For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

தமிழகத்தில் இன்று

By Staff
Google Oneindia Tamil News

அரசியல் சீர்திருத்தத்திற்கு விக்கிரமசிங்கே ஒப்புதல்

ஞிணிடூணிணூ="ஆடூச்ஞிடு">கொழும்பு:

17 வருடங்களாக இலங்கையில் நீடித்து வரும் இனப்பிரச்சனைக்கு முற்றுப்புள்ளி வைக்க உதவும், வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த அரசியல் சீர்திருத்தம்தொடர்பாக இலங்கை அரசுக்கும், முக்கிய எதிர்கட்சியான ஐக்கிய ஜனநாயகக் கட்சித் தலைவர் விக்கிரமசிங்கேவுக்கும் இடையே உடன்பாடுஏற்பட்டுள்ளது.

அதிபர் சந்திரிகாவுக்கும், -ர-ணில் விக்கிரமசிங்கேவுக்கும் இடையே, அரசியல் சட்ட சீர்திருத்தம் தொடர்பாக ஐந்தாவது மற்றும் இறுதிக் கட்டபேச்சுவார்த்தை நடந்தது. இந்தப் பேச்சுவார்த்தையில் நார்வே நாட்டு தூதர் எரிக் சோல்ஹெம் கலந்து கொண்டார். இதன் இறுதியில் அரசியல் சீர்திருத்தமசோதாவுக்கு விக்கிரமசிங்கே ஒப்புதல் அளித்தார்.

இலங்கையில் விடுதலைப்புலிகளை சமரசப் பேச்சுவார்ததையில் ஈடுபடுத்த நார்வே எடுத்து வரும் முயற்சிகள், இலங்கையில் அமைதி நிலவ வேண்டும் என்றுவிரும்புபவர்களுக்கு மகிழ்ச்சியைக் கொடுத்துள்ளது.

அரசியல் சட்ட சீர்திருத்தத்தின்படி, இலங்கை அரசின் நிர்வாகம் மத்திய மற்றும் மா-க-ண அரசுகளைக் கொண்டதாக இருக்கும். மத்திய மற்றும்-மா-கா-ண அரசுகளுக்கு இடையே சட்டசபை மற்றும் நிர்வாக அதிகாரங்கள் பகிர்ந்தளிக்கப்படும். இதன் மூலம், நாட்டின் ஒற்றுமையும்,பிராந்தியங்களின் உரிமைகளும் பாதுகாக்கப்படும்.

ஏற்கனவே தேர்தல், போலீஸ் மற்றும் அரசுப் பணிகளுக்கு தனி கமிஷன் அமைப்பது, வட கிழக்கு மாகாண இடைக்காலக் கவுன்சிலை ஏற்படுத்துவதுதொடர்பாக ஆளுங்கட்சிக்கும், எதிர்க்கட்சிக்கும் ஒப்பந்தம் ஏற்ப்பட்டுள்ளது.

அரசியல் சீர்திருத்த மசோதா ஜூலை மாத இறுதியில் நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டு ஒப்புதல் பெறப்படும் என்று தெரிகிறது.

யு.என்.ஐ.

 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X