புலிகளுடன் பேச்சுவார்த்தை நடத்துவோம்...சந்திரிகா
கொழும்பு:
இலங்கை இனப்பிரச்சனைக்கு தீர்வு காண விரைவில் புலிகளுடன் பேச்சுவார்த்தை துவக்கப்படும் என இலங்கை அதிபர் தெரிவித்து உள்ளார்.
தனது இரண்டு நாள் அரசு முறை பயணத்தின் போது பிரான்ஸ் அதிபர் ஜாக்ஸ் சிராக் மற்றும் பிரான்ஸ் பிரதமர் லயோனல் ஜோஸபின் ஆகியோரை சந்தித்துபேசினார் இலங்கை அதிபர் சந்திரிகா குமாரதுங்கா.
இலங்கை இனப்பிரச்சனைக்கு நீண்ட கால தீர்வு காண இலங்கை அரசு முயற்சித்து வருகிறது. இதற்கு நார்வே தூதுக்குழுவும் உதவி வருகிறது.
அதன் ஒரு பகுதியாக விரைவில் புலிகளுடன் பேச்சுவார்த்தை நடத்தப்படும் என பிரான்ஸ் அதிபர் மற்றும் பிரான்ஸ் பிரதமரை சந்தித்த போது சந்திரிகாகூறியுள்ளார்.
இச்சந்திப்பின் போது, சர்வதேச தீவிரவாதத்தை எதிர்க்கும் ஐரோப்பிய யூனியன் அமைப்பின் தீர்மானங்களை நிறைவேற்ற பிரான்ஸ் தேவையானநடவடிக்கைகள் எடுக்க வேண்டும் என்றார் சந்திரிகா.
இதனை பிரான்ஸ் அதிபரும் ஏற்றுக் கொண்டார். சந்திரிகாவின் இந்த கோரிக்கைக்கு காரணம் இல்லாமல் இல்லை. பாரீஸில் இருந்து தான் புலிகள்அமைப்பு தங்களது வானொலி ஒளிபரப்பை(புலிகளின் குரல்) மேற்கொண்டு வருகின்றனர்.
சர்வதேச தீவிரவாதத்தை ஒழிக்க பிரான்ஸ் சட்டம் இயற்றினால், புலிகள் அமைப்பு தீவிரவாத இயக்கமாக அறிவிக்கப்படும்.
அதன் பின்னர் அந்த அமைப்பினர் அங்கு செயல்பட முடியாது. முடிவில் தங்கள் வானொலி ஒளிபரப்பை பிரான்ஸில் இருந்து மாற்ற வேண்டி வரும்.
பிரிட்டன் நிறைவேற்றிய தீவிரவாத தடை சட்டத்தினால் பாதிக்கப்பட்ட புலிகள் அமைப்பு தங்கள் தலைமையகத்தை இலங்கைக்கு மாற்றிக் கொண்டதுகுறிப்பிடத்தக்கது.
இவ்வாறு சர்வதேச அளவில் நெருக்குதல் கொடுப்பதன் மூலம் புலிகளை பேச்சுவார்த்தைக்கு இணங்க வைக்க முடியும் என சந்திரிகா கருதுகிறார்.
யு.என்.ஐ.












Click it and Unblock the Notifications