செயலை விட அதன் பயனை நேசித்தால்!
ஃபிரீடவுன்:
ஆப்பிரிக்க நாடான சியாரா லியோனில் தாங்கள் பிடித்து வைத்திருந்த ஐக்கிய நாடுகள் அமைதி காப்புப் படையைச் சேர்ந்த 18 வீரர்களை தீவிரவாதிகள்ஞாயிற்றுக்கிழமை விடுவித்தனர். இவர்களில் 11 பேர் இந்தியாவைச் சேர்ந்தனர்.
சியாரா லியோன் நகரில் போராட்டம் நடத்தி வரும் தீவிரவாதிகளை அடக்கும் பொருட்டு ஐக்கிய நாடுகளின் அமைதி காப்புப் படையினர் அங்கு தீவிரநடவடிக்கையில் ஈடுபட்டு வருகின்றனர்.
சில நாட்களுக்கு முன் அமைதி காப்புப் படையினர் மீது தாக்குதல் நடத்திய தீவிரவாதிகள், சிலரைப் பணயக் கைதிகளாகப் பிடித்துச் சென்றனர். இந் நிலையில்,தாங்கள் பிடித்துச் சென்ற 11 இந்திய வீரர்கள் மற்றும் பல்வேறு நாடுகளைச் சேர்ந்த ராணுவ கண்காணிப்பாளர்கள் 7 பேரை தீவிரவாதிகள்ஞாயிற்றுக்கிழமை விடுவித்தனர்.
சியாரா லியோனின் கிழக்குப் பகுதியில் லைபீரியா எல்லை அருகே உள்ள கைலாஹுன் என்ற நகரில் ஐ.நா. அமைதி காப்புப் படையைச் சேர்ந்த இந்தியவீரர்களிடம் 18 பேரும் ஒப்படைக்கப்பட்டனர் என்று ஃபிரீடவுனில் உள்ள ஐ.நா. செய்தித் தொடர்பாளர் டேவிட் விம்ஹர்ஸ்ட் தெரிவித்தார்.
விடுவிக்கப்பட்ட வீரர்கள் மற்றும் கண்காணிப்பாளர்களின் தற்போதைய உடல்நிலை குறித்த விவரம் ஏதும் தெரியவில்லை. புரட்சிகர ஐக்கியமுன்னணியைச் சேர்ந்த தீவிரவாத குழுக்களிடம் சுமார் 500-க்கும் அதிகமாக ஐ.நா. அமைதி காப்புப் படை வீரர்கள் சிறைபட்டுள்ளதாகக்கூறப்படுகிறது.
கைலாஹுன் நகரில் உள்ள ஐ.நா. அமைதி காப்புப் படை வீரர்கள் அனைவரும் தீவிரவாதிகளால் எந்த நேரத்திலும் தாக்கப்படக்கூடும் என்ற நிலைதற்போது உள்ளது.
தலைநகர் ஃபிரீடவுனில் இருந்து 50 கிலோமீட்டர் தொலைவில் உள்ள முக்கிய சாலைச் சந்திப்பு நகரான மாசியாகாவை சில தினங்களுக்கு முன் பிடித்ததீவிரவாதிகள், அரசு ஆதரவு படைகளை எதிர்த்து தொடர்ந்து தாக்குதல் நடத்தி வருகின்றனர்.
ஐ.ஏ.என்.எஸ்.
-
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
தமிழக பள்ளி – கல்லூரி மாணவர்களுக்கு அரசு பஸ்சில் இலவச பயணம்.. அறிவித்தார் போக்குவரத்து அமைச்சர் -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
முதல்வர் விஜய்யை சந்திக்காத மேயர் பிரியா! சுணக்கத்தில் சென்னை மாநகராட்சி.. மோதலா? து.மேயர் விளக்கம் -
திருச்சி-க்கு வரும் தாஜ்.. ஒரே நேரத்தில் 3 மெகா பிராண்ட்.. அதுவும் இந்த ஏரியாவுல!












Click it and Unblock the Notifications