வந்தது அறிவிப்பு.. தெற்கு ரயில்வேயில் வேலை.. 2,860 பணியிடங்கள்.. உடனே அப்ளை பண்ணுங்க
சென்னை: தெற்கு ரயில்வேயில் 2,860 பயிற்சி பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பு வெளியாகியுள்ளது. இதற்கான கல்வி தகுதி என்ன?, விண்ணப்பிப்பது எப்படி உள்ளிட்ட விவரங்களை இங்கே விரிவாக பார்க்கலாம்.
இந்திய ரயில்வே துறையில் காலியாகும் பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பு அவ்வப்போது வெளியிடப்பட்டு வருகிறது. அதேபோல அப்ரண்டீஸ் எனப்படும் பயிற்சி பணியிடங்களுக்கான அறிவிப்பும் குறிப்பிட்ட கால இடைவெளியில் வெளியிடப்பட்டு வருகின்றன. இந்த நிலையில், தெற்கு ரெயில்வேயில் காலியாக உள்ள 2,860 பயிற்சி பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பு வெளியாகியுள்ளது. இந்த பணியிடங்களுக்கு தேவையான கல்வி தகுதி, வயது வரம்பு உள்ளிட்ட விவரங்களை இங்கே பார்க்கலாம்.

பணியிடங்கள் விவரம்: கேரேஜ் ஒர்க்ஸ், பெரம்பூர் -1357 (பணியிடங்கள்), மத்திய பணிமனை, கோல்டன் ராக் - 679 சிக்னல் & டெலிகாம் பணிமனை; 824 என 2,860 பணியிடங்கள் மண்டல வாரியாக நிரப்பபடுகின்றன. ஃபிட்டர், டர்னர், வெல்டர், வெல்டர் (ஜி&இ), மெஷினிஸ்ட், எலக்ட்ரீஷியன், பெயிண்டர், எலக்ட்ரானிக் மெக்கானிக், கார்பெண்டர், வயர்மேன், பிளம்பர், டீசல் மெக்கானிக், COPA உள்ளிட்ட பணிகளில் அப்ரெண்டீஸ் டிரெயினிங் அளிக்கப்படும்.
10 ஆம் வகுப்பு, துறை சார்ந்த பிரிவில் ஐடிஐ ஆகிய படிப்புகளை படித்து இருக்க வேண்டும். சில பணியிடங்களுக்கு 12 ஆம் வகுப்பு படித்திருக்க வேண்டும். இது குறித்த விவரங்களை விண்ணப்பதாரர்கள் கீழே கொடுக்கப்பட்ட தேர்வு அறிவிப்பை பார்த்து தெரிந்து கொள்ளலாம்.
வயது வரம்பு: 15 வயது முதல் 24 வயது வரை உள்ளவர்கள் விண்ணப்பிக்கலாம். அரசு விதிகளின்படி வயது வரம்பில் தளர்வு உண்டு. அதாவது ஒபிசி பிரிவினருக்கு 3 ஆண்டுகளும் எஸ்.சி / எஸ்டி பிரிவினருக்கு 5 ஆண்டுகளும் மாற்றுத்திறனாளிகளுக்கு 10 ஆண்டுகளும் வயது வரம்பில் தளர்வு உண்டு.
விண்ணப்பிப்பது எப்படி?: ஆர்வமும் தகுதியும் உள்ள விண்ணப்பதாரர்கள் ஆன்லைன் மூலமாக விண்ணப்பிக்க வேண்டும். விண்ணப்ப கட்டணமாக ரூ.100 செலுத்த வேண்டும். ஓராண்டு முதல் 2 ஆண்டுகள் வரை பயிற்சி அளிக்கப்படும். பயிற்சியின் போது ஊக்கத்தொகை அளிக்கப்படும்.
விண்ணப்பிக்க கடைசி நாள்: ரயில்வே தேர்வு வாரிய விதிகளின்படி ஊக்கத்தொகை வழங்கப்படும். ஒப்பந்தப்படி அப்ரெண்டீஸ் பணிக்காலம் முடிந்த பிறகு பயிற்சியில் இருந்து விடுவிக்கப்படுவார்கள். விண்ணப்பிக்க வரும் 28.02.2024 கடைசி நாளாகும். தேர்வு அறிவிப்பை படிக்க இந்த இணையதள லிங்கை கிளிக் https://iroams.com/RRCSRApprentice24/notifications/CW_PONMALAI_ACTAPP_Notification_2024.pdf செய்யவும்.
-
IT Jobs: அரியர்ஸ் இருந்தாலும் வேலை.. சென்னை HCL-யில் நாளை முதல் 3 நாள் இண்டர்வியூ -
IT Jobs: டிகிரி மட்டுமே போதும்.. சென்னை எச்சிஎல் நிறுவனத்தில் வேலை.. ஏப்ரல் 6ல் இண்டர்வியூ -
நீலகிரி அருவங்காடு தொழிற்சாலையில் வேலை.. இன்ஜினியரிங் முடித்தவர்களுக்கு சூப்பர் சான்ஸ் -
30 வருடமாக "டிமிக்கி" கொடுத்த பாகிஸ்தான்.. உடனே ரூ.32,459 கோடி கடனை தர வேண்டும்.. UAE விதித்த கெடு -
Jayalalitha: நானும் ஜெயலலிதாவும் சர்ச் பார்க் பள்ளியில்தான் படித்தோம்! மணப்பாறையில் கனிமொழி பேச்சு -
ரஷ்ய கஜானாவில் அடி.. இந்தியாவுக்கு ஓடி வந்த புடின் அரசு.. LPG பிரச்சனைக்கு வழிபிறந்தது? -
இந்தோனேஷிய கடலில் அது பாட்டுக்கு போகுது.. உலகமே வியப்பில் உறைந்திருச்சு! விலகிய 40 கோடி வருஷ மர்மம் -
விலகினார் திருமாவளவன்.. சட்டசபை தேர்தலில் போட்டியில்லை என அறிவிப்பு.. பின்வாங்கியது ஏன்? விளக்கம் -
ஈரான் போரை வைத்து பணம் பார்க்கும் டிரம்ப் வாரிசுகள்.. நடுவில் சிக்கிக்கொண்ட அரபு நாடுகள்! -
சிங்காநல்லூர் காங்கிரஸ் வேட்பாளர் ஶ்ரீநிதி அண்ணாமலை ஆதரவாளராமே.. போராட்டத்தில் குதித்த கதர்கள் -
அமெரிக்க கோட்டையில் ஓட்டை! ஈரானின் 'துல்லிய' ட்ரோன் தாக்குதல்: சிதறிய சி.ஐ.ஏ ரகசியங்கள்! -
Sundar C: ஏங்க கனிமொழி மட்டும் தூத்துக்குடிக்காரங்களா? நானும் மதுரைக்காரன்தான்! சுந்தர் சி விமர்சனம்












Click it and Unblock the Notifications