அரசியலில் ஈடுபடலாமா மாணவர்கள்?
கோவை:
இன்றைய மாணவர்கள் அரசியலில் ஈடுபடுவதில் தவறேதும் இல்லை என கோவையில் முன்னாள் மத்தியஅமைச்சர் ப. சிதம்பரம் தெரிவித்தார்.
கோவை பி.எஸ்.ஜி., கலை அறிவியல் கல்லூரியில் மாணவர்கள் கலை விழா யூஃபோரியா 2001 கண்காட்சிநடந்தது. இந்த விழாவில் கலந்து கொண்ட முன்னாள் மத்திய அமைச்சர் ப.சிதம்பரம் பேசியதாவது:
மாணவர்கள் அரசியலில் ஈடுபடுவதில் தவறு எதுவும் இல்லை. ஆனால், இந்த அரசியல் ஈடுபாடு எந்த விதத்திலும்அவர்களது கல்விக்குப் பாதிப்பை ஏற்படுத்தக் கூடாது. படித்து முடித்து கல்லூரியை விட்டு வெளியே வரும் போதுநீங்கள் நிறைய சவால்களையும் போட்டிகளையும் எதிர்நோக்க வேண்டியிருக்கும். உங்களது திறமையைப்பயன்படுத்தி முன்னேற வேண்டும்.
வெளிநாடுகளில் படிப்போருக்கும் இந்தியாவில் படிப்போருக்கும் அதிக வித்தியாசம் ஒன்றுமில்லை. ஆனால்,இந்தியாவில் உருவாகும் மாணவர்கள் கச்சாப் பொருளைப் போன்றவர்கள். வெளிநாட்டில் உள்ள மாணவர்கள்பயன்படுத்த தயாரான பொருளைப் போன்றவர்கள். எனவே வெளிநாட்டுக் கம்பெனிகள் இந்திய மாணவர்களைபெற்று அவர்களுக்குத் தக்க பயிற்சி அளித்துப் பயன்படுத்திக் கொள்கிறார்கள்.
இந்தியாவில் வறுமை இன்னும் 26 சதவீதம் உள்ளது. இதில் தமிழகத்தில் 21 சதவீதம் உள்ளது. வறுமையைஒழிப்போம் என்ற சவாலோடு மாணவர்கள் வருங்காலத்தை எதிர்கொள்ள வேண்டும். பொருளாதாரச்சீர்திருத்தங்கள் மூலம் தான் வறுமையை ஒழிக்க முடியும். எனது காலத்திற்குள் வறுமை ஒழிந்து விடும் எனநினைக்கிறேன். அப்படி இல்லையென்றால், உங்கள் காலத்திலாவது வறுமை ஒழியும். ஊழலற்ற, தெளிவானஆட்சியால் ஏழ்மை ஒழியும். அத்தகைய ஆட்சி அமைய நீங்கள் ஆதரவளிப்பீர்கள் என நம்புகிறேன்.
நாட்டுக்காக சிறை சென்ற தலைவர்களின் குடும்பங்களில் கல்லாமை இருந்து வந்துள்ளது. இந்த கல்லாமையைஅகற்ற சரியான பொருளாதாரச் சீர்திருத்தம், மற்றும் அரசியலமைப்பை உருவாக்க நமது தலைவர்கள் தவறிவிட்டனர் என்றார் ப.சிதம்பரம்.
-
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
சோறு இல்லைனா விளையாட முடியுமா? விவசாயத்தை விட விளையாட்டு கஷ்டம் என்ற ஆதவ்விற்கு கஸ்தூரி ராஜா கேள்வி












Click it and Unblock the Notifications