Sani Peyarchi: சிம்ம ராசியை வச்சு செய்யப் போகும் அஷ்டம சனி.. 5 விஷயங்களில் மிக கவனம்
சனிப்பெயர்ச்சி பலன்கள்: 2026 ஆம் ஆண்டில் முக்கிய கிரகப் பெயர்ச்சியான சனிப்பெயர்ச்சி வாக்கியப் பஞ்சாங்கத்தின்படி மார்ச் 6 ஆம் தேதி நடைபெறவுள்ளது. இந்த சனிப்பெயர்ச்சியில் சிம்ம ராசியினருக்கு கிடைக்கும் பலன்கள், பரிகாரங்கள், வழிபட வேண்டிய தெய்வங்கள் குறித்து இந்த ஜோதிட கட்டுரையில் விரிவாகப் பார்க்கலாம்.
ஒவ்வொரு கிரகங்களும் ஒரு குறிப்பிட்ட கால இடைவெளியில் ஒரு ராசியில் இருந்து மற்றொரு ராசிக்குப் பெயர்ச்சியாவது வழக்கம். இந்த கிரக மாற்றமானது 12 ராசிகளிலும் அதன் தாக்கத்தை ஏற்படுத்தும். இந்த மாற்றம் சில ராசிக்காரர்களுக்கு சுப பலன்களையும், சில ராசிக்காரர்களுக்கு அசுப பலன்களையும் கொடுக்கும். வரும் மார்ச் மாதத்தில் முக்கிய கிரக மாற்றமான சனிப்பெயர்ச்சி நடைபெறவுள்ளது.

மார்ச் 6 ஆம் தேதி காலை 8:24 மணிக்கு சனி பகவான் தன் சொந்த வீடான கும்ப ராசியில் இருந்து, குருவின் வீடான மீன ராசிக்குப் பெயர்ச்சி ஆகவுள்ளார். சனி பகவானின் இந்தப் பெயர்ச்சி காரணமாக பொருளாதாரத்தில் நல்ல முன்னேற்றம் ஏற்படும். மலைப் பகுதிகளில் நிலச்சரிவு போன்றவை ஏற்படுவதற்கான வாய்ப்புள்ளது. மருத்துவத் துறையில் புரட்சி ஏற்படும். இந்த சனிப்பெயர்ச்சியான 12 ராசிகளிலும் தாக்கத்தை ஏற்படுத்தும். சிம்ம ராசிக்கான சனிப்பெயர்ச்சி பலன்களை இந்தப் பதிவில் பார்க்கலாம்.
சிம்மம்
கும்பத்தில் இருந்து மீனத்துக்குப் பெயர்ச்சியாகக் கூடிய சனி பகவான் உங்கள் ராசிக்கு 8 ஆம் பாவத்தில் பெயர்ச்சி ஆகவுள்ளார். இந்த சனியை அஷ்டமசனி என்று குறிப்பிடுவார்கள். ஏழரை வருடத்தில் கொடுக்கக்கூடிய அத்தனை பிரச்சனைகளையும் இந்த அஷ்டமசனி காலமான இரண்டரை ஆண்டுகளில் கொடுக்கப் போகிறார். இந்த காலகட்டத்தில் 5 விஷயத்தில் கவனமாக இருக்க வேண்டும்.
பண விஷயத்தில் கவனம்
உறவுகள் மூலமாக கையில் இருக்கக்கூடிய பணம் கரைவதற்கான வாய்ப்புள்ளது. கொடுக்கல் வாங்கலில் மிகுந்த கவனமாக இருக்க வேண்டும். கொடுத்த பணம் திரும்பி வராமல் போவதற்கான அதிக வாய்ப்புள்ளது. குடும்பத்தில் சிறிய சிறிய பிரச்சனைகள் கண்டிப்பாக வந்து போகும். புத்திசாலித்தனத்தால் குடும்பத்தில் உள்ள பிரச்சனைகளை சரி செய்ய முடியும். தீர்க்க முடியாத பிரச்சனைகளை கடவுளிடம் ஒப்படைப்பது நல்லது.
கவலை வேண்டாம்
வேலை செய்யும் இடத்தில் சிறிய சிறிய குழப்பங்கள், பிரச்சனைகள், வேலை அழுத்தம் போன்றவை ஏற்படுவதற்கான வாய்ப்புள்ளது. கடமையை செய் பலனை எதிர்பார்க்காதே என்பது போல இந்த காலகட்டத்தில் உங்களுடைய வேலைகளை சரியாக செய்து கொண்டிருப்பது நல்லது. எதிர்வீடு, பக்கத்து வீடு போன்ற நபர்கள் யாருடனும் நல்ல உறவில்லை என்றாலும் அதைப் பற்றி கவலைப்படத் தேவையில்லை. அவர்களுக்கு மனதில் ஒரு இடம் கொடுத்து வருத்தப்பட வேண்டும் என்ற அவசியம் இல்லை.
