பிரச்சனையில் பைக் விளம்பரம்
அந்தக் குழு இப்போது அனுப்பியிருக்கும் சுற்றறிக்கையோ அதனுடைய முடிவுகள் கூட அல்ல. மக்கள் கருத்தை அறிய, சில கேள்விகளை அக்குழுஅனுப்பியிருக்கிறது, அவ்வளவுதான்.
அதை வைத்துக்கொண்டு, பாகிஸ்தானின் ராணுவ ஆட்சி தத்துவம் போல இருக்கிறது என்று ஜனாதிபதி அபிப்பிராயம் தெரிவித்திருப்பது, அரசுக்குத் தரும்ஆலோசனையாகத் தெரியவில்லை - ஓர் அரசியல் விமர்சனமாகத்தான் தெரிகிறது. இது பற்றி பா.ஜ.க. தனது அதிருப்தியைத் தெரிவித்திருப்பதில் ஆச்சரியம்எதுவுமில்லை.
அரசியல் சட்டத்தில் கை வைப்பது பற்றி ஜனாதிபதிக்கு கவலை ஏற்பட்டிருந்தால், அதற்கு பாகிஸ்தான் வரை சென்று அவர் உதாரணம் தேடி இருக்கவேண்டியதில்லை. உள்ளூர் இந்திராகாந்தியின் ஆட்சி. அடிப்படை உரிமைகளிலேயே கை வைத்தது.;
நிதிமன்ற மறு பரிசீலனை கூட விலக்கப்பட்டது ; அந்த மாதிரி ஏதாவது இப்போது நடந்து விடப் போகிறதே - என்று ஜனாதிபதி கவலைதெரிவித்திருந்தால், அது புரிந்து கொள்ளக் கூடியதாக இருந்திருக்கும்.
நம் நாட்டிலேயே ஏற்பட்ட அந்த கசப்பான அனுபவத்தின் பக்கம் போகாமல், அவர் பாகிஸ்தான் உதாரணத்தை நாடியது - விமர்சனத்திற்கு இடமளிக்கத்தான் செய்யும்; காங்கிரஸ் கட்சியின் மனம் நோகாமல் நடந்து கொள்ள, அவர் முனைகிறாரோ என்ற கேள்வி எழத்தான் செய்யும்; காங்கிரஸ்கட்சியின் மனம் நோகாமல் நடந்து கொள்ள, அவர் முனைகிறாரோ என்ற கேள்வி எழத்தான் செய்யும். ஜனாதிபதியின் பேச்சு அதற்குஇடமளிக்கத்தான் செய்கிறது
ஆட்சியாளர்களின் கருத்தோடு தான் ஒத்துப் போகவில்லை என்றால் - அதை ஆட்சியாளர்களிடம் தான் ஜனாதிபதி சொல்ல வேண்டும். அவர் கருத்தை ஏற்க்ஆட்சியாளர்கள் மறுத்தால், அப்போது ஒன்று - அவர் தன்னுடைய எச்சரிக்கையுடன் திருப்தியடைந்து, ஆட்சியாளர்களின் முடிவு நிச்சயமாக தன்னால் ஏற்கப்படமுடியாதது என்றால், தனது பதவியை அவர் ராஜினாமா செய்ய வேண்டும்.
இந்த இரண்டு வழிகளையும் விட்டு விட்டு, பொது மக்களிடையே விமர்சனம் என்ற மூன்றாவது வழியை அவர் மேற்கொண்டால், பதில் விமர்சனத்தைத்தாங்கத்தான் வேண்டும்.
அரசியல் சட்டத்தை தோற்றுவித்தவர்களின் தொலை நோக்கை பெரிதும் பாராட்டுகிற ஜனாதிபதி, தன்னுடைய பதவி பற்றி அவர்கள் கொண்ட கருத்துஎன்ன என்பதை மட்டும் மறந்து விட்டது வருந்தத்தக்கதுதான்.