கேரள கள்ளச்சாராய சாவு 23 ஆக உயர்ந்தது
Subscribe to Oneindia Tamil
திருவனந்தபுரம்:
கேரள மாநிலம் கொல்லம் மாவட்டத்தில் கள்ளச்சாராயத்திற்கு பலியானவர்களின்எண்ணிக்கை 25 ஆக உயர்ந்தது.
கொல்லம் மாவட்டம், கல்லுவத்துகல், கொட்டாரக்கரா ஆகிய பகுதிகளில் கள்ளச்சாராயம் சாப்பிட்டு நூற்றுக்கணக்கானோர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர்.இவர்களில் ஞாயிற்றுக்கிழமை 13 பேர் இறந்தனர். தற்போது சாவு எண்ணிக்கை 25ஆக உயர்ந்துள்ளதாக அரசுத் தரப்பில் அறிவிக்கப்பட்டுள்ளது.
திருவனந்தபுரம் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் 10 பேரின் உடல்நிலை இன்னும் கவலைக்கிடமாகவே இருப்பதாக அரசு தெரிவித்துள்ளது. மொத்தம்120 பேர் திருவனந்தபுரம் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளனர்.
இந்த சம்பவம் தொடர்பாக கேரள முதல்வர் நாயனார், நீதி விசாரணைக்குஉத்தரவிட்டுள்ளார்.
ஐ.ஏ.என்.எஸ்.












Click it and Unblock the Notifications