சேவையில் ராணுவ வீரர்கள்
டெல்லி:
போர்க் காலத்தில் மட்டுமல்ல, இயற்கை சீற்றத்தின் சமயங்களிலும் தங்களால் சிறப்பாகசெயல் பட முடியும். தங்களால் மக்களுக்கு எப்போதும் உதவ முடியும் என்பதைஇந்திய ராணுவத்தினர் நிரூபித்துள்ளனர்.
ராணுவ வீரர்கள்தான் பூகம்பத்தால் பாதிக்கப்பட்ட பகுதிகளில் மீட்பு பணிக்காக முதன்முதலில் சென்றார்கள். தங்களுடன் மருந்துகள் மீட்பு பணிக்கு தேவையானவற்றுடன்சென்று பலரின் உயிர்களையும் மீட்டார்கள்.
குஜராத்தில் ராணுவம் நடத்தி வரும் மீட்பு பணிக்கு சகாயதா (உதவி) என்று பெயர்சூட்டப்பட்டுள்ளது. 20,000-க்கும் அதிகமான வீரர்கள் மீட்பு பணியில்ஈடுபட்டுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
அவர்கள் மேலும் தெரிவித்ததாவது:
அகமதாபாத், பூஜ், ஜாம்நகர், மோர்பி, டுரோல், ஜோடியான் மற்றும் தரங்தாராபகுதிகளில் தீவிரமான மீட்பு பணியில் ஈடுபட்டுள்ளனர். பச்சாவ் மற்றும் அஞ்சார்பகுதியிலும் முழு வீச்சில் மீட்பு பணியில் ஈடுபட்டு வருகிறார்கள்.
ராணுவ வீரர்கள் மருத்துவ குழு, மருந்து பொருட்கள், புல்டோசர்கள், மண்ணைதோண்ட தேவைப்படும் உபகரணங்கள், குழி தோண்டும் மிஷின்கள் போன்றஅத்தியாவசியமான பொருட்களுடன் மீட்பு பணிக்கு சென்றுள்ளனர்.
கிராமப்புறத்திலிருக்கும் மக்களுக்கு அவர்களுக்கு தேவையான உணவுப் பொருட்கள்,மருந்து, போர்வைகள் மற்றும் தங்கும் இட வசதிகள் போன்றவற்றை ஏற்படுத்திக்கொடுப்பதில் குறிப்பாக இருக்கிறார்கள்.
இதுவரை ராணுவம் 4,000 போர்வைகள், 1,400 தார்பாய்கள் கொடுத்துள்ளார்கள்.1,700 தங்குமிடங்களையும் அமைத்து கொடுத்துள்ளார்கள்.
ராணுவத்தினரின் முக்கிய குறிக்கோள் மக்களின் வாழ்வையும், உடைமைகளையும்பாதுகாப்பதுதான். அதன் பின் தகவல் தொடர்பை சரிசெய்வது, மருத்துவ சேவைகளைபலப்படுத்துவது போன்றவைதான். இதன் முலம்தான் மக்களின் தினசரி வாழ்க்கையைசகஜ நிலைக்கு கொண்டு வர முடியும்.
பூகம்பத்தால் மோசமாக பாதிக்கப்பட்ட பூஜ் நகரம் நாட்டின் பிற பகுதிகளிலிருந்துதுண்டிக்கப்பட்டிருந்தது. அந்த பகுதிகளில் ராணுவத்தினர் தகவல் தொடர்பை மீண்டும்ஏற்படுத்தி கொடுத்துள்ளனர் என கூறினர்.
ஐ.ஏ.என்.எஸ்.
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக












Click it and Unblock the Notifications