உணர்வுகளின் பிரமாண்டம்.. விஸ்வரூபம் எடுத்த "ஆதித்யன் 2".. நூல் விமர்சனம்
முதல் பிரமாண்டம்.. முற்றிலும் பிரமாண்டம் என்பார்கள்.. அதுபோல அமைந்திருக்கிறது எழுத்தாளர் சுசரிதாவின் ஆதித்யன் 2 வது பாகம்.
Recommended Video
தனது பிரமாண்ட எழுத்தால் முதல் பாகத்திலேயே முத்திரை பதித்தவர் எழுத்தாளர் சுசரிதா. ஆதித்யன் என்ற சரித்திரப் புதினத்தின் மூலம் அனைவரின் மூக்கின் மேலும் விரல் வைத்து ஆச்சரியத்தில் மூழ்கடித்தவர், தனது 2வது பாகத்தில் இன்னும் ஒரு படி மேலே உயர்ந்து விஸ்வரூபம் காட்டியுள்ளார்.

ஆதியன் முதல் பாகத்தில் காதலும், வீரமும் துள்ளி விளையாடின என்றால் 2வது பாகத்தில் உணர்ச்சிகளை மோத விட்டு வித்தை காட்டியுள்ளார்.
ஆதித்யன் முதல் பாகத்தைப் படித்தவர்களுக்கு அதன் 2வது பாகமும் திகட்டாத தெள்ளமுதமாக மேலும் சுவைக்கும் என்பதில் சந்தேகம் இல்லை. (Book Review: மின்னல் மொழி நடை.. புத்தகப் பிரியர்களுக்கு பிரமாண்ட வேட்டை.. ஆதித்யன்!?)
முதல் பாகத்தில் இன்பயாழினி - ஆதித்யன் இடையிலான சந்திப்பு, காதல், ரகசிய மணம், தாய் பார்த்து நடத்தி வைத்த மனதுக்கு ஒவ்வாத வாள் மணம் என நீண்ட நெடிய சம்பவங்களைத் தொகுத்தளித்திருந்த சுசரிதா, 2வது பாகத்தில் வேறு விதமான சம்பவங்களைக் கோர்த்தெடுத்திருக்கிறார்.
இன்பாவையும், அவளது நினைவுகளையும் பிரிந்து அரண்மனைக்கு வரும் ஆதித்யன் சந்திக்கும் மன ரீதியான போராட்டங்களே இந்த பாகத்தின் முக்கிய பொருளாக அமைந்துள்ளது. ஆதித்யனை வாள் மணம் புரிந்து மகாராணியாக அரண்மனைக்குள் வரும் வேதவல்லியின் காமப் போராட்டம், மகனின் மனதைப் புரிந்து கொள்ளாமல் தாய் நடத்தும் பாசப் போராட்டம், ஆதித்யனைப் பிரிந்து இன்பா நடத்தும் உணர்வுப் போராட்டம்.. என்று 2வது பாகத்தின் முதல் அத்தியாயம் முதல் கடைசி வரை விறுவிறுப்புக்குப் பஞ்சமில்லை.
காதல், காமம், தாய்மை என எல்லாம் கலந்து ஆதித்யனை மட்டுமல்ல படிக்கும் நம்மையும் கூட உணர்வுக் கடலுக்குள் மூழ்கடித்து விடுகிறார் சுசரிதா. வார்த்தை ஜாலங்கள், தமிழ்ப் புலமை, சங்க கால இலக்கியங்களின் மேற்கோள் என்று கை தேர்ந்த எழுத்தாளர்களுக்கு மட்டுமே வசமாகக் கூடிய அத்தனை புலமையையும் கொண்டு பிரமாண்டம் காட்டியுள்ளார் சுசரிதா.
இந்த 2ம் பாகத்தின் முக்கிய அம்சமே வேதவல்லி குறித்த அத்தியாயங்களும், பின்னர் வரும் போர்க்காட்சிகளும்தான். வேதவல்லியை வைத்து தனியாகவே ஒரு விருந்து படைக்கலாம் என்று சொல்லக் கூடிய அளவுக்கு அவளது கேரக்டரை அத்தனை அற்புதமாக வடிவமைத்துள்ளார் சுசரிதா. நிச்சயம் அவரைப் பாராட்டியாக வேண்டும்.
