வீரப்பனிடமிருந்து தப்பிய நாகப்பாவை கோர்ட்டில் ஆஜர்படுத்தக் கோரி மனு தாக்கல்
பெங்களூர்:
சந்தனக் கடத்தல் வீரப்பனிடமிருந்து தப்பி வந்த நாகப்பாவை கோர்ட்டில் ஆஜர்படுத்தவேண்டும் என்று கோரிகர்நாடக உயர்நீதிமன்றத்தில் மனுத் தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
ஹொட்டேபக்ஷி ரங்கசாமி என்பவர் வெள்ளிக்கிழமை தாக்கல் செய்த இந்த பொதுநலன் கோரும் மனுவைஏற்றுக் கொண்ட நீதிபதிகள், அந்த மனுவுக்குப் பதில் அளிக்கும்படி கர்நாடக மாநில டிஜிபி தினகருக்கு நோட்டீஸ்அனுப்ப உத்தரவிட்டனர்.
கர்நாடக மாநில சட்டப்பேரவைத் தேர்தல்களில் 100 முறைக்கு மேல் மனுத்தாக்கல் செய்து அனைத்து முறையும்டெபாசிட் தொகையை இழந்தவரான ஹொட்டேபக்ஷி ரங்கசாமி தாக்கல் செய்த அந்த மனு விவரம்:
சந்தனக் கடத்தல் வீரப்பனால் கடத்திச் செல்லப்பட்டுள்ள நடிகர் ராஜ்குமார், கர்நாடக மாநில மக்களால் தெய்வமாகமதிக்கப்படுகிறார்.
ராஜ்குமாருக்குத் தற்போது 72 வயதாகிறது. மூட்டுவலியால் அவதிப்பட்டு வருகிறார். ராஜ்குமார் கடத்தப்பட்டுஏறக்குறைய 68 நாட்கள் ஆகிவிட்டது. கர்நாடக மாநில முழுவதும் அசாதாரண சூழ்நிலை நிலவுகிறது.
கன்னட திரைப்பட உலகம் அடியோடு பாதிக்கப்பட்டுள்ளது. இதனால், கர்நாடக அரசுக்குக் கோடிக்கணக்கானரூபாய் இழப்பு ஏற்பட்டுள்ளது.
ராஜ்குமார் கடத்தல் சம்பவத்தை தமிழக அரசுதான் திட்டமிட்டு நடத்தியுள்ளது. அடுத்த ஆண்டு தேர்தல் நடைபெறஉள்ள நிலை சுயநலத்துக்கான தமிழக முதல்வர் கருணாநிதிதான் இதைச் செய்துள்ளார்.
மேலும், இந்த கடத்தல் நாடகம் முடிக்கப்படாமல் கர்நாடக அரசை தமிழக அரசு பிளாக்மெயில் செய்து வருகிறது.
கர்நாடகத்தில் ஏற்பட்டுள்ள அசாதாரண சூழ்நிலைக்கும், ஏற்பட்டுள்ள நஷ்டத்துக்கும் தமிழக அரசு ரூ.500 கோடிஇழப்பீடு தரவேண்டும்.
வீரப்பன் பிடியிலிருந்து தப்பி வந்த உதவி டைரக்டர் நாகப்பா, எப்படி தப்பி வந்தார் என்பது குறித்து முரண்பட்டதகவல்கள் வெளியாகியுள்ளன. உண்மை என்னவென்று தெரியவில்லை.
போலீஸ் நிர்ப்பந்தம் காரணமாகவே நாகப்பா உண்மையைச் சொல்லாமல் இருக்கிறார். அவரை நீதிமன்றத்தில்ஆஜர்படுத்தினால் உண்மை நிலவரம் தெரியவரும்.
ஆகவே, நாகப்பாவை கர்நாடக உயர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தும்படி போலீஸாருக்கு உத்தரவிடவேண்டும்என்று அந்த மனுவில் ரங்கசாமி கூறியுள்ளார்.
இந்த மனுவை விசாரணைக்கு ஏற்ற நீதிபதிகள் ஸ்ரீதர் ராவ், சீனிவாச ரெட்டி இருவரும், இம் மனுவுக்குப் பதில்அளிக்கும்படி கர்நாடக டிஜிபி தினகருக்கு நோட்டீஸ் அனுப்ப உத்தரவிட்டனர்.
ராஜ்குமார் உள்பட 4 பேரை ஜூலை 30-ம் தேதி இரவு சந்தனக் கடத்தல் வீரப்பன் கடத்திச் சென்றான்.கடத்தப்பட்டவர்களை விடுவிக்கும் முயற்சியில் கர்நாடக மற்றும் தமிழக அரசுகள் முயற்சிகளைமேற்கொண்டுள்ளன.
இந் நிலையில், சில நாட்களுக்கு முன் வீரப்பன் கடத்திச் சென்ற 4 பேரில் ஒருவரான உதவி டைரக்டர் நாகப்பாமட்டும் தப்பி வந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக












Click it and Unblock the Notifications