எஸ்எஸ்எல்சி படித்தவர்களுக்கு இந்திய அஞ்சல் துறையில் வேலையிருக்கு அப்ளை பண்ணுங்க
அஞ்சல் துறையில் GDS எனப்படும் கிராம அஞ்சல் பணியாளர்கள் பணிக்கு ஆட்கள் தேவைப்படுகிறார்கள். எஸ்எஸ்எல்சி படித்தவர்கள் விண்ணப்பிக்கலாம்.
சென்னை: இந்திய அஞ்சல் துறையில் வேலைவாய்ப்புகள் 2020 (India Post Office).கிராமின் தக் சேவக் பணியாளர்கள் Multi-Tasking Staff பணியாளர்களை நியமிப்பதிற்கான அறிவிப்பு வெளியாகியுள்ளது. ஆர்வமும் தகுதியும் உள்ளவர்கள் அதிகாரபூர்வ வலைதளத்தில் www.indiapost.gov.in விண்ணப்பிக்கலாம். India Post Recruitment 2020 விவரங்கள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன.
பணி:1
Gramin Dak Sevaks (GDS) கிராம அஞ்சல் பணியாளர்
காலியிடங்கள்: 442
கல்வித்தகுதி: 10ஆம் வகுப்பு
வயது: 18 முதல் 40 வயது வரை
சம்பளம்: மாதம் ரூ.10ஆயிரம் முதல் ரூ.14.500 வரை
பணியிடம்: ஜம்மு & காஷ்மீர்
தேர்வு செய்யப்படும் முறை: நேர்காணல், எழுத்து தேர்வு
விண்ணப்பிக்க கடைசி நாள்: 05 ஆகஸ்ட் 2020
விண்ணப்ப கட்டணம்: ரூ. 100/-
பணி - 2
பணி: Gramin Dak Sevaks (GDS) கிராம அஞ்சல் பணியாளர்
காலியிடங்கள்: 3262
கல்வித்தகுதி: 8ஆம் வகுப்பு, 10ஆம் வகுப்பு
வயது: 22.06.2020 தேதியின்படி முறையே 18 வயது முதல் 40 வயது வரை
சம்பளம்: மாதம் ரூ.10ஆயிரம் முதல் ரூ.14.500 வரை
பணியிடம்: ராஜஸ்தான்
தேர்வு செய்யப்படும் முறை: நேர்காணல், எழுத்து தேர்வு
தொடக்க தேதி: 22 ஜூன் 2020
விண்ணப்பிக்க கடைசி நாள்: 21 ஜூலை 2020
விண்ணப்ப கட்டணம் ரூ.100 ஆண்கள் OC/OBC/EWS Male / trans-man ஆகியோருக்கு பொருந்தும். பெண்கள், திருநங்கைகள் ஆகியோருக்கு விண்ணப்கட்டணம் தேவையில்லை.
OC/OBC/EWS Male / trans-man: Rs.100/-
All Female / trans-woman candidates as well PwD candidates: No. Fee
பணி: Multi-Tasking Staff மல்ட்டி டாஸ்கிங் ஸ்டாப்
காலியிடங்கள்: 80
கல்வித்தகுதி: 8th, 10th
வயது: 22.06.2020 தேதியின்படி 18 வயது முதல் 40 வயது வரை
சம்பளம்: மாதம் ரூ.10ஆயிரம் முதல் ரூ.14 ஆயிரத்து 500 வரை
பணியிடம்: கேரளா
தேர்வு செய்யப்படும் முறை: நேர்காணல், எழுத்து தேர்வு (competitive examination)
தொடக்க தேதி: 26 ஜூன் 2020
விண்ணப்பிக்க கடைசி நாள்: 10 ஜூலை 2020
கிராமின் தக் சேவக்(GDS) எனப்படும் அஞ்சல் துறையின் துறை சாராத பணியாளர்கள் அமைப்பு 150 ஆண்டுகளுக்கு முன் உருவாக்கப்பட்டது. கிராம அஞ்சல் பணியாளர்கள், கிளை அஞ்சல் அதிகாரிகள் ஆகியோரால் இது செயல்பட்டு வருகிறது. கிளை அஞ்சல் அதிகாரிகள் அல்லாத கிராம அஞ்சல் பணியாளர்கள், தலைமை அஞ்சல் அலுவலகங்களிலும், துணை அஞ்சல் அலுவலகங்களிலும் பணியாற்றி வருகிறார்கள். இந்தப் பணியாளர்கள் தங்களது 65வது வயது வரை பணியில் இருப்பார்கள். ஆர்வமும் தகுதியும் உள்ளவர்கள் இந்திய அஞ்சல் துறை இணையதளம் மூலம் விண்ணப்பிக்கலாம்.