நாடாளுமன்றத்தில் அமைதி திரும்பியது
டெல்லி:
அயோத்தி குறித்த பிரதமரின் கருத்து குறித்து நாடாளுமன்றத்தில் விவாதிக்க அரசு தயாராகவுள்ளதாகக் கூறியதையடுத்து எதிர்க்கட்சிகள்போராட்டத்தைக் கைவிட்டன.
அயோத்தி விவகாரம் குறித்து விவாதிப்பதற்காக சபாநாயகர் பாலயோகி அனைத்துக் கட்சிக் கூட்டத்தைக் கூட்டியிருந்தார். இதில் அனைத்துக்கட்சியினரும் கலந்து கொண்டனர். இதையடுத்து நாடாளுமன்றத்தில் கடந்த 7 நாட்களுக்குப் பிறகு அமைதி ஏற்பட்டது.
இந்திய அரசியலமைப்புச் சட்ட விதி 184 ன் படி அயோத்தி விவகாரம் விவாதிக்கப்படும் என்று பாலயோகி வாக்குறுதி அளித்தபின் நாடாளுமன்றம்நடத்தப்படுவதற்கு எதிர்க்கட்சியினர் சம்மதம் தெரிவித்தனர்.
முன்னதாக, பிரதமர் வாஜ்பாய் அயோத்தியில் பாபர் மசூதி இடிக்கப்பட்ட இடத்தில் ராமர் கோவில் கட்டப்பட வேண்டும் என்பது ஒரு தேசிய உணர்வு. இதுஎனது தனிப்பட்ட கருத்து மட்டுமல்ல. அயோத்தியில் ராமர் கோவில் கட்டப்படும்.
பாபர் மசூதி கட்டுவதற்கு வேறு இடம் கொடுக்கப்படும் என்றார். இதற்கு கூட்டணிக் கட்சிகள் உள்பட பல்வேறு கட்சிகள் எதிர்ப்புத் தெரிவித்தன.
எதிர்க்கட்சிகள் சபை நடக்கவிடாமல் கூச்சல் குழப்பத்தை ஏற்படுத்தின. இதையடுத்து கடந்த ஒரு வாரமாக நாடாளுமன்றம் கூடிய சில மணிநேரங்களிலேயே ஒத்தி வைக்கப்பட்டது என்பது நினைவிருக்கலாம்.
யு.என்.ஐ.












Click it and Unblock the Notifications