ஆரோக்கியம்
ஆரோக்கியத்தில் மிகுந்த கவனமாக இருக்க வேண்டும். எலும்பு சார்ந்த பிரச்சனைகள், ஏற்கனவே இருக்கும் உடல்நலக் கோளாறுகளில் கவனமாக இருப்பது நல்லது. சனியின் பார்வை 2 ஆம் பாவத்தைப் பார்க்கிறது. குடும்ப ஸ்தானத்தைப் பார்ப்பதால் குடும்பத்தில் சிறு சிறு குழப்பங்கள் ஏற்படும். இந்தப் பொருளுக்கு நான் கேரண்டி கொடுக்கிறேன் என்று வாக்குறுதி கொடுக்காமல் இருப்பது நல்லது. தேவையில்லாமல் பழி பாவத்திற்குள்ளாகும் சூழல் ஏற்படுவதற்கான வாய்ப்புள்ளது.
சொத்துகளில் கவனம்
5 ஆம் பாவத்தை சனி பார்ப்பதால் பூர்வீக சொத்து, வீடு, மனை இருந்தால் அதனை சென்று பார்த்து வருவது நல்லது. உங்களுக்குத் தெரிந்தவர்கள் சொத்தை பார்த்துக் கொண்டிருந்தாலும் அவர்களே உங்களுக்கு எதிராக மாறும் சூழல் உள்ளது. மற்றவர்கள் ஆக்கிரமிப்பு செய்வதற்கான வாய்ப்புள்ளது. பூர்வீக சொத்தில் கவனம் தேவை. குழந்தைகளுக்கான இடைவெளியைக் கொடுப்பது நல்லது. அவர்களை அதிகாரம் செய்வது, திட்டுவது போன்றவற்றைத் தவிர்ப்பது நல்லது.
தொழில்
பூர்வீக சொத்து பிரச்சனைகளுக்கு வழக்குகள் போடுவதைத் தவிர்ப்பது நல்லது. சனி பகவான் தொழில் ஸ்தானத்தைப் பார்ப்பதால் தொழிலில் சிறிய சிறிய பிரச்சனைகள் வந்து போவதற்கான வாய்ப்புள்ளது. 6, 7 க்கு அதிபதியான சனி பகவான் என்பதால் பெரிய அளவில் கடன் வாங்காமல் இருப்பது நன்மை பயக்கும். கணவன், மனைவி இருவரும் விட்டுக் கொடுத்துச் செல்வது நல்லது. இதுபோல சிறிய சிறிய விஷயங்களில் கவனமாக இருக்க வேண்டும். 100க்கு 30 சதவீதம் நன்மைகளைப் பெறும் காலகட்டமாக இருக்கும்.
-
தமிழ் புத்தாண்டு பலன்: குருவின் அருளால் மகர ராசிக்கு அடிக்கும் ஜாக்பாட்.. பிரகாசமாகப் போறீங்க -
தமிழ் புத்தாண்டு பலன்: எச்சரிக்கையாக இருக்க வேண்டிய 3 ராசிகள்.. உங்க ராசி இருக்கா பாருங்க -
Tamil Puthandu Rasi Palan: மீனம் ராசிக்கு கோடிகளை குவிக்கும் நேரம்.. தொட்டதெல்லாம் பொன்னாகும் நேரம் -
தமிழ்நாட்டில் 27 வயது தாசில்தார் சம்பளம்.. 37 வயதில் எவ்வளவு மாறியிருக்கும் தெரியுமா? -
மகளிர் உரிமை தொகை வராது.. அடுத்த 1 வாரத்தில் தமிழக அரசு தரும் ரூ.2000.. யாருக்கெல்லாம் கிடைக்கும்? -
கோவையில் 2022ல் சரவணம்பட்டியில் இடம் வாங்கி போட்டிருந்தால் இன்று நீங்கள் கோடீஸ்வரன்.. மாறிய மதிப்பு -
மகளிர் உரிமைத்தொகை ரூ.3,000.. கல்வி கடன் தள்ளுபடி.. ராமதாஸ் வெளியிட்ட தேர்தல் வாக்குறுதிகள்! -
₹10 லட்சம் லோன் எடுத்தா ஒரு பகுதி இலவசமா? கூட்டுறவு வங்கியில் மானியம்.. பிசினஸ் லாபம் சூப்பர் சான்ஸ் -
சென்னையில் 2 லட்சம் பேருக்கு பறந்த நோட்டீஸ்.. வீடு, கட்டிடம் வைத்துள்ளவர்களுக்கு முக்கிய அறிவிப்பு -
பாதாளத்தில் விழும் தங்கம்.. "ரூ.10,000க்கு கூட போகலாம்.." மெகா இன்ப செய்தியை சொன்ன ஆனந்த் சீனிவாசன் -
சிறகடிக்க ஆசை: போலீஸ் சொன்ன விஷயம்! சந்தோஷத்தில் முத்து! அண்ணாமலை வீட்டில் கொண்டாட்டம்! விஜயா முடிவு -
லால்குடியில் களமிறங்கிய ஆதவ் அர்ஜுனா மாமியார்.. அதிமுகவில் இணைந்த 1 மாதத்தில் சீட் கொடுத்த எடப்பாடி












Click it and Unblock the Notifications