ஒருமுறை ரோடு போட்டா போதும்.. பள்ளமே வராது! தானாக குணமாகும் புது டெக்னாலஜி! அரசின் செம பிளான்
சென்னை: இந்திய தேசிய நெடுஞ்சாலை ஆணையம் (NHAI) நாட்டில் சாலைப் பராமரிப்பில் புரட்சியை ஏற்படுத்தக்கூடிய புதுமையான தொழில்நுட்பத்தை ஆராய்ந்து வருகிறது.
இந்தியாவில் சாலை விபத்துகள் மற்றும் உயிரிழப்புகளுக்கு முக்கிய பங்களிப்பான பள்ளங்களின் பிரச்சினைக்கு தீர்வு காணும் திறன் கொண்ட சுய-குணப்படுத்தும் திறனை கொண்ட அதாவது self healing எனப்படும் தானாக சரியாகும் திறனை கொண்ட சாலைகளை உருவாக்க இந்திய தேசிய நெடுஞ்சாலை ஆணையம் முடிவெடுத்துள்ளது.

ஒரு குறிப்பிட்ட வகை asphalt மூலம் இந்த சாலைகள் உருவாக்கப்பட உள்ளன. இந்த சிறப்பு asphalt வகையின் சுய-குணப்படுத்தும் பண்புகள் குழி பிரச்சனைக்கு நீண்ட கால தீர்வை வழங்க முடியும். எவ்வாறாயினும், தொழில்நுட்பத்தை பெரிய அளவில் செயல்படுத்துவதற்கு முன், அதன் சாத்தியக்கூறு மற்றும் செயல்திறனை உறுதி செய்ய முழுமையான செலவு-பயன் பகுப்பாய்வு நடத்த அரசாங்கம் திட்டமிட்டுள்ளது.
இந்த சாலைகள் சேதம் அடைந்தால் தரை சூட்டில் விரிந்து சேதம் அடைந்த பகுதிகளை நிரப்பிக்கொள்ளும். ரப்பர் போல மேலே வாகனங்கள் செல்ல செல்ல சேதம் அடைந்த பகுதிகளை நிரப்பிக்கொள்ளும். இது சாலைகளின் ஆயுளை அதிகரிக்கவும், சாலை பராமரிப்புக்கான தேவையை குறைக்கவும், அதே நேரத்தில் போக்குவரத்து இடையூறுகளைக் குறைக்கவும், விபத்துகளை தடுக்கவும் முடியும் என்று கூறப்படுகிறது.
இந்த தொழில்நுட்பமானது asphalt உள்ளே சிறிய இரும்பு மற்றும் ரப்பர் அமைப்பை கொண்டது. ஒரு சாலையை எடுத்துக்கொள்ளுங்கள். அதில் இதை வைத்து போடும் போது.. அது உடையும் போது சூடாகி அதில் ஒரு மின்சாரம் போன்ற ஆற்றல் பாயும். இதன் மூலம் உடைந்த பகுதி மீண்டும் பழைய நிலைக்கு திரும்பும். அதாவது சாலை தானாக பழைய நிலைக்கு திரும்பும். இது விரிசல்களை திறம்பட சரிசெய்து, குழிகள் உருவாவதைத் தடுக்கிறது.
சாலைப் பராமரிப்பில் புரட்சியை ஏற்படுத்தக்கூடிய இந்த புதுமையான தொழில்நுட்பத்தை இந்திய தேசிய நெடுஞ்சாலை ஆணையம் (NHAI) நாட்டில் ஆராய்ந்து வருகிறது. விரைவில் இது பயன்பாட்டிற்கு வரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
அமைச்சர் என்ன சொன்னார்?: சமீபத்தில் நாட்டின் உள்கட்டமைப்பு மேம்பாடு குறித்து பேசிய அமைச்சர் நிதின் கட்கரி, இந்தியாவுக்கு மூலதன முதலீடு மற்றும் தொழில் வளர்ச்சி தேவை என்றால், நாட்டில் நல்ல உள்கட்டமைப்பு இருக்க வேண்டும். மத்திய அரசு உள்கட்டமைப்பு மேம்பாட்டிற்கு அதிக முக்கியத்துவம் அளித்து வருகிறது. நாடு முழு இந்த வருடம் பல புதிய எக்ஸ்பிரஸ் வேக்கள் திறக்கப்பட உள்ளன.
இந்த புதிய எக்ஸ்பிரஸ் வேக்கள் திறக்கப்பட்ட பின் நாட்டின் பொருளாதாரம் மொத்தமாக மாறும். முக்கியமாக நாட்டின் நெடுஞ்சாலை நெட்வொர்க் 2024 ஆம் ஆண்டு இறுதிக்குள் அமெரிக்காவின் சாலை நெட்வொர்க்கிற்கு சமமாக மாறும்.
