காஷ்மீரில் சண்டை நிறுத்தம் நீட்டிக்கப்படுமா?

Subscribe to Oneindia Tamil

ஸ்ரீநகர்:

ஜம்மு-காஷ்மீர் மாநிலத்தில் வரும் மே மாதம் 31 ம் தேதியுடன் முடிவடையும் சண்டை நிறுத்தம் மீண்டும்நீட்டிக்கப்படலாம் என்று தெரிகிறது.

மத்திய உள்துறை இணை அமைச்சர் சுவாமி இதுகுறித்து நிருபர்களிடம் கூறுகையில், காஷ்மீர் பிரச்சனைக்குத் தீர்வுகாணும் வகையில், மத்திய அரசு காஷ்மீரில் உள்ள தீவிரவாத இயக்கங்களுடன் பேச்சுவார்த்தை நடத்துவதற்காககே.சி.பந்த் என்பவரை நியமித்துள்ளது.

பந்த் பேச்சுவார்த்தை நடத்தியதில் சில தீவிரவாத இயக்கங்கள் காஷ்மீர் பிரச்சனை தீரும் வகையில் தீவிரவாதஇயக்கங்களுடன் பேச்சுவார்த்தை நடத்தத் தயாராக இருப்பதாகத் தெரிவித்தன.

இதனால்தான் காஷ்மீரில் அமைதி ஏற்படுத்தும் விதத்தில் அறிவிக்கப்பட்ட சண்டை நிறுத்தம் தொடர்ந்து அமலில்இருந்து வருகிறது. சண்டை நிறுத்தத்தை மேலும் நீட்டிக்க மத்திய அரசு திட்டமிட்டுள்ளது என்றார்.

பிரஹ்மா செலானி என்ற ஆராய்ச்சி பேராசிரியர் கூறுகையில், மத்திய அரசு காஷ்மீரில் சண்டை நிறுத்தத்தைநீட்டிக்க வேண்டும் என்று ஏன் நினைத்தது என்று தெரியவில்லை. ஏனெனில் சண்டை நிறுத்தம் மிகப்பெரியஅளவில் தோல்வியைக் கண்டுள்ளது.

சண்டை நிறுத்தம் அமலில் உள்ள இந்த நேரத்தில் காஷ்மீரில் பல வன்முறைச் சம்பவங்கள் நடந்துள்ளன. கடந்த 5மாதங்களாக சண்டை நிறுத்தம் அமலில் உள்ள இந்த நேரத்தில் 432 தீவிரவாதிகள் கொல்லப்பட்டுள்ளனர். ஆனால்அதே நேரம் சண்டை நிறுத்தம் அறிவிக்கப்படுவதற்கு 5 மாதங்களுக்கு முன்பு வரை 847 தீவிரவாதிகள்கொல்லப்பட்டுள்ளனர்.

சண்டை நிறுத்தம் அமலில் உள்ள இந்த 5 மாதங்களில் 228 பாதுகாவலர்கள் தீவிரவாதிகளால்கொல்லப்பட்டுள்ளனர். அதற்கு முந்தைய 5 மாதங்களில் 185 பாதுகாவலர்கள் தீவிரவாதிகளால்கொல்லப்பட்டுள்ளனர்.

இந்த நேரத்தில் தீவிரவாதிகள் தாக்குதல் அதிகரித்து வருவது குறிப்பிடத்தக்கது. சண்டை நிறுத்தம் அமலில் உள்ளகடந்த 5 மாதங்களில் 418 அப்பாவிப் பொதுமக்கள் கொல்லப்பட்டுள்ளனர். அதற்கு 5 மாதங்களுக்கு முன்பு வரை381 தீவிரவாதிகள் கொல்லப்பட்டனர்.

சண்டை நிறுத்தம் அமலில் உள்ள இந்த நேரத்தில் கே.சி.பந்த்தின் உதவியுடன் அமைதிப் பேச்சுவார்த்தையைஆரம்பிக்கும் முயற்சியில் இறங்கியுள்ளது மத்திய அரசு.

மேலும் சண்டை நிறுத்தத்தை நீட்டிக்கவே மத்திய அரசு விரும்புகிறது. மக்கள் ஜனநாயக முன்னணி கட்சியின்தலைவர் சபீர் ஷா கூறுகையில், நாங்கள் அமைதிப் பேச்சு வார்த்தையைத் தொடங்க ஒத்துழைப்பு கொடுத்தால்கண்டிப்பாக சண்டை நிறுத்தத்தை நீட்டிக்க வேண்டி வரும் என்றார்.

தற்போது ஸ்ரீநகர் சென்றுள்ள இரண்டு அமைச்சர்கள் டெல்லி திரும்பிய பின் நடக்கும் அமைச்சரவைக் கூட்டத்தில்சண்டை நிறுத்தத்தை நீட்டிப்பதா? வேண்டாமா? என்பது குறித்து இறுதி முடிவு எடுக்கப்படும்.

யு.என்.ஐ.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+