தமிழகத்தில் இன்று
டெல்லி:
அழ-கி-ய பிஜி தீவின் ஒ-ரு ப-கு-திபிஜி தீவில் நடந்துள்ள ஆயுதப் புரட்சியையடுத்து அங்கு நடந்து வரும் நிகழ்ச்சிகளை இந்தியா கூர்ந்து கவனித்து வருவதாக மத்திய வெளியறவுத் துறை கூறியுள்ளது.
ஆயுதம் தாங்கிய ஃபிஜி இனப் பிரிவினர், வெள்ளிக்கிழமை ஆயுதப் புரட்சி மூலம் ஆட்சியைப் பிடித்தனர். பிரதமர் மகேந்திர பால் செளத்ரி மற்றும் அரசு அதிகாரிகளை சிறைப்படுத்தி வைத்துள்ளனர். |
இந்தியர் ஒருவர் பிஜி தீவின் பிரதமராகி ஒரு வருட காலம் முடிவடைந்துள்ள நிலையில் புரட்சி நடந்துள்ளது குறிப்பிடத்தக்கது.
புரட்சிக்காரர்களுடன் முன்னாள் பிரதமர் பேச்சு:
இதற்கிடையே புரட்சிக்காரர்களுடன் முன்னாள் ராணுவத் தளபதியும், 2 முறை ராணுவப் புரட்சி மூலம் ஆட்சியைப் பிடித்தவருமான சிடிவெனி ரபுகா,நாடாளுமன்றத்தில் பேச்சு நடத்தி வருகிறார்.
ராணுவப் புரட்சிக்கு அவர் ஆதரவு தரவில்லை. அவருடன் மூத்த ராணுவ மற்றும் காவல்துறை அதிகாரிகள் உடன் சென்றுள்ளனர். மேலும் புரட்சியைராணுவம் அங்கீகரிக்கவில்லை என்றும் தெரிகிறது. நார்வேயிலுள்ள பிஜி ராணுவத் தளபதியும் புரட்சியை அங்கீகரிக்கவில்லை என்று கூறிவிட்டார்.
நியூசிலாந்தும் புரட்சியில் ராணுவத்திற்குத் தொடர்பில்லை என்பதை உறுதி செய்துள்ளது. ராணுவமும், போலீஸும் இன்னும் சட்டத்திற்குட்பட்டேசெயல்படுகின்றன. ராணுவம் தனது நிலைகளிலேயே இருக்கிறது என்று நியூசிலாந்து வெளியுறவு அமைச்சகம் தெரிவித்துள்ளது.
ஐ.ஏ.என்.எஸ்.
- புரட்சிக்காரர்களின் பிடியில் பிஜி ஜனாதிபதியின் மகள்
- பிஜி பிரதமர் மகேந்திர செளத்ரி பா-து-காப்-பா-க உள்-ளார்
- பிஜி- ஆட்--சி கவிழ்-ப்புக்-கு ரா-ணு-வத் தள-ப-தி எ-திர்ப்-பு
- பிஜியில் ஆயுதப் புரட்சி: வீட்டுக் காவலில் இந்திய வம்சாவளிப் பிரதமர்