ஜிப்மரில் 433 நர்சிங் அதிகாரிகள் காலிப்பணியிடம்.. சம்பளம் எவ்வளவு தெரியுமா? ஈஸியா விண்ணப்பிக்கலாம்
புதுச்சேரி: புதுச்சேரியில் உள்ள ஜவஹர்லால் முதுகலை கல்வி மற்றும் ஆராய்ச்சி நிறுவனத்தில் (ஜிப்மர்) 433 நர்சிங் அதிகாரி காலிப்பணியிடங்கள் உள்ளதாகவும், இதில் பணிபுரிய விரும்புவோர்கள் விண்ணப்பிக்கலாம் என்றும் ஜிப்மர் அறிவித்துள்ளது.
விண்ணப்பிக்க விரும்புவோர்கள் கீழ்க்கண்ட விதிமுறைகளின்படி அதற்கென வழங்கப்பட்டுள்ள இணையதளத்தில் விண்ணப்பிக்க வேண்டும்.
இந்த விதிமுறைகளில் அரசின் தளர்வுகள் பொருந்தும் என்றும் மருத்துவமனை நிர்வாகம் அறிவித்துள்ளது.

அறிவிப்பு
புதுச்சேரியில் கடந்த 1823ம் ஆண்டிலிருந்து இயங்கி வரும் ஜிப்மர் மருத்துவமனை இந்தியாவில் தலைசிறந்த மருத்துவமனைகளில் ஒன்றாகும். தன்னாட்சி அதிகாரம் பெற்ற இந்த மருத்துவமனை மத்திய அரசின் நிதியுதவியின் மூலம் இயங்கி வருகிறது. இந்நிலையில் இம்மருத்துவமனையில் பணிபுரிய நர்சிங் அதிகாரிகள் தேவையென்றும், விருப்பமுள்ளவர்கள் விண்ணப்பிக்கலாம் என்றும் மருத்துவமனை நிர்வாகம் கூறியுள்ளது. மொத்தம் 433 பணியிடங்கள் காலியாக இருப்பதாக அறிவிக்கப்பட்டுள்ளன.

நிபந்தனைகள்
இதற்கு வரும் டிசம்பர் 1ம் தேதி வரை jipmer.edu.in எனும் இணையதளம் வாயிலாக விண்ணப்பிக்கலாம். விண்ணப்ப கட்டணமாக ரூ.1,500 செலுத்த வேண்டும். ஆதி திராவிடர் மற்றும் பழங்குடியினர் (SC,ST) ஆகியோர் ரூ.1,300 செலுத்தினால் போதுமானது. அதேபோல மாற்றுத்திறனாளிகளுக்கு விண்ணப்ப கட்டணத்திலிருந்து விலக்கு அளிக்கப்பட்டுள்ளது. இதில் விண்ணப்பிப்பவர்களின் வயது 18-35க்குள் இருக்க வேண்டும். விண்ணப்பிப்பவர்கள் இந்திய நர்சிஸ் கவுன்சில் அல்லது மாநில நர்சிங் கவுன்சிலால் அங்கீகரிக்கப்பட்ட ஏதேனும் ஒரு கல்லூரியில் B.Sc Nusrsing அல்லது டிப்ளமோ படித்து முடித்திருக்க வேண்டும்.

தேர்வு
மட்டுமல்லாது நர்சிங் கவுன்சிலில் பதிவு செய்திருக்க வேண்டும். மேலும், குறைந்தபட்சம் 50 படுக்கைகள் கொண்ட ஏதேனும் ஒரு மருத்துவமனையில் இரண்டு ஆண்டுகள் பணியாற்றிய அனுபவம் கொண்டிருக்க வேண்டும். இதில் விண்ணப்பித்துள்ளவர்களுக்கு செய்முறை CBT தேர்வு மற்றும் திறன் சோதனை தேர்வு ஆகியவை நடத்தப்படும். இறுதியாக எழுத்துத் தேர்வின் மதிப்பெண் அடிப்படையில் இவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள். இந்த தேர்வில் 100 கேள்விகள் கேட்கப்படும். ஒவ்வொரு கேள்விக்கும் தலா 4 மதிப்பெண்கள் வழங்கப்படும்.

