மனசு அழகானது!
மனசு இருக்கே.. அது ரொம்ப அழகானதுங்க.. அந்த மனசை நாம் எப்படி போற்றிப் பாதுகாத்து வைக்கிறோம் என்பதில் அந்த அழகு நீடிப்பது இருக்கிறது.
மனசு எப்பவும் அழகாக இருக்க வேண்டுமென்றால் நாம் மகிழ்ச்சியாக இருக்க வேண்டு்ம். போட்டி பொறாமை பகையை போன்றவற்றைத் தவிர்த்து நல்ல எண்ணங்களை வளர்த்து நம் மனதை எப்போதும் ஆரோக்கியமாக வைத்துக் கொள்ள வேண்டு்ம். மனதில் கவலை இருந்தால் நம்மால் எந்த செயலையும் சரியாக செய்ய முடியாது.
மனதில் நாம் எதை ஆழமாகச் சிந்திக்கிறோமோ அதைச் செயல்படுத்தி வெற்றி அடைகிறோம். எண்ணங்களின் பிறப்பிடம் மனம். மனதை சந்தோசமாக வைத்துக் கொள்ள நீங்கள் நினைத்தால் முடியும். வாழ்வின் வசந்த கால நினைவுகளை அவ்வப்போது மனதில் அசை போடுங்கள் அதுவே நம் மனதுக்குப் புத்துணர்ச்சியை உண்டாக்கும். மனம் ஒன்றும் குப்பைகள் கொட்டும் குப்பைத் தொட்டி கிடையாது. அது பூக்கள் பூத்துக் குலுங்கும் பிருந்தாவனம். மனதை எப்போதும் அழகாக வைத்திருப்பது உங்கள் கையில் தான் உள்ளது.
எது நடந்தாலும் எல்லாம் நன்மைக்கே என்று நினைத்துக் கொள்ளுங்கள். காரண காரியம் இல்லாமல் இவ்வுலகில் எதுவுமே நடப்பது இல்லை. மனம் மிகவும் அழகானது. அதில் ஏற்படும் சின்ன சின்ன ஆசைகளுக்கும் மதிப்புக் கொடுங்கள். சின்ன சின்ன சந்தோசங்களை அனுபவித்து மகிழுங்கள்.
ஒவ்வொரு நாளும் இனிய நாள் தான். நேற்றைய கவலைகளை மறந்து இன்று மகிழ்ச்சியோடு உற்சாகத்தோடு இந்த நாளைத் தொடங்குங்கள். மனங்கள் மலரட்டும்.