கடல் அலையா, அல்லது மனித தலையா.. அப்பப்பா!! என்ன கூட்டம், என்ன கூட்டம்!!
டிடிவி தினகரன் கைதைக் கண்டித்து மதுரை பழங்காநத்தத்தில் அவரது ஆதரவாளர்கள் ஆர்ப்பாட்டம் நடத்தினர்.
மதுரை: டிடிவி தினகரன் கைதைக் கண்டித்து மதுரை பழங்காநத்தத்தில் அவரது ஆதரவாளர்கள் ஆர்ப்பாட்டம் நடத்தினர். இந்த ஆர்ப்பாட்டத்தில் மொத்தம் 10 பேர் கூட பங்கேற்கவில்லை.
கோடை விடுமுறையை கழிக்கும் பள்ளிச் சிறுவர்கள் 5 பேரை பிடித்து அவர்கள் கையில் பதாகைகளை கொடுத்து டிடிவி தினகரன் கைதுக்கு எதிராக முழக்கமிடச் செய்தனர்.
ஆர்ப்பாட்ட கூட்டத்தில் ஈ ஆடியது. இந்த போட்டோக்கனை சமூக வலைதளங்களில் போட்டு ஓட்டி வருகின்றனர். அவற்றில் சில உங்கள் பார்வைக்கு...
|
த்தூஊஊஊஊ...
டிடிவி தினகரன் கைதை கண்டித்து, மதுரை பழங்காநத்தத்தில் ஆர்ப்பாட்டம். #த்தூஊஊஊஊ... என்கிறார் இந்த நெட்டிசன்
|
என்ன கூட்டம்!
கடல் அலையா, அல்லது மனித தலையா..அப்பப்பா !!!!! என்ன கூட்டம், என்ன கூட்டம்!! என கலாய்க்கிறார் இந்த நெட்டிசன்..
|
சிரிப்பு காட்டுறாங்க..
என்னன்னா இது சிரிப்பு காட்டிட்டு இருக்குங்க சித்தி குரூப்ஸ்.. என கூட்டத்தை பார்த்து கலாய்க்கிறார் இந்த வலைஞர்
|
ஷாக் ஆயிட்டேன்
கூட்டத்தைப் பார்த்து நான் அப்படியே ஷாக் ஆயிட்டேன் என கலாய்க்கிறார் இந்த நெட்டிசன்...
|
போட்டோவே காணோம்..
சின்னத்தா போட்டோவே காணோம்... என கூட்டத்தில் சசிகலா போட்டோ இல்லை என்கிறார் இந்த டிவிட்வாசி...
|
கட்டுக்கடங்காத கூட்டம்
கட்டுகடங்காத கூட்டம்... என போராட்டத்தில் ஈ ஓட்டுவதை ஓட்டுகிறார் இந்த நெட்டிசன்...












Click it and Unblock the Notifications