திறக்கப்படும் துவாரகா சாலை: துவாரகா விரைவுச் சாலையின் 18.7 கிமீ பகுதி இன்னும் இரண்டு வாரங்களில் போக்குவரத்துக்கு திறக்கப்படும் என்று மத்திய சாலைப் போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைத் துறை அமைச்சர் நிதின் கட்கரி தெரிவித்துள்ளார்.
எக்ஸ்பிரஸ்வேயின் குர்கான் பகுதி முதல் கட்டமாக திறக்கப்பட உள்ளது. எட்டு வழிகள் கொண்ட விரைவு சாலையானது , புதிய செக்டார் பகுதியில் இருந்து NH-8 சாலையை இணைக்கும் வகையிலும், குர்கான் நகரின் பிற பகுதிகளுக்கு பயணத்தை எளிதாக்கும் வகையிலும் திறக்கப்பட உள்ளது.
டெல்லியில் மீதமுள்ள 10 கிலோமீட்டர் எக்ஸ்பிரஸ்வே முடிக்க இன்னும் ஐந்து முதல் ஆறு மாதங்கள் ஆகும் என்று அறிவிக்கப்பட்டு உள்ளது. தற்போது 1 மணி நேரமாக உள்ள 18.7 கிமீ தூரம் இந்த சாலை திறக்கப்பட்ட பின் 20 - 25 நிமிடம் ஆகும் என்று அறிவிக்கப்பட்டு உள்ளது. எட்டு வழிகள் கொண்ட விரைவு சாலையாக இது கட்டப்பட்டு உள்ளது.
விரைவுச் சாலை கட்டுமானம்; விரைவு சாலைகள் : விரைவு சாலைகள் இந்தியாவின் மிக உயர்ந்த சாலைகள் ஆகும். ஜூலை 2023 நிலவரப்படி, இந்தியாவில் மொத்தம் 5,173 கிமீ (3,214 மைல்) அதிவேக நெடுஞ்சாலைகள் அதாவது எக்ஸ்பிரஸ் வே உள்ளன. இவை பெரும்பாலும் 6, வழி அல்லது 8 வழி சாலைகள் ஆகும்.
இங்கே அதிகபட்சம் 120 கிமீ வேகத்தில் கூட செல்ல முடியும். கட்டுமானத்தில் உள்ள டெல்லி-மும்பை விரைவுச்சாலை இந்தியாவின் மிக நீளமான விரைவுச்சாலையாக இருக்கும். இது 2026 இறுதிக்குள் முடிக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.
-
அமெரிக்காவால் ஈரானுக்கு தங்க புதையல்.. ஹார்முஸ் ஜலசந்தியில் கப்பல்களுக்கு டோல்கேட்.. பெரிய திட்டம் -
"தங்கம் விலை டமால்.. ரூ.12,500 வரை கூட போகலாம்.." ஆனந்த் சீனிவாசன் மெகா இன்ப செய்தி -
சிறகடிக்க ஆசை: முத்து மீனா வாழ்க்கையில் நடந்த நல்ல விஷயம்.. சந்தோஷத்தில் விஜயா! ரோகிணி செய்த செயல் -
ஆட்டத்தை ஆரம்பிச்சிட்டாரு அமித் ஷா.. எடப்பாடி பழனிசாமிக்கு 165 சீட் தானா? லீக்கானது உத்தேச பட்டியல் -
கூட்டுறவு வங்கிகளில் நகைக்கடன் தள்ளுபடி யாருக்கெல்லாம் உறுதி? இந்த ஒரு தப்பு மட்டும் செஞ்சுடாதீங்க -
அப்போவே வார்னிங் கொடுத்தேன்.. அமெரிக்காதான் கேட்கல! போட்டு உடைத்த கத்தாரின் எரிசக்தித்துறை அமைச்சர் -
"பாகிஸ்தானுக்கு தண்ணீர் கொடுக்க முடியாது.." சர்வதேச அரங்கில் லெப்ட் அண்ட் ரைட் வாங்கிய இந்தியா! -
கண்ட்ரோல் எடுத்த அமித் ஷா.. பவர் போன எடப்பாடி.. இனி டெல்லி தர்பார்.. அதிமுகவின் பிடி நழுவுகிறது? -
2 கேஸ் சிலிண்டர் இருக்கா? கேஸ் கனெக்ஷனில் செய்ய வேண்டிய ஒரு மாற்றம்.. இல்லாவிட்டால் ரத்தாக வாய்ப்பு -
மோடியின் பணமதிப்பிழப்பால் மாடியிலிருந்து விழுந்து செத்தாரா பாகிஸ்தானின் ஜாவேத் கானானி? துரந்தர் 2! -
1 மணி ஃப்ளைட்.. இரவே வீடியோ கால்.. தாமரையில் போட்டியிடுங்க.. டிடிவி, அன்புமணிக்கு அமித் ஷா செக்? -
என்னது தனித்து போட்டியா? உங்க சீட்டே வேண்டாம்.. விஜய் முடிவால் தெறித்து ஓடும் தவெக நிர்வாகிகள்












Click it and Unblock the Notifications