For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

ஒலிம்பிக்கில் இந்தியா

By Staff
Google Oneindia Tamil News

எப்படியோ தேசிய ஜனநாயகக் கூட்டணி கட்சிகளை சமாதானப்படுத்தி, மேற்கு வங்கத்தில் ஜனாதிபதிஆட்சி பிரகடனம் ஆகிறது என்றே வைத்துக் கொள்வோம். ராஜ்ய சபையில் பா.ஜ.க. கூட்டணிக்குமெஜாரிட்டி இல்லாத நிலையில் பாராளுமன்ற ஒப்புதலைப் பெறுவது எப்படி?

காங்கிரஸ் கட்சி மேற்கு வங்கத்தில் கம்யூனிஸ்ட்களை எதிர்த்தாலும், மத்தியில் பா.ஜ.க.வைஎதிர்ப்பதால், இரண்டும் கெட்டான் நிலையில் திண்டாடுகிறது. கூழுக்கும் ஆசை, மீசைக்கும் ஆசை.மேற்கு வங்கத்தில் மார்க்சிஸ்ட்களை ஆதரித்து விட்டால், அந்த மாநில அரசியலில் தங்களுக்கென்றுஒரு தனி இடம் இல்லாமலேயே போய்விடும் என்ற ஆபத்து ஒரு புறம் ; அதற்காக பா.ஜ.க. கூட்டணிஅரசின் நடவடிக்கையை ஆதரித்து விட்டால், மதச்சார்பு தீட்டு வந்து சேர்ந்து விடும் என்ற பயங்கரம்மற்றொருபுறம்.

இந்த இரண்டு ஆபத்துக்களையும் ஒரு சேர தவிர்ப்பதற்கு வழி தெரியாமல் காங்கிரஸ் திண்டாடுகிறது.பீகாரில் இதே மாதிரி தவித்தபோது, இறுதியில் ஜனாதிபதி ஆட்சி பிரகடனத்தை எதிர்ப்பது என்றுதான்காங்கிரஸ் தீர்மானித்தது.

இப்போதும் அதே முடிவிற்குத்தான் காங்கிரஸ் வரும். முன்பு பீகாரில் செய்தது போல, ஆனது ஆகட்டும்என்று தீர்மானித்து, ஜனாதிபதி ஆட்சி பிரகடனத்தைச் செய்துவிட பா.ஜ.க. முனையாது ; பீகாரில் சூடுகண்டதால், இப்போது காங்கிரஸ் ஆதரவு இல்லாமல் இக்காரியத்தில் இறங்க பா.ஜ.க. துணியாது.ஆகையால் ஜனாதிபதி ஆட்சி பிரகடனம் என்பது பேச்சளவில்தான் நிற்கும்.

இவையெல்லாம் ஒருபுறமிருக்க, மத்திய அமைச்சர் ஒருவர் ஒரு சில மணிநேரங்கள் மேற்கு வங்கத்த்தில்இருந்து விட்டு, ஒரு கடுமையான அறிக்கையை சமர்பிப்பது என்பது கொஞ்சம் வினோதமாகத்தான்இருக்கிறது.

மம்தா பானர்ஜியை திருப்தி செய்ய வேண்டிய நிர்பந்தம் பா.ஜ.க. கூட்டணி அரசுக்கு இருப்பதால்தான்,இம்மாதிரி நடந்திருக்கிறது என்பது கண்கூடு. ஆக, இந்த விஷயத்தில் இரு தரப்புகளுமே பெருமைப்பட்டுக்கொள்ள எதுவும் இல்லை. எல்லாமே வடிகட்டன அரசியல்தானே தவிர வேறில்லை.

 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X