வங்கியில் வேலை.. மாதம் 85 ஆயிரம் வரை சம்பளம்.. யாரெல்லாம் விண்ணப்பிக்கலாம்?
சென்னை: கர்நாடக வங்கியில் காலியாக உள்ள ப்ரோபேஷனரி அதிகாரி (ஸ்கேல்-I)பணியிடங்களை நிரப்ப அறிவிப்பு வெளியாகியுள்ளது. இந்த பணியிடங்களுக்கு யாரெல்லாம் விண்ணப்பிக்கலாம், கல்வி தகுதி என்ன? வயது வரம்பு எவ்வளவு? என்பது பற்றி இங்கே பார்க்கலாம்.
கர்நாடக மாநிலம் மங்களூரை தலைமையிடமாக கொண்டு செயல்படும் கர்நாடகா வங்கி தனியார் வங்கி நிறுவனம் ஆகும். நாடு முழுவதும் 915 வங்கி கிளைகளுடன் இந்த கர்நாடக வங்கி இயங்கி வருகிறது. தமிழகத்திலும் சென்னை, மதுரை உள்ளிட்ட முக்கிய நகரங்களில் இந்த வங்கிக்கு கிளைகள் உள்ளன.

அந்த வகையில் தற்போது, கர்நாடக வங்கியில் காலியாக உள்ள பணியிடங்களை நிரப்ப அறிவிப்பு வெளியாகியுள்ளது. ப்ரோபேசனரி அதிகாரி (ஸ்கேல் -I) பணியிடங்கள் நிரப்பப்படுகிறது. மொத்தம் எத்தனை பணியிடங்கள் என்ற விவரம் தேர்வு அறிவிப்பில் வெளியிடப்படவில்லை.
கல்வி தகுதி: ப்ரோபேஷனரி அதிகாரி பணியிடத்திற்கு விண்ணப்பிக்க விரும்புவர்கள் ஏதாவது ஒரு முதுகலை பட்டம் அல்லது வேளாண் அறிவியல் பிரிவை எடுத்து டிகிரி முடித்தவர்கள், 5 ஆண்டுகள் கொண்ட சட்டப்படிப்பு முடித்தவர்கள் விண்ணப்பிக்க தகுதியுடையவர்கள்.
வயது வரம்பு: 01.11.2024 தேதிப்படி அதிபட்ச வயது வரம்பு 28 ஆக நிர்ணயிக்கப்பட்டுள்ளது. விண்னப்பதாரர்கள் 02.11.1996 க்கு முன்பாக பிறந்தவராக இருத்தல் கூடாது. எஸ்.சி/எஸ்டி பிரிவினருக்கு மட்டும் வயது உச்ச வரம்பில் 5 ஆண்டுகல் தளர்வு உண்டு.
சம்பளம் எவ்வளவு?: தேர்வு செய்யப்படும் விண்ணப்பதாரர்களுக்கு மாதம் ரூ.48,480 முதல் 85,920 வரை வழங்கப்படும். விதிகளின் படி அகவிலைப்படி, ஹெச்.ஆர்.ஏ உள்ளிட்ட சலுகைகளும் வழங்கப்படும்.
தேர்வு முறை: ஆன்லைன் வழியில் எழுத்து தேர்வு அடிப்படையில் தகுதியான விண்ணப்பதாரர்கள் தேர்வு செய்யப்படுவார்கள். ஆன்லைன் வழியிலான தேர்வு 22.12.204 (உத்தேச தேதி) நடத்தப்படும். பெங்களூர், ஹைதராபாத், சென்னை, மும்பை, டெல்லி, கொல்கத்தா, புனே, மங்களூர், தர்வாத்/ ஹுப்பளி, மைசூரு, ஷிவ்மோக்கா, கல்பர்க்கி ஆகிய இடங்களில் தேர்வு நடைபெறும்.
ஆன்லைன் டெஸ்டில் தேர்வு பெறும் விண்ணப்பதாரர்கள் நேர்முகதேர்வுக்கு அழைக்கப்படுவார்கள். நேர்முகத்தேர்வு நடைபெறும் இடம் பின்னர் அறிவிகப்படும்.
தேர்வு செய்யப்படும் விண்ணப்பதாரர்களுக்கு 'இண்டக்ஷன் பயிற்சி திட்டம்'(Induction Training Programme') மங்களூரில் உள்ள பணியாளர்களுக்கான கல்லூரியில் நடைபெறும். இதை வெற்றிகரமாக முடித்த பிறகு பணியாளர், வங்கியின் ஏதேனும் ஒரு கிளையில் நியமனம் செய்யப்படுவார்கள்.
விண்ணப்பிக்க கடைசி நாள்: தகுதியும் ஆர்வமும் உள்ள விண்ணப்பதாரர்கள் ஆன்லைன் வழியாக விண்ணப்பிக்க வேண்டும். விண்ணப்ப கட்டணமாக ரூ.800 செலுத்த வேண்டும். எஸ்.சி/எஸ்.டி பிரிவினருக்கு ரூ.700 செலுத்த வேண்டும். விண்ணப்பிக்க வரும் 10.12.2024 கடைசி நாளாகும். தேர்வு அறிவிப்பினை படித்து தெரிந்து கொள்ள https://karnatakabank.com/careers இந்த லிங்கை கிளிக் செய்யவும்.
-
கங்கணம் கட்டி சதி பண்ணிருக்கீங்க.. சேகர் பாபுவை போனில் வறுத்து எடுத்த ஸ்டாலின்.. ஷாக் தகவல்! -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்! -
ஸ்டாலின் மீதிருந்த கோபம்.. தவெகவிற்கு தாவுகிறார் திமுகவின் இளம் நம்பிக்கை? பெரிய டீமும் போகுது -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
முதல்வர் விஜய்யே நினைத்தாலும் பரந்தூர் விமான நிலையத்தை ரத்து செய்வது மிக கடினம்.. ஏன் தெரியுமா? -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
திடீரென டெல்லியில் டிஜிபி சந்தீப் ராய் ரத்தோர்.. அமித்ஷா – உள்துறை செயலாளருடன் சந்திப்பு.. பின்னணி -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்!












Click it and Unblock the Notifications