பயங்கரமா குளிருதுனு சொன்னா.. கல்யாணம் பண்ணி வைப்பாங்கன்னு பார்த்தா.. புது ஜெர்கின் வாங்கி தர்றாங்க!
மார்கழிப் பனியை வைத்து இணையத்தில் வைரலாகி வரும் மீம்ஸ்களின் தொகுப்பு.
சென்னை: தமிழகத்தில் நாளுக்கு நாள் குளிர் அதிகரித்து வருவதைக் கலாய்த்து இணையத்தில் மீம்ஸ்கள் வைரலாகி வருகின்றன.
மாசிப் பனி மச்சு வீட்டையும் பிளக்கும் என்பார்கள். ஆனால் இந்தாண்டோ மார்கழிக்கு முன்னதாகவே பனி நம்மை உறைய வைக்கிறது. வெயில் சுட்டெரிக்க வேண்டிய மதிய வேளைகளில் கூட குளிர்காற்று தான் தழுவிச் செல்கிறது. மதியமே இப்படி என்றால் மாலை, இரவு, காலை போன்ற வேளைகளைக் கேட்கவா வேண்டும்.
'ஓ.. இவருதா அந்த வெளியூர் ஆட்டக்காரரா’.. ஒமைக்ரான்னா மட்டும் விட்ருவோமா.. இந்தோ ஆரம்பிச்சுட்டோம்ல!
குளிர்ந்து கிடக்கும் நீரில் கையை வைக்க முடியவில்லை, ஃபேன் போட்டுக் கொள்ள முடியவில்லை என மக்கள் ரொம்பத்தான் கஷ்டப்படுகிறார்கள். சிலர் குளிப்பதற்குக்கூட அரையாண்டு விடுமுறை விட்டு விட்டனர்.
இவ்வளவு கண்டெண்டுகள் கிடைக்கும் போது, கேட்கவா இப்படியாக குளிரையும், பனியையும் வைத்து மீம்ஸ்களாக தட்டி வருகின்றனர் மீமர்கள். இதோ அப்படியாக நம் கண்ணில் பட்ட சில ஜாலி மீம்ஸ்களின் தொகுப்பு உங்களுக்காக..