ஜாதி கூட்டணி .. திமுக கூட்டணி குறித்து காங் விமர்சனம்
சென்னை:
திமுக கூட்டணியிலிருந்து மதிமுக விலகி விட்டதால் அக்கூட்டணியில் குழப்பம் ஏற்பட்டுள்ளது. இதுஅக்கூட்டணியின் வெற்றி வாய்ப்பை பாதிக்கும் என்று ர் தமிழக காங்கிரஸ் தலைவர் இளங்கோவன் கூறினார்.
திங்கள்கிழமை செய்தியாளர்களிடம் இளங்கோவன் பேசுகையில், கொள்கை அடிப்படையில் சேராமல் ஜாதிஅடிப்படையிலும், கொள்கை இல்லாமலும் சில கட்சிகள் திமுக கூட்டணியில் சேர்ந்துள்ளன. இதுவேஅக்கூட்டணியில் குழப்பம் ஏற்பட்டுள்ளதற்குக் காரணம்.
மதிமுகவுக்கு முதலிலேயே தொகுதிகள் ஒதுக்கியிருக்க வேண்டும். அப்படியில்லாமல் ஜாதிக் கட்சிகளுக்கு எல்லாம்ஒதுக்கி விட்டு கடைசியாக அவர்களுக்கு சீட் கொடுத்ததே மதிமுக வெளியேற க்கியக் காரணம். இது நியாயமேஇல்லை.
2 நாட்களில் காங்கிரஸ் தொகுதிகள் முடிவாகி விடும். வெற்றி வாய்ப்புள்ள தொகுதிகள் பட்டியலை கூட்டணிக்கட்சி தலைமையிடம் வழங்கியுள்ளோம். விரைவில் வேட்பாளர் பட்டியல் வெளியாகும் என்றார் இளங்கோவன்.