ஜாமீன் கேட்டு ஜான் பாண்டியன் மனு
சென்னை:
வன்முறை வழக்கில் கைதாகியுள்ள தமிழக முன்னேற்ற கழக தலைவர் ஜான்பாண்டியன் ஜாமீன் கோரி மனுதாக்கல்செய்துள்ளார்.
சென்ற வியாழக்கிழமை நடந்த தமிழக சட்டசபை தேர்தலின்போது தி.மு.க.வினரை தாக்கியதாக வழக்கு பதிவுசெய்யப்பட்டு கைது செய்யப்பட்டுள்ள ஜான் பாண்டியன் தன்னை ஜாமீனில் விடுவிக்குமாறு கோரி சென்னைசெஷன்சு நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்துள்ளார்.
தேர்தல் தினத்தன்று ஜான்பாண்டியனும், அவரது ஆதரவாளர்களும் தி.மு.க தேர்தல் அலுவலகத்தை தாக்கியதாகபுகார் கூறப்பட்டது. வாகனங்கள் சேதப்படுத்தப்பட்டதாகவும், 3 பேரை தாக்கியதாகவும் எழும்பூர் தி.மு.க.செயலாளர் போலீசில் புகார் செய்திருந்தார்.
இந்த சம்பவத்தின் போது பரிதி இளம்வழுதியை தாக்குவதற்கும் முயற்சி நடந்ததாக புகாரில் கூறப்பட்டிருந்தது.
இந்த புகாரின் அடிப்படையில் வன்முறை நடந்த இடத்திற்கு வந்த போலீசார் வன்முறையாளர்களிடமிருந்துஅரிவாள், நாட்டு வெடிகுண்டு போன்றவற்றை கைப்பற்றினர்.
இதையடுத்து ஜான்பாண்டியன் மற்றும் அவரது ஆதரவாளர்கள் 49 பேர் கைது செய்யப்பட்டனர். இவர்கள் மீதுசட்டவிரோதமாக கூடியதாகவும், தாக்குதல் நடத்தியதாகவும், பயங்கர ஆயுதங்கள் வைத்திருந்ததாகவும் வழக்குபதிவு செயப்பட்டது.
இந்த வழக்கிலிருந்து தங்களுக்கு ஜாமீன் வழங்கப்பட வேண்டும் என ஜான் பாண்டியன் சென்னை செஷன்சுநீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்துள்ளார்.
அவர் மனுவின் விவரம்:
போலீசார் ஆளும் கட்சிக்கு சாதகமாக செயல்பட்டு எங்கள் மீது வேண்டுமெனவே வழக்கு தொடர்ந்துள்ளனர்.அவர்கள் தான் எங்களை தாக்கினர். நாங்கள் அது பற்றி புகார் கொடுத்தோம். அதை போலீசார் பதிவுசெய்யவில்லை.
ஆளும் கட்சியினர் எங்களை தாக்கிவிட்டு தப்பி விட்டனர். உண்மையாக தாக்குதல் நடத்தியவர்கள் தப்பிவிட்டனர். எனவே, சிறையிலிருக்கும் எங்களை ஜாமீனில் விடுதலை செய்ய வேண்டும்.
எந்த நிபந்தனையையும் ஏற்க தயாராக இருக்கிறோம். விசாரணைக்கு ஒத்துழைக்கவும் தயாராக இருக்கிறோம் எனமனுவில் கூறப்பட்டுள்ளது.
இந்த மனு புதன்கிழமை விசாரணைக்கு வருகிறது.
-
வாட்டி எடுத்த வெயில்! வேலூரில் அதிகபட்சமாக 106°F பதிவு! 15 இடங்களில் செஞ்சுரி! -
பெங்களூருக்கு ஜில் அப்டேட் கொடுத்த வெதர்மேன்! மழை கொட்டப்போகுது.. சென்னை நிலவரம் என்ன? விவரம்! -
வெயிலுக்கு இன்று ‘பிரேக்’.. சென்னை உட்பட பல மாவட்டங்களில் மழை பெய்ய வாய்ப்பு.. வானிலை மையம் அப்டேட்! -
Weather: பலத்த இடி, மின்னல், காற்றுடன் 17 மாவட்டங்களுக்கு கனமழை அலெர்ட்! வானிலை மையம் சொல்வதென்ன? -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன்












Click it and Unblock the Notifications