்தில் நமக்கு நடக்கும் நல்லது கெட்டதுகளுக்கு சனி பகவான் தான் காரணம். சில ஆண்டுகள் சனி பகவானால் இன்னல்கள் நடந்தாலும் அதற்குப் பிறகு உங்களுக்கு தொட்டதெல்லாம் துலங்கும்.

ஏழரை ஆண்டுகள் சனி பகவான் உங்கள் ஜாதகத்தில் சஞ்சரிப்பார். அது ஜென்ம சனியாகவும் அதற்கு மேலேயும் கூட இருக்கலாம். சனி திசை முடியும், அஷ்டம சனி மிகவும் துன்பம் நிறைந்த காலகட்டமாக இருக்கும். சில செயல்கள் செய்தால் சனி பகவானின் தீய பார்வையில் இருந்து யாராலும் காப்பாற்ற முடியாது. சுத்தமில்லாத இடங்களும் மனிதர்களும் சனி பகவானுக்கு கோபத்தை ஏற்படுத்தும். குளித்துவிட்டு ஈரத்துடன் வீட்டுக்குள் செல்பவர்கள், சனி பகவானின் கோபப் பார்வையில் சிக்குவார்கள்.

முதல் நாள் உடுத்திய துணியை அடுத்த நாள் உடுத்துவது, இருள் சூழ்ந்திருக்கும் வீடுகள் சனி பகவானுக்கு பிடிக்கவே பிடிக்காது. அதன் காரணமாகத்தான் மாலை நேரத்தில் பூஜை அறையில் விளக்கு ஏற்றி வைக்க வேண்டும். மேலும் அமங்கல சொற்கள் பேசுவதும், சுத்தமில்லாத இடங்களும் சனி பகவானுக்கு பிடிக்காது. அதனால் தனது கோபப் பார்வையை அங்கே திருப்பி விடுவார்.

மண்ணாசை, பெண்ணாசை, பொன்னாசை கொண்டவர்களுக்கு சனி பகவான் எப்போதுமே எதிரி தான். குறிப்பாக மாற்றான் மனைவி மீது ஆசை கொண்டவர்கள் சனி பகவானால் அழிவை சந்திப்பது நிச்சயம். அனைத்து கிரகங்களையும் சிறைபிடித்த ராவணனால் சனி பகவானை ஒன்றும் செய்ய முடியவில்லை. மாற்றான் மனைவி மீது கொண்ட ஆசையே அவனது அழிவுக்கும் காரணமானது. மேலும் வஞ்சகம், சூது செய்து வெற்றி பெறலாம் நினைத்தால் சனி பகவான் தண்டிக்காமல் விடமாட்டார்.

உங்களை மட்டுமல்ல உங்களது வாரிசுகளையும் தண்டிப்பார். சனி பகவானை சரியான முறையில் வழிபடுவது குபேரனை விட ஆயிரம் மடங்கு அனுக்கிரகத்தை அள்ளித் தரும். அதனால் கோபப்படுத்தினால் நீங்கள் மட்டுமல்ல உங்கள் வம்சமும் பாதிக்கப்படும்.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+