கணவருடன் உறவு கொள்ள வேதவல்லி மேற்கொள்ளும் தந்திரங்கள், மறுபக்கம் தனது மகனுக்கு வாரிசை உருவாக்க தாய் போடும் திட்டங்கள், பிள்ளையைக் காப்பாற்ற ஒரு தாயாக இன்பா படும் அவஸ்தைகள், மனைவி அருகே இருந்தும் அவளை உணர்ந்தும் கூட முழுமையாக கூட இயலாமல் தவிக்கும் ஆதித்யன், துரோகங்கள், மோதல்கள், சண்டைகள், சவால்கள் என சகலத்தையும் கலந்து ஒரு வரலாற்றுக் காவியத்தை ஜஸ்ட் லைக் தட் கொடுத்து அசத்தியிருக்கிறார் சுசரிதா.
மொத்தம் 80 அத்தியாயங்கள். முதல் அத்தியாயம் முதல் 80வது அத்தியாயம் வரை களைப்பே இல்லாமல் படிக்க முடியும்.. அது இன்னும் வியப்பைக் கூட்டுகிறது. எங்குமே போரடிக்காமல், ஒரு நதி போல அழகாக வளைந்து, நெளிந்து செல்கிறது இந்த புதினம்.. நிச்சயம் அனைவரும் படித்து ரசிக்க வேண்டிய ஒரு அருமையான நூல்தான் ஆதித்யன் பாகம் 2.
அமேஜானில் இதைப் படிக்கலாம்.. இணைப்பில் சென்று படியுங்கள்.. இந்த வரலாற்றுக் காவியத்தை நுகர்ந்து இன்புறுங்கள்.
-
சிவி சண்முகம் சர்ச்சை பேச்சு.. இன்ஸ்டா போஸ்டில் நயன்தாரா பதிலடி.. இப்படி சொல்லிட்டாரே! குவியும் கமெண்ட்ஸ்! -
மொத்த பவரையும் காட்டிய இந்தியா.. கச்சா எண்ணெயுடன் குஜராத் வந்தது இந்திய டேங்கர் கப்பல்! -
PHH, AAY ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஷாக்! அதிரடியாக தூக்கப்பட்ட ரேஷன் கார்டுகள்! 41.41 லட்சம் குளோஸ்! -
அன்று 10 ஆயிரம் போட்டிருந்தால் இன்று ஒரு கோடி.. ஆச்சரியமாக வளர்ந்த பிரபல நிறுவனம் -
திருவண்ணாமலை கிரிவலப் பாதையில் கண்ட காட்சி.. ஆடிப்போன பொதுமக்கள்.. அதிர வைத்த ஊழியர்கள் -
கடன் சுமை.. வீட்டை ஜப்தி செய்த அதிகாரிகள்.. தெருவோரம் தூங்கிய சீரியல் நடிகை.. நெகிழ வைத்த மாற்றம்! -
29 தொகுதிகள்.. காங்கிரஸை விட 1 கூடுதலாக.. நாளை மறுநாள் அதிமுக - பாஜக ஒப்பந்தம் கையெழுத்து? -
”90 சீட், 2.5 வருடம் முதல்வர்” பேரம் பேசுனாங்க.. விஜய் சொன்ன ஒரே வார்த்தை! போட்டு உடைத்த ஆதவ் அர்ஜுனா -
சீனாவுக்குச் சென்ற ரஷ்ய கப்பல்கள் திடீரென இந்தியா நோக்கி யூ-டர்ன்! Oil வருது -
சிறகடிக்க ஆசை: மீனா கண்ட காட்சி.. மீண்டும் ஜெயித்த ரோகிணி.. விஜயா வீட்டில் கொண்டாட்டம்! கடுப்பில் மனோஜ் -
ரெடியாகும் முக்கோண சாலை.. கோவை - திருச்சி - கரூர்.. தமிழ்நாட்டின் மிக முக்கிய பசுமை வழிச்சாலை! -
இந்தியாவில் இறங்கிய 7 வெளிநாட்டவர்.. கைமாறிய ஆயுதங்கள்.. சத்தமே இல்லாமல் தட்டி தூக்கிய என்ஏஐ!












Click it and Unblock the Notifications