எப்படி தப்பினேன்? விவரிக்கிறார் சோட்டா ராஜன்
டெல்லி:
தாய்லாந்து மருத்துவமனையில் இருந்து தப்பித்த தாதா சோட்டா ராஜன் தான் தப்பித்தது எப்படி என்பது குறித்துத்தெரிவித்துள்ளார்.
தாய்லாந்து நாட்டின் தலைநகர் பாங்காக்கிலுள்ள தனியார் மருத்துவமனையின் 4-வது மாடியிலிருந்துபெட்ஷீட்டுகளை கட்டி கீழே இறங்கி தப்பித்தார்.
இந்த சம்பவம் தொடர்பாக 2 போலீசார் தற்காலிக பதவி நீக்கம் செய்யப்பட்டனர். சோட்டா ராஜன் தப்ப உயர்போலீஸ் அதிகாரி உதவியதாகவும் தெரிய வந்தது.
சோட்டா ராஜன் தப்பித்தது குறித்து போலீசார் விசாரித்து வரும் இந்த சமயத்தில் தான் தப்பித்த விதம் குறித்துசோட்டா ராஜன் செய்தி நிறுவனம் ஒன்றிற்கு ஃபேக்ஸ் செய்தி மூலம் தெரிவித்துள்ளார்.
அதில் அவர் கூறியிருப்பதாவது:
என்னை கொலை செய்ய முயன்ற தாவூத் இப்ராஹிம குழுவினர் என்னை மீண்டும் என்னை கொலை செய்யதிட்டமிட்டனர். இதனால் மருத்துவமனையிலிருந்து தப்பித்தேன்.
இதற்கென அதிக அளவு பணம் கொடுத்து ஆபத்தான நிலையிலிருந்து தப்பிக்க உதவி செய்யும் கமாண்டோபயிற்சி பெற்ற தொழில் துறை குழுவினர் உதவியோடு மருத்துமனையிலிருந்து தப்பித்தேன்.
நான் தப்பித்தற்கு போலீசாருக்கோ அல்லது குடியேற்றத்துறை அதிகாரிகளுக்கோ எந்த தொடர்பும் இல்லை.ஐரோப்பா நாடு ஒன்றில் நான் இருக்கிறேன் என கூறியுள்ளார்.
ஃபேக்ஸ் கடிதத்தில் விஜய் கதம் என கையெழுத்திட்டுள்ளார். இந்த பெயரில் தான் அவர் தாய்லாந்திற்குள்சென்றார் என்பது குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications