அதுக்குக்கூட கண்கலங்காதவர் டாஸ்மாக் விலை உயர்வுக்கு கண்ணுல தண்ணி வச்சிட்டார்!
டாஸ்மாக் விலை உயர்வு குறித்து சமூக வலைதளங்களில் நெட்டிசன்கள் கருத்துக்களை தெரிவித்து வருகின்றனர்.
சென்னை: டாஸ்மாக் விலை உயர்வு குறித்து சமூக வலைதளங்களில் நெட்டிசன்கள் கருத்துக்களை தெரிவித்து வருகின்றனர்.
தமிழக அரசு டாஸ்மாக் விலையை நேற்று அதிகரித்து உத்தரவிட்டது. அதன்படி பீர் விலையில் 10 ரூபாயும் குவாட்டர் விலையில் 12 ரூபாயும் உயர்த்தப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
இதைத்தொடர்ந்து சமூக வலைதளங்களில் இதுகுறித்து நெட்டிசன்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர். அவற்றில் சில..
|
தண்ணி வச்சிட்டார் மொமண்ட்
டாஸ்மாக் மதுபானம் விலை உயர்வு#பெட்ரோல் டீசல் விலை உயர்வுக்கு கூட கண்கலங்காதவர் டாஸ்மாக் விலை உயர்வுக்கு கண்ணுல தண்ணி வச்சிட்டார் மொமண்ட்.. என கலாய்க்கிறது இந்த டிவிட்
|
சக தமிழருக்காக
அரசு ஊழியர் சம்பளம் உயர்வு டாஸ்மாக் சரக்கு விலை உயர்வு.. சக தமிழருக்காக தியாகம் செய்யுங்கள் குடிமக்களே.. என கேட்கிறார் இந்த நெட்டிசன்
|
கேயாஸ் தியரி
ஒரே நாளில் ரெண்டு பிரேக்கிங் நியூஸ், 1. அரசு ஊழியர் சம்பள உயர்வு, 2. டாஸ்மாக் சரக்கு விலை உயர்வு, (கேயாஸ் தியரி) என்கிறது இந்த டிவிட்
|
நிதர்சனம்..
அரசு ஊழியர்களுக்கு ஊதிய உயர்வு..... 1) கேளிக்கை வரி உயர்வு 2) டாஸ்மாக் விலை உயர்வு #நிதர்சனம் என கூறுகிறார் இந்த வலைஞர்
|
எல்லாம் முடிந்தது..
ஊதிய உயர்வு டாஸ்மாக் விலை உயர்வு தட்ஸ் ஆல்... என்கிறார் இந்த நெட்டிசன்..