Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

தமிழகத்தில் இன்று

Subscribe to Oneindia Tamil

கே: தமிழ்நாடு காங்கிரஸ் - சிறு குறிப்பு வரைக!

ப: இருந்தது

கே: தி.மு.க. வின் தற்போதைய நான்காண்டு கால ஆட்சியின் சாதனை, கடந்த 50ஆண்டுகளில் இல்லை - என்று சபாநாயகர் பி.டி.ஆர். பழனிவேல் ராஜன்கூறியிருக்கிறாரோ? ஏற்றுக் கொள்கிறீர்ளா?

ப: கடந்த 50 ஆண்டுகளில், தி.மு.க. ஆட்சி சுமார் 10 ஆண்டுகளுக்கு மேல் நடந்தது. அதுஅசல் தண்டம் என்று சபாநாயகர் நினைத்தால், அதற்கு நாம் என்ன செய்ய?

கே: ஃபிஜி நாட்டில் இனி ஜனநாயகம் திரும்ப வாய்ப்பு உள்ளதா?

ப: வாய்ப்பு இருக்கிறது.

கே: ஒரு ஆண் பொய் சொல்வதற்கும் , ஒரு பெண் பொய் சொல்வதற்கும் என்னவேறுபாடு உள்ளது?

ப: ஆண்கள் பொய் சொன்னால், அது பற்றி அவர்கள் வெட்கப்படுவார்கள். அல்லதுபயப்படுவார்கள். பெண்கள் பொய் சொன்னால், அது ஒரு பெரிய விஷயமாகஅவர்களுக்குத் தெரிவதில்லை. அது சர்வ சாதரண விஷயமாகவே அவர்களுக்குத்தெரிகிறது.

கே: பெண்களுக்கு மட்டும் பிறந்த வீடு, புகுந்த வீடு என்று இரண்டு வீடுகள்இருக்கிறதே! ஆண்கள் என்ன பாவம் செய்தார்கள்?

ப: ஏன் ஆண்களுக்கும் இருக்கிறதே! பிறந்த வீடு. இழந்த வீடு.

கே : ஆணா அல்லது பெண்ணா என்று தெரியாத அளவுக்கு பெண்களை வளர்க்கவேண்டும் பெண்களுக்கு ஆண் உடையை அணிவிக்க வேண்டும் என்ற டாக்டர்ராமதாஸின் முற்போக்கு எண்ணம் குறித்து...?

ப: அவருடைய பேச்சு முற்போக்கு அல்ல: பொழுது போக்கு.சீரியஸாக எடுத்துக்கொள்ளாதீர்கள். அவர் சொல்கிற மாதிரி கோமாளிகள் ஆகிவிட பெண்கள் ஒன்றும் காத்துக்கொண்டிருக்கவில்லை.

கே; இலங்கைப் பிரச்சனையில் பா.ஜ.க.வின் கருத்துதான் என்ன?

ப: முதலில் இப்பிரச்சனை பற்றி. அவர்களுக்கு ஒரு கருத்து ஏற்படட்டும்: அதற்குப்பிறகுதானே அது பற்றி நாம் ஏதாவது சொல்ல முடியும்.

கே: தமிழ்நாடு காங்கிரஸ் தலைவர் திண்டிவனம் ராமமூர்த்தியை, தலைவர்பதவியிலிருந்து நீக்கிய பிறகு, அவர் நடந்து கொண்ட முறை பற்றி என்னசொல்கிறீர்கள்...?

ப: முதலில் ஆத்திரப்பட்டு என்னென்னவோ பேசி விட்டார்: பிறகு தன் நிலை உணர்ந்து.தடுமாற்றத்திலிருந்து விடுபட முடிவெடுத்து குழைந்திருக்கிறார். குழைவு பலன்அளிக்கக்கூடும்.

கே: பெண் - சிறு குறிப்பு வரைக...?

ப:வம்பு. (நான் உங்கள் கேள்வியைப் பற்றி கருத்து சொன்னால், நீங்கள் அதையே பதிலாகஎடுத்துக் கொள்ளாதீர்கள்)

கே: தெற்கு ரயில்வே பொது மேலாளர் கீர்த்திவாசன் வீட்டில் நடந்தசி.பி.ஐ.சோதனை பற்றி...?

ப: இதற்கு கீர்த்திவாசன் விளக்கம் அளித்திருக்கிறார். அவர் சொல்வது ஏற்கக்கூடியதாஇல்லையா என்பது பற்றி அபிப்ராயம் கூறுகிற அளவுக்கு, தகவல்கள் இன்னமும்வெளியாகவில்லை. ஜட்ஜ்மெண்ட் ரிசர்வ்ட்.

