Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

நெஞ்சை உலுக்கும் சம்பவம்.. மியான்மரில் குழந்தைகள் உள்பட 30 பேர் ஏரித்துக்கொலை.. ராணுவம் அட்டுழியம்!

Subscribe to Oneindia Tamil

யாங்கூன்: மியான்மர் நாட்டில் ஆங் சான் சூகி தலைமையிலான ஜனநாயக ரீதியிலான ஆட்சி நடந்து வந்தது. ஆனால் தேர்தலில் முறைகேடு நடந்து இருப்பதாக கூறி அந்த நாட்டின் ராணுவம் தொடர்ந்து குற்றம்சாட்டி வந்தது.

இந்த ஆண்டு தொடக்கத்தில் ராணுவம் அதிரடியாக ஆங் சான் சூகி ஆட்சியை கவிழ்த்து தங்கள் வசம் கைப்பற்றியது. தொடர்ந்து ஆங் சான் சூகி, அந்த நாட்டின் அதிபர் வின் மைண்ட் உள்பட 100க்கும் மேற்பட்ட அரசியல் தலைவர்களை ராணுவம் தடுப்புக்காவலில் வைத்தது.

ராணுவ ஆட்சி

ராணுவ ஆட்சி

மியான்மர் மக்கள் ராணுவத்தின் செயலை துளி கூட ஏற்றுக் கொள்ளவில்லை. எங்களுக்கு நாங்கள் தேர்ந்தெடுத்த மக்கள் ஆட்சிதான் வேண்டும், அடக்குமுறை கொண்ட ராணுவ ஆட்சி வேண்டாம் என்று கோரி அவர்கள் பல மாதங்களாக போராட்டம் நடத்தி வருகின்றனர். இப்படி ஜனநாயக ரீதீயில் போராட்டம் நடத்தி வரும் அப்பாவி மக்கள் மீது தாக்குதல் நடத்தி அவர்களை அநியாயமாக கொன்று விதித்து வருகிறது ராணுவம்.

30-க்கும் மேற்பட்ட உடல்கள்

30-க்கும் மேற்பட்ட உடல்கள்

ரோஹிங்கிய முஸ்லிம்கள் மீதும், அங்குள்ள சிறுபான்மையினர் மக்கள் மீதும் ராணுவம் தொடர்ந்து தாக்குதல் நடத்தி வருகிறது. இந்த நிலையில் மியான்மரின் கயாவில் குழந்தைகள் உள்பட 30-க்கும் மேற்பட்டவர்களை ராணுவம் கொன்று விட்டதாக அதிர்ச்சி தகவல் வெளியாகி உள்ளது. கயா மாநிலத்தில் ஹ்ப்ருசோ நகரத்தின் மோ சோ கிராமத்திற்கு அருகில் வாகனங்களில் எரிந்த நிலையில் 30-க்கும் மேற்பட்ட உடல்கள் கண்டெடுக்கப்பட்டன.

மனித உரிமை அமைப்பு குற்றச்சாட்டு

மனித உரிமை அமைப்பு குற்றச்சாட்டு

இவர்களில் குழந்தைகள், முதியவர்கள் பலர் உள்ளனர். இவர்கள் அனைவரும் மியான்மர் ராணுவத்தால் கொல்லப்பட்டு எரிக்கப்பட்டவர்கள் என்று 'காரென்னி' எனப்படும் மனித உரிமை அமைப்பு குற்றம்சாட்டி உள்ளது. ''மனித உரிமைகளை மீறும் மனிதாபிமானமற்ற மற்றும் கொடூரமான இந்த கொலையை வன்மையாகக் கண்டிக்கிறோம்'' என்று காரென்னி அமைப்பு பேஸ்புக் பதிவில் கூறியுள்ளது.

நெஞ்சை உலுக்கும் புகைப்படங்கள்

நெஞ்சை உலுக்கும் புகைப்படங்கள்

வாகனங்களில் எரிந்த நிலையில் உடல்களின் புகைப்படங்களை மனித உரிமைகள் குழு மற்றும் உள்ளூர் ஊடகங்கள் வெளியிட்டுள்ளன. கொல்லப்பட்ட அனைவரும் பயங்கரவாதிகள் என்றும் ஆயுதங்கள் வைத்திருந்ததாகவும் ராணுவ தரப்பில் இருந்து கூறப்பட்டதாக தெரிகிறது. மியான்மர் ராணுவத்துக்கு எதிராக நாடு முழுவதும் பல உள்ளூர் எதிர்ப்பு சக்திகள் உருவாகியுள்ளன. அவர்களை துரோகிகள் அல்லது பயங்கரவாதிகள் என்று முத்திரை குத்தி வரும் ராணுவம், அவர்கள் மீது தாக்குதல் நடத்தி வருகிறது.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+