Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

Sundar C: தலைவர் 173 படத்தில் இருந்து வெளியேற உண்மையான காரணம் இதுதான்! ரகசியங்களை உடைத்த சுந்தர் சி

Subscribe to Oneindia Tamil

சென்னை: தமிழ் சினிமாவின் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிக்க இருக்கும் 173-ஆவது படம் குறித்து கடந்த சில மாதங்களாக பல்வேறு தகவல்கள் வெளியாகி வந்தன. குறிப்பாக அந்த படத்தை முதலில் இயக்கப்போவது சுந்தர் சி என்று கூறப்பட்ட நிலையில், பின்னர் அவர் அந்த திட்டத்தில் இருந்து விலகியதாக தகவல் வெளியானது. ஆனால் அவர் ஏன் அந்த படத்தில் இருந்து விலகினார் என்பது குறித்து இதுவரை தெளிவான விளக்கம் எதுவும் வெளியாகவில்லை.

இந்த நிலையில் தற்போது முதன்முறையாக இயக்குனர் சுந்தர் சி அந்த விஷயத்தைப் பற்றி வெளிப்படையாக பேசியுள்ளார். அவர் கூறிய விளக்கம் தற்போது சினிமா வட்டாரத்திலும் ரசிகர்களிடமும் கவனத்தை ஈர்த்துள்ளது.

Rajinikanth Sundar C Thalaivar 173

ரஜினியுடன் படம் இயக்கும் வாய்ப்பு

தமிழ் சினிமாவில் பல வெற்றி படங்களை இயக்கியவராக சுந்தர் சி இருக்கிறார். வணிக ரீதியாக வெற்றி பெறும் படங்களை உருவாக்குவதில் தனி பாணி கொண்ட இயக்குனராகவும் அவர் அறியப்படுகிறார். இப்படிப்பட்ட நிலையில் ரஜினிகாந்தின் 173-ஆவது படத்தை இயக்கும் வாய்ப்பு சுந்தர் சிக்கு கிடைத்தது என்று சில மாதங்களுக்கு முன்பு செய்திகள் வெளியானது.

இந்த தகவல் வெளியாகியதும் ரசிகர்கள் மத்தியில் பெரிய எதிர்பார்ப்பு உருவானது. ஏனெனில் ரஜினியின் ஸ்டைலும் சுந்தர் சியின் கமர்ஷியல் பாணியும் சேர்ந்தால் ஒரு பெரிய மாஸ் படம் உருவாகும் என்று பலரும் எதிர்பார்த்தனர்.

திடீரென திட்டத்தில் மாற்றம்

ஆனால் அந்த எதிர்பார்ப்பு நீண்ட நாட்கள் நீடிக்கவில்லை. சில காலத்திற்குப் பிறகு அந்த திட்டத்தில் இருந்து சுந்தர் சி விலகிவிட்டார் என்ற செய்தி வெளியானது. இதற்குப் பிறகு அந்த படத்தை வேறு இயக்குனர் இயக்கப்போவதாகவும் கூறப்பட்டது.

இந்த மாற்றம் ரசிகர்களுக்கு ஆச்சரியமாக இருந்தது. ஏன் சுந்தர் சி அந்த படத்தை இயக்கவில்லை? அவரே விலகினாரா அல்லது வேறு காரணமா? என்ற கேள்விகள் தொடர்ந்து எழுந்தன.

முதல் முறையாக விளக்கம்

இந்த சந்தேகங்களுக்கு தற்போது சுந்தர் சி பதில் அளித்துள்ளார். ஒரு சமீபத்திய பேட்டியில் பேசிய அவர், ரஜினிகாந்துடன் படம் செய்யும் வாய்ப்பு கிடைத்தது என்பது எனக்கு மிக பெரிய விஷயம். அவருடன் பணியாற்றுவது எந்த இயக்குனருக்கும் ஒரு கனவு. ஆனால் அந்த படத்திற்கான கதை, தயாரிப்பு திட்டம், நேரம் போன்ற சில விஷயங்களில் மாற்றங்கள் ஏற்பட்டன. அதே நேரத்தில் நான் ஏற்கனவே ஒப்புக்கொண்டிருந்த சில படங்களும் இருந்தன.

அந்த காரணங்களால் அந்த திட்டத்தில் இருந்து நான் விலக வேண்டிய நிலை ஏற்பட்டது. இதில் எந்தவித பிரச்சனையும் இல்லை. சிலர் நான் தலைவர் 123 திரைப்படத்திலிருந்து விலக காரணம் சங்கமித்ரா படத்தை தொடங்க இருப்பதால்தான் நான் எந்த முடிவு எடுத்தேன் என்று சொல்கிறார்கள். ஆனால் அது உண்மை இல்லை. அடுத்த இரண்டு வருடங்களுக்கு ஏற்கனவே கமிட்டான படங்கள் இருக்கிறது. மூக்குத்தி அம்மன் 2 படத்தின் படப்பிடிப்பு முடிந்து தற்போது சிஜி பணிகள் நடைபெற்று வருகிறது. ரஜினி சார் மீது எனக்கு மிகுந்த மரியாதை இருக்கிறது. எதிர்காலத்தில் அவருடன் படம் செய்யும் வாய்ப்பு வந்தால் கண்டிப்பாக செய்வேன் என்று அவர் கூறியுள்ளார்.

வதந்திகளுக்கு முற்றுப்புள்ளி

சுந்தர் சியின் இந்த விளக்கம் வெளியாகிய பிறகு, ரஜினிகாந்த் மற்றும் சுந்தர் சி இடையே எந்தவித கருத்து வேறுபாடும் இல்லை என்பது தெளிவாகியுள்ளது. முன்பு சமூக வலைத்தளங்களில் பலரும் பலவிதமான காரணங்களை கூறி வந்த நிலையில், தற்போது இயக்குனர் தானே விளக்கம் அளித்ததால் அந்த வதந்திகளுக்கும் முற்றுப்புள்ளி வைக்கப்பட்டுள்ளது.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+