கே:ஒரு முதல்வருக்குத் தெரியாமல் அதிகாரிகளும், அமைச்சர்களும் ஊழல் செய்துவிட முடியும் என்று தாங்கள் நம்புகிறீர்களா?

ப: முதல்வருக்குத் தெரியாமல் ஒரிரு முறை செய்ய முடியும். மீண்டும் மீண்டும் செய்தால்,அது முதல்வருக்குத் தெரியாமல் நடக்கிற காரியமாக இருக்காது.

கே: சுயமரியாதைத் திருமணம் செய்து கொள்பவர்கள் என்ன ஆகுமோ என்றுபயப்பட வேண்டாம். புராண காலத்தில் ராமனுக்கும் சீதைக்கும் நாள் நட்சத்திரம்பார்த்துத்தான் திருமணமும், பட்டாபிஷேகமும் நடைபெற்றது. அவர்கள் 14 வருடம்வனவாசம் செய்யவில்லையா? என்று முதல்வர் பேசியுள்ளாரே...?

ப: நாள் நட்சத்திரம் பார்த்ததால், அவர்கள் 14 வருடம் கழித்து சிறப்புடன் நகரத்திற்குததிரும்பி வந்தார்கள். ஒரு வேளை, அவர்கள் நாள் நட்சத்திரம் பார்க்காமல் கல்யாணம்செய்து கொண்டிருந்தால், காட்டிலேயே ஏதாவது சிங்கம் , கரடியால் தாக்கப்பட்டுசெத்திருப்பார்களோ, என்னவோ!

கே:ஒரு நல்ல அரசியல்வாதியின் இலக்கணம் என்ன? ( கிண்டல் இல்லாமல்சீரியஸான பதில் தேவை).

ப: இதற்கெல்லாம் கிண்டல் இல்லாமல் பதில் சொல்ல முடியாது. நியாயமானஇலக்கணத்தைச் சொன்னால் - இந்த காலகட்டத்தில், அது கிண்டலாகத்தான் தெரியும்.

கே: உங்கள் பிறந்த நாளின் போது நிதி வசூலித்து உங்களிடமே தரஎண்ணியுள்ளோம். அப்போதாவது உங்கள் பிறந்த நாளைக் கொண்டாடும்நிகழ்ச்சிக்கு வந்து ஆதரவு தருவீரகளா?

ப: உங்களால் நிறைய நிதி திரட்ட முடியும் என்ற நம்பிக்கை எனக்கில்லை. அதனால்கொள்கை அடிப்படையில், பிறந்த நாள் கொண்டாட மறுக்கிறேன்.

கே: வரும் பொதுத் தேர்தலில் ஜெயலலிதா தனி மெஜாரிட்டியுடன் ஜெயித்துவந்தால், தமிழக மக்களைப் பற்ரி என்ன நினைப்பீர்கள்...?

பச ஊழல் புகார்களை விட, மற்ற பல விஷயங்கள்தான் மக்கள் மனதில் பெரியவிஷயங்களாகத் தெரிகின்றன - என்றுதான் நினைக்க வேண்டியிருக்கும்.

கே: ஒருவர் நியாயம் பேசுகிறார் என்றால், அவருக்கு அநியாயம் செய்ய வாய்ப்புகிடைக்கவில்லை என்றுதானே அர்த்தம்? ( தயவு செய்து தங்களைக் கூறுவதாகநினைத்துக் கொள்ள வேண்டாம்)

ப: அநியாயம் செய்ய இஷ்டமில்லை என்றும் வைத்துக் கொள்ளலாம்.(நானும் என்னைப்பற்றிக் கூறவில்லை)

கே: இலங்கை விஷயத்தில் இதுவரை மவுனம் காத்து வந்த ஜெயலலிதா,இப்பிரச்சனையில் மத்திய அரசு எடுத்துள்ள நிலை சரியானதே என்று கருத்துகூறியுள்ளாரே?

ப: நேரம் கழித்துத்தான் பேசியிருக்கிறார் என்றாலும், பேசியுள்ள கருத்து,வரவேற்கத்தக்கது. விடுதலைப் புலிகள் பற்றி தெளிவான நிலையை அவர்எடுத்திருக்கிறார்.பாராட்டுகிறேன். அவருடைய இந்த அணுகுமுறை தொடர்ந்தால் நல்லது.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+