கடலில் மூழ்கியது கோயில், 2 மீனவர்களைக் காணவில்லை
சென்னை:
சென்னையில் கடல் கொந்தளிப்பு ஏற்பட்டு நூறு வீடுகள் கடலில் மூழ்கின.
வங்கக் கடலில் இருபது அடி உயரத்திற்கு அலைகள் எழும்பி வந்து தாக்குகின்றன. இதனால் கடலரிப்பும் ஏற்பட்டுள்ளது. எண்ணூ
எண்ணூ
பொதுமக்கள் வீடுகளில் உள்ள பொருட்களை கண்காணிக்க வேண்டியது உள்ளது. எனவே பாதுகாப்பான இடத்திற்கும் செல்லாமல் காத்துகிடக்கின்றனர்.
பெரிய குப்பத்தில் 10 கட்டுமரங்களும், 5 வலைகளும் ஒரு பைபர் படகும் கடல் அலையால் இழுத்துச்செல்லப்பட்டது. கரையில் உள்ளவெங்கடேசப்பெருமாள் கோயிலும் கடலில் மூழ்கியது. கடலரிபு பகுதிகளை டி.சி விஜயன் எம்.எல்.ஏ, ஆர்.டி.ஓ பெருமாள், தாசில்தார் ஜெயப்பிரகாஷ்உட்பட பலரும் பார்வையிட்டனர். மீனவர்களுக்கு தேவையான உணவும், மாற்று ஏற்பாட்டுப்பணிகளும் நடந்து வருகின்றன.
காசிமேடு கடலில் கட்டுமரத்தில் மீனிபிடிக்க சென்ற கன்னியப்பன் வயது 40. அவரது மகன் லோகநாதன் வயது 21 ஆகியோரைக்காணவில்லை.அவர்கள் சென்ற கட்டுமரம் கடலுக்குள் நொறுங்கிக் கிடந்தது. அவர்களை தேடும் பணி தொடர்கிறது.