எப்படி விண்ணப்பிப்பது?
கேள்விகளை பொறுத்த அளவில் பொது அறிவு, பொது நுண்ணறிவு, ஆங்கிலம், கணிதம் ஆகிய பாடங்களிலிருந்து 30% கேள்விகளும், நர்சிங் பாடப்பிரிவிலிருந்து 70% கேள்விகளும் இடம்பெற்றிருக்கும். இவையனைத்தையும் எழுதி முடிக்க 1.30 மணிநேரம் வழங்கப்படும். தேர்வாகும் ஊழியர்கள் மாதம் ரூ.44,900 பெறுவார்கள். விண்ணப்பிக்க விரும்புவோர் மேற்குறிப்பிட்டதைப்போல jipmer.edu.in என்கிற இணையதளத்தில் நுழைந்து, ‘Announcements' - ‘Jobs' எனும் Option-ஐ கிளிக் செய்ய வேண்டும். அதில், Recruitment to the post of Nursing Officer, JIPMER-Puducherry இருக்கும் லிங்கை கிளிக் செய்ய வேண்டும். பின்னர் விண்ணப்ப தகவல்களை நிரப்ப வேண்டும். இறுதியாக கட்டணத்தை செலுத்த வேண்டும்.
-
IT JOBS: சென்னை டிசிஎஸ் அலுவலகத்தில் மார்ச் 21ல் இண்டர்வியூ.. இந்த வேலைவாய்ப்பை மிஸ் பண்ணாதீங்க -
மிகப்பெரிய பிரச்சனையில் இந்தியா.. ஈரான் விஷயத்தை விடுங்க! இதை கவனிக்காம விட்டா ரொம்ப டேஞ்சர் -
MBBS Job: மத்திய அரசில் மருத்துவ அதிகாரி வேலை.. யுபிஎஸ்சி அறிவிப்பு! 1,358 பணியிடங்கள்.. விண்ணப்பிக்க ரெடியா -
இன்னும் சில மணி நேரத்தில் அமெரிக்கா எடுக்கும் முடிவு.. தங்க மார்கெட்டை தாக்க போகும் சூறாவளி! -
ஆதவ் அர்ஜுனா உடைத்த அடுத்த பர்னிச்சர்.. தவெக நிர்மல்குமாரின் பதிவும் ஒரே வார்த்தையில் காலி -
லுலு மால் கோயம்புத்தூர்..நூல் நூலாக தொங்கிய சிக்கன் லாலிபாப்.. அடுத்து கோவையில் நடந்த பெரிய ட்விஸ்ட் -
சிவி சண்முகம் சர்ச்சை பேச்சு.. இன்ஸ்டா போஸ்டில் நயன்தாரா பதிலடி.. இப்படி சொல்லிட்டாரே! குவியும் கமெண்ட்ஸ்! -
மொத்த பவரையும் காட்டிய இந்தியா.. கச்சா எண்ணெயுடன் குஜராத் வந்தது இந்திய டேங்கர் கப்பல்! -
PHH, AAY ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஷாக்! அதிரடியாக தூக்கப்பட்ட ரேஷன் கார்டுகள்! 41.41 லட்சம் குளோஸ்! -
அன்று 10 ஆயிரம் போட்டிருந்தால் இன்று ஒரு கோடி.. ஆச்சரியமாக வளர்ந்த பிரபல நிறுவனம் -
திருவண்ணாமலை கிரிவலப் பாதையில் கண்ட காட்சி.. ஆடிப்போன பொதுமக்கள்.. அதிர வைத்த ஊழியர்கள் -
கடன் சுமை.. வீட்டை ஜப்தி செய்த அதிகாரிகள்.. தெருவோரம் தூங்கிய சீரியல் நடிகை.. நெகிழ வைத்த மாற்றம்!












Click it and Unblock the Notifications