For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

ஈவ் டீசிங்கை எதிர்த்த மாணவர் கொலை

By Staff
Google Oneindia Tamil News

விழுப்புரம்:

விழுப்புரத்தில் மாணவியைக் கேலி செய்ததைத் தட்டிக் கேட்ட கல்லூரி மாணவர்கத்தியால் குத்திக் கொலை செய்யப்பட்டார்.

விழுப்புரம் அரசுக் கலைக் கல்லூரியில் படித்து வந்தவர் புஷ்பராஜ். கீழ்பெரும்பாக்கத்தைச் சேர்ந்தவர் சாராய வியாபாரி இருசப்பன். திங்கள்கிழமை கலைக்கல்லூரி வளாகத்தில் இருசப்பனும், இன்னும் சிலரும் சேர்ந்து மாணவிகளை கேலிசெய்துள்ளனர்.

இதை கல்லூரி மாணவர் தலைவர் முரளி, புஷ்பராஜ் இன்னும் சில மாணவர்கள் தட்டிக்கேட்டுள்ளனர். இதையடுத்து இரு தரப்பினருக்கும் இடையே மோதல் ஏற்பட்டது.விஷயம் காவல் நிலையம் வரை சென்றது.

இரு தரப்பினரையும் அழைத்த போலீஸார் சமாதானப் பேச்சுவார்த்தை நடத்தினர்.இதையடுத்து விசாரணைக்கு அழைக்கப்பட்ட மாணவர்கள் விடுவிக்கப்பட்டனர்.

இந்த நிலையில் கல்லூரி முடிந்து மாலையில் புஷ்பராஜ், தனது நண்பர்களுடன் வீடுதிரும்பினார். அப்போது ஒரு இடத்தில் மறைந்திருந்த இருசப்பனும், அவரது கும்பலும்புஷ்பராஜைக் கத்தியால் குத்தியுள்ளனர். படுகாயமடைந்த புஷ்பராஜ் பாண்டிச்சேரிஜிப்மர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். ஆனால் சிகிச்சை பலனின்றிஉயிரிழந்தார்.

மாணவர் புஷ்பராஜ் கொலை செய்யப்பட்ட தகவலையடுத்து விழுப்புரம் நகரில்பரபரப்பு ஏற்பட்டது. பஸ் நிலையப் பகுதியில், சிலர் கடைகளை மூடச் சொல்லிவற்புறுத்தினர். நகரின் பல பகுதிகளில் கடைகள் அடைக்கப்பட்டன. ஒரு இடத்தில்நடந்த கல்வீச்சில் செஞ்சி காவல் நிலைய சப் இன்ஸ்பெக்டர் காயமடைந்தார்.

கொலைச் சம்பவம் தொடர்பாக இதுவரை 2 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

ரூ. 2 லட்சம் உதவித் தொகை:

மாணவர் புஷ்பராஜ் தாழ்த்தப்பட்ட பிரிவைச் சேர்ந்தவர் என்பதால் வன்கொடுமைத்தடுப்புச் சட்டத்தின் கீழ் அவரது குடும்பத்தினருக்கு மாவட்ட ஆட்சியாளர்ராமச்சந்திரன் ரூ. 2 லட்சம் நிவாரணத் தொகை வழங்குமாறு உத்தரவிட்டார். மாவட்டபோலீஸ் எஸ்.பி. ரவியின் பரிந்துரையின்பேரில் இந்த உதவித் தொகைவழங்கப்பட்டது.

 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X